gowri panchangam Sprituality

சனி பெயர்ச்சி பலன் 2023:விடிவுகாலம் வரப்போகுது.. நிம்மதி பெருமூச்சு விடும் ராசிக்காரர்

னி பெயர்ச்சி பலன் 2023: விரிவான பலன்களும், பரிகாரங்களும்

மிதுன ராசி அன்பர்களே!

விடிவுகாலம் வரப்போகுது.. நிம்மதி பெருமூச்சு விடும் ராசிக்காரர் நீங்கதான்!





சனி பெயர்ச்சி 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழப்போகிறது. இந்த கிரக பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் துன்பம் தொலைந்தது என்று நிம்மதி பெருமூச்சு விடப்போகிறார்கள். தொட்டது துலங்க போகிறது. அள்ளித் தரப்போகிறார் சனிபகவான்.

சனி பகவான் கடந்த 5 ஆண்டு காலமாக மிதுன ராசிக்காரர்களை படாத பாடு படுத்தி வந்தார். கண்டச் சனியால் கவலைப்பட்டீர்கள். அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டீர்கள். இனி உங்களின் பிரச்சனைகளுக்கு விடிவு காலம் வரப்போகிறது. என்னடா வாழ்க்கை என்று வெறுத்துப்போய் இருக்கும் உங்களுக்கு சனிபகவான் இனி மன நிம்மதியைத் தரப்போகிறார். வரும் ஜனவரி மாதம் முதல் சனிபகவானின் பயணம் ஒன்பதாம் வீட்டிற்கு வரப்போகிறது. பாக்ய சனி பலன்களை அள்ளித் தரப்போகிறார் என்பதால் இப்போதே அனுபவிக்க தயாராகுங்கள்.

காதல்/ திருமணம்

கஷ்டங்கள் நீங்கும் அஷ்டம சனி காலத்தில் நிறைய அவமானங்களை பட்டு இருப்பீர்கள். கணவன் மனைவி இடையேயான பிரிவினை ஏற்பட்டிருக்கும்.இனி உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைகள், கஷ்டங்கள் முடியப்போகும் காலம் வந்து விட்டது. இன்னும் சில மாதங்களில் அஷ்டமத்து சனியின் பிடியில் இருந்து விடுபட போகிறார்கள். பயம் பதற்றம் நீங்க போகிறது. கணவன் மனைவி பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.வெற்றிகள் தேடி வரும் திருமண முயற்சிகள் கை கூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். காதலிப்பவர்களுக்கு கல்யாண யோகம் தேடி வரும்.

தொழில்




பாக்ய சனி நிறைய பதவி உயர்வை தேடி தரப்போகிறார். சனி பகவான் கொடுத்த படிப்பினைகள் உங்களுக்கு இனி கை கொடுக்கும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடப்போகிறீர்கள். இனி உங்களுக்கு பொற்காலம் தான்.

நிதி நிலைமை

நிதிப் பிரச்சினை தீரும் கடந்த சில ஆண்டுகாலமாகவே பணப்பிரச்சினை, கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வந்த உங்களுடைய பொருளாதார நிலைமை சீரடையும் போகிறது. பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் இனி உங்களைப் புரிந்து கொள்வார்கள். கடன் பிரச்சினையால் சிலர் தற்கொலை வரை சென்று மீண்டு இருப்பார்கள். இனி உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள். சில மாதங்களில் குரு பார்வையால் நல்ல விஷயங்கள் நடந்திருக்கும் எனவே இனி கவலைப்பட வேண்டாம் கஷ்டங்களில் இருந்து கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது.

உடல் ஆரோக்கியத்தில்

ஒரு சிலரோ நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவை சந்தித்து இருப்பீர்கள்.  இனி உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். . அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.  குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும். உறவுகளால் ஏற்பட்ட பகைகள் நீங்கும்.

மாணவர்கள்




உடல் ஆரோக்கியம் பள்ளி மாணவர்களுக்கு இனி பாடங்கள் புரியும்.. படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பரிகாரங்கள்

  • சனிக்கிழமை நாய்,காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்.

  • மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள்.

  • அருகில் உள்ள சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி பகவானை தரிசனம் செய்து வாருங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!