Cinema Entertainment

நட்சத்திர ஜோடிகள்




நடிகர்கள் மஞ்சிமா மோகன் – கௌதம் கார்த்திக் திருமணம் சென்னையில் நவம்பர் 28ஆம் தேதி  திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த 2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனாக இவர், ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதே போல, கடந்த 2016-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். ‘களத்தில் சந்திப்போம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவரது நடிப்பில் அக்டோபர் 31 லேடிஸ் நைட் என்ற படம் தயாராகி வருகிறது.




கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் கடந்த 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான ‘தேவராட்டம்’ படத்திலிருந்தே காதலித்ததாக கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் 23-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதம் கார்த்திக் தான் முதலில் தனது காதலை வெளிப்படுத்துவதாகவும், நேரம் கேட்டு பின் யோசித்து மஞ்சிமா மோகன் அவருக்கு பதில் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சரியான நபரை நீங்கள் வாழ்வில் சந்தித்தால் அவர் உங்களை முழுமையடையச் செய்வார் என என் அப்பா கூறுவார். அப்படி நான் வாழ்வில் சந்தித்த நபர் தான் மஞ்சிமா.




தேவராட்டம் படத்தில் பணிபுரியும் போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகு எங்கள் உறவு அடுத்த தளத்துக்குச் சென்றது. மஞ்சிமா அழகானவர் என்பதோடு, நான் சோர்வாக உணரும் போதெல்லாம் என்னை மீட்டெடுக்கிறார்” என்றார்.

   இந்நிலையில், இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர் நடைபெற்ற திருமணத்தில் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

3 வயதில் சினிமா எண்ட்ரி முதல் காதல் திருமணம் வரை… மஞ்சிமா மோகன் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரசிய பின்னணி

 

நடிகை மஞ்சிமா மோகனுக்கும், நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், அவரைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.




நடிகை மஞ்சிமா மோகன் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆவார். இவருக்கு இவரது பெற்றோர் வைத்த பெயர் பிரியதர்ஷினி, பின்னர் இவரது தாத்தா தான் மஞ்சிமா என்ற பெயரை இவருக்கு சூட்டி உள்ளார். இவருடைய தந்தை மோகன் ஒரு ஒளிப்பதிவாளர், இவரது தாய் கிரிஜா ஒரு நடன கலைஞர் ஆவார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் தான் செய்து கொண்டனர்.

 பெற்றோர் இருவரும் சினிமாவில் பணியாற்றியவர்கள் என்பதால், அவர்களுடன் ஷூட்டிங்கிற்கு சென்ற மஞ்சிமாவுக்கும் சினிமாவின் மீது ஆசை வந்துவிட்டது. நடிகை மஞ்சிமா 3 வயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விட்டார். கலியூஞ்சல் என்கிற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா, 2000-ம் ஆண்டு சூப்பர் கிட்ஸ் என்கிற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.




அந்த ஷோ மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதால், இவருக்கு இளம் வயதிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. மறுபுறம் பட வாய்ப்புகளும் குவிய, தொடர்ந்து நடித்து வந்த மஞ்சிமா, படிப்பிலும் செம்ம ஸ்மார்ட்டாம். கேரளாவில் உள்ள நிர்மலா பவன் என்கிற பள்ளியில் தான் இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். பின்னர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தான் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார் மஞ்சிமா.

சென்னையில் படித்ததால் தமிழில் நன்கு பேசத் தெரிந்த மஞ்சிமாவுக்கு 2015-ம் ஆண்டு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஒரு வடக்கன் செல்பி என்ற மலையாள படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சிமா. இப்படத்தின் வெற்றிக்கு பின் தமிழில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார் மஞ்சிமா.




சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாவது அவ்வளவு எளிதல்ல. அந்த அரிய வாய்ப்பு மஞ்சிமாவுக்கு கிடைத்தாலும், அப்படத்துக்கு பின்னர் இவரது காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அந்த சமயத்தில் படங்களில் நடிக்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த மஞ்சிமா, உடல் எடை அதிகரித்து சற்று குண்டானார். அந்த சமயத்தில் தான் இவருக்கு PCOD பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது.

பின்னர் செல்லும் இடமெல்லாம் இவரது உடல் எடை அதிகரித்ததை பற்றி பலரும் கேட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான மஞ்சிமா, அதிலிருந்து மீண்டு வர மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். அப்படி அவர் ரீ-என்ட்ரி கொடுத்த படம் தான் தேவராட்டம். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சிமா. இப்படம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது.

ஏனெனில் இப்படத்தில் நடித்த போது தான் கவுதம் கார்த்திகிற்கும், மஞ்சிமா மோகனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த காதல் கைகூடும் நேரமும் தற்போது வந்துவிட்டது. நட்சத்திர ஜோடி லிஸ்ட்டில் இணைந்த இவர்களுக்கு வாழ்த்துக்களும் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!