தேவையான பொருட்கள்:
மைதா -1 கப்
சர்க்கரை-1 கப்
ஏலக்காய் -2
தயிர்- ¼ கப்
சோடா உப்பு- ¼ ஸ்பூன்
நெய்-1 ஸ்பூன்
உப்பு -1 சிட்டிகை
செய்முறை விளக்கம்:
முதலில் சர்க்கரையில் இருந்து 3 ஸ்பூன் மட்டும் எடுத்து ஏலக்காய் விதைகளையும் சேர்த்து மிக்ஸியில் பவுடர் போல் அரைத்துக் கொள்ளவும்.
-
பின்பு மைதா, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை பவுடர், ஒரு ஸ்பூன் நெய், தயிர், சோடா உப்பு ஆகிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கிளறி மிருதுவாக மாவு வரும்வரை பிசைந்து வைத்துக் கொள்ளவும். .
-
அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற விட்டால் நன்றாக இருக்கும்
சர்க்கரைப் பாகு
-
மீதமுள்ள சர்க்கரையில் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறு கம்பி பதம் வரும் வரை மட்டும் கொதிக்க விட்டால் போதுமானது.
பன் தயார் செய்தல்:
-
எண்ணையை மிதமான சூட்டில் வைத்து மாவுகளை சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
அனைத்து பக்கமும் சிவந்தவுடன் பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்தால் சுவையான பால்பன் தயார்.
டிப்ஸ்:
-
சர்க்கரைப்பாகு பிசுபிசுப்பு இருந்தால் போதுமானது. ( இரண்டு விரல்களில் நடுவில் வைத்து பார்த்தால் பிசுபிசுப்பு போல் தெரியும் அது இருந்தாலே போதுமானது)
-
மாவை கண்டிப்பாக அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்தால் மிருதுவாக இருக்கும்.
-
எண்ணெயயில் பொரிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து பொரிதல் வேண்டும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1