ஷேவிங் செய்த பிறகு எரிச்சல் இருக்கா?
வழ வழ முகத்தை ஆண்களும் விரும்புவதால் தான் நேரத்தையும் பொருட்படுத்தாமல் ஷேவிங் செய்கிறார்கள். ஆனால் அதற்கு பிந்தைய எரிச்சல் அவர்களை அவதிக்குள்ளாக்கி விடுகிறது. ஷேவிங் செய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அதை சரியான முறையில் பின்பற்றி வந்தால் ஷேவிங் பிறகு எரிச்சல், அரிப்பு, சருமத்தடிப்பு, புண் போன்றவை இல்லாமல் அழகான சருமத்தை பெறலாம். ஷேவிங் செய்த பிறகு எரிச்சலை எப்படி தவிர்ப்பது என்பதை தான் இங்கு பார்க்க போகிறோம்.
ஆண்கள் அவ்வபோது அல்லது தினமும் ஷேவிங் செய்வதுண்டு. பெரும்பாலான ஆண்கள் ஷேவிங் செய்த பிறகு அப்படியே சருமத்தை விட்டுவிடுவதுண்டு. இதனால் துளைகள் விரிவடையக்கூடும். இந்த நேரத்தில் ஆண்டி செப்டிக் தோல் எரிச்சலை குறைக்க கூடும். வெட்டுக்களில் இருந்து தொற்றுநோயை தடுக்கிறது.
-
ஷேவிங் செய்வதற்கு ஷவர் ஜெல் அல்லது சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். சருமத்துக்கு ஏற்ற ஷேவிங் க்ரீம், ஜெல் போன்றவற்றை தேர்ந்தெடுக்கவும்.
-
முடி வளர்ச்சியின் திசையில் ஷேவ் செய்தால் வளர்ச்சி பிரச்சனை இருக்காது. மேலும் எரிச்சலும் இல்லாமல் பார்த்துகொள்ளலாம். சரியான திசையில் ஷேவிங் செய்வதை உறுதி செய்யுங்கள். அதிக அழுத்தத்தோடு ஷேவ் செய்ய வேண்டாம்.
-
ஈரப்பதத்தை தக்க வைத்துகொள்ள ஷேவிங் செய்த பிறகு பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய்பயன்படுத்தலாம். பிறகு முகத்தை கழுவி எடுக்கவும். இது துளைகளை மூடுவதற்கு உதவக்கூடும்.
-
கற்றாழை ஜெல் கொண்டும் சருமத்தை ஈரப்படுத்தலாம். . சருமம் ஈரப்பதமாகவும், நீரேற்றமாகவும் இருப்பதை உறுதி செய்தால் ஷேவிங் செய்த பிறகு எரிச்சலை ஓரளவு சரி செய்யலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1