News Uncategorized

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்




அதென்ன கர்ப்பப்பை இறக்கம்? கர்ப்பப்பையானது இடுப்புப் பகுதிக்குள் தசைகள், திசுக்கள் மற்றும் தசைநார்களுடன் இணைந்து இருக்கும். கர்ப்பப்பை அது இருக்க வேண்டிய இடத்திலிருந்து இறங்கி, வெஜைனல் பாதைக்கு வரும் நிலையைத்தான் கர்ப்பப்பை இறக்கம் அல்லது மடி இறக்கம் என்று சொல்கிறோம்.

 கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள் அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம். சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கும் மற்றும் பிரசவ கால அஜாக்கிரதையாக இருப்பதால் பெரும் பாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

கருப்பை என்பது ஒரு உள்ளுறுப் பாகும். இது பெரும்பாலும் வெளியே வருவதில்லை. கருப்பையை முக்கிய தசைகள் கீழிருந்து தாங்கிக் கொண்டு இருக்கின்றன. க ருப்பை சரியான இடத்தில் பத்திரமாக இருக்கும் வகையில், பல்வேறு அரண்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ளன.




அறிகுறிகள்:

பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும்.  போதுமான அளவு ஒய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும். பெரும்பாலும் மெனோபாஸ் வயதில் தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும் அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும்.

கர்ப்­பப்பை இறக்கம் உள்­ள­வர்­களில் யோனி­வாசல் பகு­தியில் ஒரு வீக்கம் போன்று காணப்­படும். இதன்­போது வலி ஏற்­ப­டு­வ­தில்லை. அத்­துடன் இந்த வீக்கம் காலையில் எழுந்­த­வுடன் மிகவும் குறை­வா­கவும் மாலை வேளை­க­ளிலும் கூடி­ய­ளவும் வேலை செய்­கின்ற வேளை­க­ளிலும் இது தெளி­வாகத் தெரியும். சில­வே­ளை­களில் இந்தக் கர்ப்­பப்பை இறக்கப் பகு­தியில் புண் போன்று ஏற்­பட்டு இரத்தம் அல்­லது திரவம் போன்­றன வடிதல் ஏற்­படும். ஆனால் இவை எதுவும் புற்­று­நோய்கள் அல்ல. சிறு­நீர்ப்­பையும் சேர்ந்து இறங்­கி­யுள்­ள­வர்­களில், சிறுநீர் கழிப்­பதில் சிக்­கல்கள், அடிக்­கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, இருமும் போது தும்மும் போதும் சிறுநீர் கட்­டுப்­பா­டின்றி வெளி­யே­றுதல் போன்­றன ஏற்­படும். மேலும் மலக்­குடல் பகுதி இறங்­கி­யுள்­ள­வர்­களில் மலங்­க­ழிப்­பதில் கடி­னங்கள், மலம் பூர­ண­மாகக் கழிக்­கப்­ப­டாமை போன்ற உணர்­வுகள் ஏற்­படும்.

பல காரணங்களால், கருப்பையை தாங்கிக்கொண்டிருக்கும் தசைகள் தளர்வடைந்தாலோ, கருப்பை அரண்கள் வலுவிழந்தாலோ, உள்ளுறுப்பாக இருக்கும் கருப்பை கொ ஞ்சம் கொஞ்சமாக கீழிறங்குகிறது.இதுவே கருப்பை இறக்கம் எனப்படும். இது நான்கு வகைகளில் அமைகிறது. அதாவது,

    1. எப்போதாவது முக்கும் போதும், இரும்பும் போதும், தும்பும் போதும் சிறிதளவு அடி இறங்குவது.

    2. மற்றொன்று நாக்கின் நுனி போல எப்போதுமே ஓர் சதைப் பகுதி அடியில் தோன்றும். இந்த நிலையில் படுத்துக் கொள்ளும் போது அது உள்ளே சென்று விடும்.

    3. மூன்றாவதாக, சற்று வெளியில் தொங்கும் சதையானது, எப்போதுமே வெளியே தொங்கியவாறு இருத்தல். இந்த நிலையில், சிறு நீர் கழிக்கவும் சிக்கல் ஏற்படும்.

    4. நான்காவது நிலைதான் மிகவும் மோசமான நிலையாகும். இதில், கருப்பை வெளியே தொங்கும். இதனால் பெண்களுக்கு பல சிரமங்கள் ஏற்படும்.

இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் போது, பெண்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லது.

முதல் கட்டத்திலேயே பெண்கள் மருத்துவரை அணுகுவதால், சில தகுந்த உடற்பயிற்சிகள் மூலமாக சரி செய்யலாம் என்பது ஆறுதலான விஷயமாகும்.




முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும். அடுத்த 2 நிலை இறக்கமும்  சற்றே சிக்கலானது. இந்நிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது நல்லது., முதல் நிலை பாதிப்பாக இருப்பின் ஸ்லிங் எனப்படுகிற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது, இவையெல்லாம் பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள். அதிக வெள்ளைப்படுதல் கர்ப்பப்பையை தாக்கும்: பெண்கள் கவனக் குறைவாக இருந்தால் கர்ப்பப்பையை இழக்க நேரிடும்.

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்றும் சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விடுவதுண்டு.

இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறிவிடும். கர்ப்பப்பையை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.




இந்த வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். வியாதியின் குணம் நாள்பட, நாள்பட நிறமும் மாறுபடும். எனவே வெள்ளைப்படுதல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி நோயின் தன்மையை அறிந்து கொள்வது நல்லது.

45 வயதைக் தொடும் பெண்கள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள்; பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டுவலி, கால்வலி, மற்றும் உடல்நல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

45 வயதை தொடும் பெண்களுக்கு வைட்டமின் பி 12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும்.

ஆரோக்கியமான உணவு பழக்கம் :

அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் உள்ள கானாங்கெளுத்தி மற்றும் முட்டைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி மற்றொரு அவசியமான வைட்டமின் ஆகும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, ஏனெனில் இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, சால்மன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் இச்சத்துக்களை பெறலாம்.

தினமும் காலையில் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டி, யின் அளவை அதிகரிக்கும். வைட்டமின் Q 10, 45 வயதான பெண்கள் அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய வைட்டமின் ஆனது மீன், கல்லீரல், நவதானியங்கள் போன்றவற்றில் அதிகம் இருக்கும். இறுதி மாதவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் இரத்தசோகைக்கு உள்ளாவார்கள். இந்நிலையை தவிர்க்க கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஏ, நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், போன்றவற்றில் அதிகம் இருக்கும் வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் நரம்பு மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!