Beauty Tips Entertainment News

கோடைக்கால பிரச்சினையில் இருந்து நம்மை விடுவிக்க என்ன செய்யலாம்?

கோடை காலம் வந்துவிட்டது- உணவில் செய்யவேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்..!!

 




கோடை கால  ஆரம்பிக்கும் முன்பே வியர்வை, களைப்பு, தலைவலி என லைட்டாக அதனை உணர்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைசி வாரமும், மார்ச் மாதத்தில் துவக்க நாட்களும் கோடைக் காலத்தின் ஆரம்பமாக கருதப்படுகிறது. கோடை வெயில் அதிகமாக இருந்ததால் தாகமும் சோர்வும் அதிகரித்து காணப்படும். காற்றின் வெப்பநிலை உயரும் பட்சத்தில், ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். வெப்பம் அதிகரிக்கும் போது பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அவற்றைத் தடுக்க சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதை உணவுப் பழக்கத்தில் இருந்து கொண்டுவர வேண்டும். இந்த கோடைக்கால பிரச்சனைகளை வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டு எளிமையாக சரியாக்கி கொள்ளலாம் வாங்க ..

 




தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்

வெயில் காலங்களில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க, நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம். ஆனால் நம்மில் பலருக்கும் வெயிலில் சென்றவுடன் குளிர்ந்த நீரை குடிக்கும் பழக்கம் உள்ளது. உடல் சூட்டை தணிக்க பலர் இப்படி குளிர்ந்த நீரை குடிப்பார்கள். ஆனால் அது தொண்டை புண் மற்றும் செரிமான அமைப்பை பாதிக்கும். எனவே சராசரி வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பதை பழமாக்கிக் கொள்ளுங்கள். வேண்டுமானால் மண்பானை தண்ணீரை குடிக்கலாம். ஆனால் மருத்துவர்கள் கோடைக் காலத்தின் போது ஏற்படும் அதீத தாகத்துக்கு வெந்நீர் குடிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.

 




காபி குடிப்பதை குறைத்துவிடுங்கள்

கோடைக் காலத்தின் போது காஃபின் உள்ள பொருட்களை பருகுவது அல்லது சாப்பிடுவது உடல்நலனுக்கு அவ்வளவு நல்லது கிடையாது. அதிலும், உங்களுக்கு ஏற்கனவே நீரிழப்பு ஏற்படும் பிரச்னை இருந்தால், அடிக்கடி காபி குடிப்பதை தவிர்த்திடுங்கள். காஃபின் உள்ள பொருட்களை சாப்பிடும் போது, உடலில் எளிதாகவே நீரிழிப்பு ஏற்பட்டுவிட்டும். அதுவும் கோடைக் காலங்களில் அதற்கான வாய்ப்பு மேலும் அதிகம். இந்த பிரச்னையை தடுக்க டீ, காபி அதிகம் பருக வேண்டும். எதையும் அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்.

சர்க்கரை சேர்த்து பழச்சாறு வேண்டாம்

மற்ற காலங்களில் பழங்களையும் பழச்சாறுகளையும் ஏறடுத்து கூட பார்க்க மாட்டோம். ஆனால் கோடைக்காலம் வந்துவிட்டால் கடைசியில் வரிசைக் கட்டி நின்று பழச்சாறு குடிப்போம். அதற்கு காரணம் ஜஸ் கட்டிகளும் இனிப்பான சக்கரையும் தான். பொதுவாக பழச்சாறுகளில் காணப்படும் சக்கரை உங்களுக்கு ஆற்றலை தருகிறது. ஆனால் இது ஆரோக்கியத்துக்கு அவ்வளவு நல்லது கிடையாது. எனவே சர்க்கரையைப் பயன்படுத்தாமல் சாறுகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துங்கள்.இயற்கை பானங்களான நன்னாரி சர்பத் வெட்டிவேர் போட்ட தண்ணீர் என்று அருந்திட தாகம் தீர்ந்தது உடலுக்கு குளிர்ச்சி தரும்.

பழங்கள் எப்போதும் பச்சையாக சாப்பிடுவது நல்லது. அதேபோல நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஜூஸுக்கு பதிலாக தண்ணீர் குடிப்பது நல்லது. வெள்ளரி, தர்பூசணி என சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்களை எடுத்துக் கொள்ளலாம்.




இறைச்சி உணவுகள் வேண்டாம்

இந்த கோடையில் முட்டை, மீன், கோழிக்கறி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டாம். இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். முடிந்தவரை கொழுப்பு குறைந்த உணவுகளை உண்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. கோடை காலத்தில் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதைவிட மோர் மிகவும் சிறந்தது. இதனுடன் அவ்வப்போது இளநீர், ஐஸ் மற்றும் சக்கரை சேர்க்காத எலுமிச்சைச் சாறு போன்றவற்றையும் பருகி வரலாம்.

*ஓமம், கசகசா இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து பின் அரைத்து, உச்சந்தலையில் அழுத்தி தேய்த்து சிறிது ஊறிய பின் கேசத்தை அலச உடல்சூடு தணிந்து, கண் சிவப்பு குறையும்.

*1டீஸ்பூன் இலவங்கத்தை கல் உப்புடன் பொடித்து அதை நெற்றியில் பற்றுபோட வெயிலினால் வரும் தலைவலி சரியாகிடும்.

*ஜவ்வரிசியை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக்கியோ, அல்லது முழுதாகவோ கஞ்சி வைத்து அருந்த உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.




*உடல்சூடு அதிகமானால் ஜுரம், வாந்தி பேதி, உடல் நீர் அளவு குறைதல் போன்றவை ஏற்படும். இதனைத் தவிர்க்க தினம் ஒரு பச்சடி, கீரை சூப், கீரை கடையல், பழ வகைகள், ஜுஸ் என சாப்பிட உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன் மலச்சிக்கல் இல்லாமல் வைத்திருக்க உதவும்.

*பித்தம் போக்கும் புதினா, இஞ்சி, கொத்தமல்லி, தனியாவை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள சத்துக்கள் குறையாது கோடைக்கால நோய்கள் வராது காக்கும்.

*எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராது போல் இருந்தால் ஒரு கப் தண்ணீரில் 2, 3 எலுமிச்சை இலைகளை கசக்கி பின் அருந்த மணமாக இருப்பதுடன் தாகமும் தீரும்.

*நான்கு செம்பருத்தி பூக்களின் இதழ்களை பொடியாக நறுக்கி தயிர் சேர்த்து பச்சடியாக செய்து சாப்பிட வெயிலினால் ஏற்படும் நீர்க்கடுப்பு, எரிச்சல் இருக்காது.

*மஞ்சள் வேப்பிலையை அரைத்து வேனல் கட்டி மீது போட சீக்கிரம் குணமாகும்.

*சருமம் உலராமல் இருக்க பழங்கள், கீரைகள், பழச்சாறு அருந்த தோல் பளபளப்பை தந்து ஆரோக்யமாக பாதுகாக்கும்.

*வெளியில் போகும் போது சன்ஸ்கிரீன் லோஷன் போட்டுக் கொண்டால் சருமம் பொலிவோடு இருக்கும்.

*வெளியில் போகும் போது தலைக்கு தொப்பி, கண்ணுக்கு சன் கிளாஸ் என பாதுகாப்பாக செல்லலாம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!