kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 12

12

 

 

” என்னை ஏன் திருமணம் செய்தீர்கள் மகி ? ” கேட்டவளை ஆச்சரியமாக பார்த்தான் மகிபாலன்.

 

”  இது என்ன கேள்வி  மிருதுஉன்னை எனக்கு பிடித்திருக்கிறது ” 

 

” என்னைய்யாபைத்தியம் போல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறேன் . என்னை உங்களுக்கு பிடித்திருக்கிறதாநிஜமாகத்தான் சொல்கிறீர்களா ? ” 

 




”  யார் வந்து உன்னிடம் என்ன சொன்னார்கள் ? ” மகிபாலனின் கண்கள் கூர்மையாக அவள் மேல் படிந்தது.

 

யாரும் சொல்லவில்லை .எனக்காகவே தோன்றியதுதான் .இதுதானே உண்மை ” 

 

மகிபாலன் தன் எதிரே நின்று கொண்டிருந்த அவள் இடையில் தன் இரு கைகளையும் கொடுத்து அவளை தூக்கி தன்னருகே அமர்த்திக் கொண்டான்.

 

” உன்னுடைய சந்தேகங்களை எல்லாம் இப்போது கேள் குட்டி .அதற்குமுன் உனக்கு ஒன்றை நினைவு படுத்தி விடுகிறேன் .இன்று நம் இருவருக்கும் முதல் இரவு .இதோ பார்த்தாயா இந்த அறை எவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறதுஇங்கே பழங்கள் இருக்கிறதுஅதோ இனிப்புகள்பால் எல்லாமே இருக்கிறது .கட்டிலின் மேலே பூ அலங்காரங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது …” சொன்னபடி கட்டில் மேல் குவிந்து கிடந்த மல்லிகை மலர்களை அள்ளி  மிருதுளாவின் தலைமேல் மழையாக வழிய விட்டான்.

 

” ம்ம்  எவ்வளவு வாசம் . அப்படியே மயக்குகிறது இல்லை …?” 

 

மகி என்னை கேட்கச் சொல்லிவிட்டு நீங்கள் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறீர்களே ” சிணுங்கினாள் மிருதுளா.

 

வேறு ஒன்றும் பேசவில்லை குட்டி. நம் முதலிரவு அறை அலங்காரத்தை உனக்கு காட்டினேன் அவ்வளவுதான் .இனி நீ கேள் ” 

 

” அப்போதே கேட்டேனே என்னை ஏன் கல்யாணம் …? ” மிருதுளாவின் வார்த்தைகள் பாதியில் திக்கின . காரணம் மகிபாலனின் ஆட்காட்டி விரல் அவள் உச்சி தொட்டு புருவம் இமை மூக்கு கன்னம் என ஒவ்வொரு இடமாக தத்தித்தத்தி நகர்ந்து கொண்டிருந்தது.

 

ம் …” தன் செயலை நிறுத்தாமல் பேச்சிற்கு அவளை தூண்டினான்.

 

” போங்க மகி நீங்க இப்படி செய்தால் என்னால் பேச முடியாது ” 

 

” ஏய் நான் என்னடா செய்கிறேன் . சும்மா லேசாக உன் கன்னம் நெற்றி என்று தொட்டு பார்த்தேன். இத்தனை நாட்களாக இவற்றையெல்லாம் தள்ளி இருந்து  ஏக்கமாக பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன் தெரியுமாஇப்போது என் நேரம் .நீ என்னை தடுக்கவே முடியாது குட்டி .நீ பேசிக்கொண்டே இருப்பாயாம்நான் என் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டே இருப்பேனாம் ” சொன்னவனின்  விரல் மெல்ல மெல்ல மிருதுளாவின் முகம் முடித்து கீழிறங்க துவங்கியது.

 

மிருதுளா வேகமாக அவன் விரல் பற்றி தள்ளினாள்.”  நீங்கள் ஒழுங்காக இல்லாவிட்டால் நான் இந்த அறையிலிருந்து வெளியே போய் என் மாடி அறையில் படுத்துக்கொள்வேன் ” செல்லமாய் மிரட்டினாள்.

 




” ஐயையோ வேண்டாம் வேண்டாம் நான் சமர்த்து பிள்ளை ” ஆட்காட்டி விரலை  தன் இதழ் மேல்  வைத்துக்கொண்டு கைகட்டி அமைதியாக அமர்ந்துகொண்டான் மகிபாலன்.

 

மிருதுளா பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ” என்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி என் அப்பா உங்களிடம் கேட்டுக் கொண்டாரா  மகி ? ” என்றாள

 

இந்தக் கேள்வியின் உள்ளர்த்தம் என்ன மிருது ? ” 

 

” உங்களுக்கு புரியவில்லையா ? ” 

 

” புரிகிறது அதனை உன் வாயால் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன்.உன் அப்பாவின் கட்டாயத்தின் பெயரில் உன்னை மணமுடிக்க சம்மதித்தேனா என்று கேட்கிறாய் அப்படித்தானே ? ” 

 

” என் தவிப்பு உங்களுக்கு புரிகிறது இல்லையா மகி ? ” 

 

மகிபாலன் தலையாட்டிக் கொண்டான் .” வேறு ஒன்றும் செய்யவில்லை மிருது சும்மா கொஞ்ச நேரம் இப்படி உன்னை அணைத்துக் கொள்கிறேன் ” அவளிடம் அனுமதி கேட்டு விட்டு அவள் தோள் பற்றி தன் மார்பில் சரித்துக் கொண்டான். மெல்ல அவள் தலையை வருடி விட்டபடி பேசத் துவங்கினான்.

 

” உன்னை முதன் முதலாக பார்த்த நாளிலிருந்தே எனக்கு உன்னை பிடிக்கும் குட்டி.” 

 

” சும்மா எதையாவது சொல்லாதீர்கள் மகி .நாம் முதன்முதலில் பார்த்துக் கொண்டபோது உங்களுக்கு 13 வயது இருக்கலாம். எனக்கு ஐந்து ஆறு என்று நினைக்கிறேன் .அப்போதேவா ? ” 

 

‘ என்ன அப்போதேவா…?  அந்த வயதிலேயே காதலா என்று கேட்கிறாயாஇல்லை அப்போது இந்த காதல் எல்லாம் அறியாத பருவம் நம் இருவருக்குமே .உன் அப்பா என்னை முதன்முதலாக இந்த வீட்டிற்கு அழைத்து வந்தபோது உன் அம்மா அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் .எனக்கு கேட்கக்கூடாது என்று சிறிய குரலில் கொஞ்சம் தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் .என்னை வீட்டில் வைத்துக் கொள்ளும் விஷயம் தான் என்று உணர்ந்துகொண்டு உன் அம்மாவின் மறுப்பிற்கு கொஞ்சம் அவமானப்பட்டு தலைகுனிந்து நின்றிருந்தேன் .வீட்டிற்குள் அங்குமிங்கும் துறுதுறுப்பாக  ஓடி விளையாடிக் கொண்டிருந்த நீ ஏதோ ஒரு வகையில் என்னை கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தாய்.

 

என் எதிர்காலம் கேள்விக்குறியாக நின்றுகொண்டிருந்த அந்த இக்கட்டான நிலையிலும் எல்லாவற்றையும் உதறிவிட்டு உன்னுடன் சேர்ந்து ஓடி விளையாடத் தோன்றியது .அது அன்றைய நம்முடைய வயதிற்கு ஏற்ற மனநிலை .இந்த மனநிலை வருடங்கள் ஏற ஏற நம் வயதுக்கு ஏற்றபடி மாறிக்கொண்டே வந்தது .உனக்கு சைக்கிள் பழகிக்கொடுக்க ,பாடம் சொல்லிக்கொடுக்க கடைக்கு  கூட்டிப்போக என்று ஏதாவது ஒரு காரணத்தோடு உன்னுடனேயே இருந்தேன்.

 

இவை எல்லாம் என்னுடைய பள்ளிப் படிப்பு முடியும் வரை தான. அதன் பிறகு வீட்டில் வயது பெண்கள் இருக்கிறார்கள் என்ற காரணம் சொல்லி என்னை உன் அம்மா ஹாஸ்டலில் சேர்க்க வைத்தார் .முதலில் மாதம் ஒருமுறை வீட்டிற்கு வந்தவன் பிறகு விசேஷங்களின் போது மட்டும் வந்தால் போதும் என்று கட்டுப்படுத்தப்பட்டேன் .

 

” அம்மாவாவாலா ? ”  கொஞ்சம் கோபத்துடன் கேட்டவளை முதுகு தட்டி சமாதானம் செய்தவன் தொடர்ந்தான்.

 

” நாம் பார்த்துக் கொள்வது அபூர்வமாகி நீ என் கண் பார்வை தாண்டி பெரிய பெண்ணாக வளர்ந்துகொண்டே போனாய் .ஏதாவது சொந்தங்கள் வீட்டு விசேசங்களின் போது அலங்காரத்துடன் உன்னை பார்க்கையில் எல்லாம் என் மனம் படபடக்கும் .அப்போதே உன்னை அள்ளி அணைத்துக் கொள்ள தோன்றும் .என் அருகில் வந்து ஒரு வார்த்தையாவது பேச மாட்டாயா என்று ஏங்கி இருக்கிறேன். இந்த நேரங்களில்தான் உன் மீது எனக்கு காதல் என்பது எனக்கு புரிந்தது.

 

ஆனால் அந்த காதலை என்னால் வெளிப்படுத்த முடியாது .நீ நான் எட்டமுடியாத அளவு உயரத்தில் இருந்தாய் .வான் நட்சத்திரத்தை வேடிக்கை பார்க்கும் கிராமத்தானாக நான்  கீழே நின்றிருந்தேன்.

 




இந்த சூழ்நிலையில்தான் உன் அப்பாவிற்கு தொழிலில் பிரச்சனை வந்தது .நான் அவரைத் தேடி வந்து நான் சமாளிப்பதாக  சொன்னேன் .எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்குமாறு கெஞ்சி கேட்டுக் கொண்டேன் .அதன் முழு காரணமும் நீ மட்டும் தான் குட்டி. உன்னை அடைவதற்கு எனக்கு கிடைத்த சந்தர்ப்பமாகவே அந்த தொழில் பிரச்சனையை நினைத்தேன் .அதனால் அதனை முடிக்க வேண்டும் என்பது ஒரு வெறியாகவே எனக்குள் இருந்தது .என் முழு திறமையையும் அங்கே காட்டினேன்.

 

நிலைமை சரியானது உன் அப்பாவின் தொழில் நிமிர்ந்தது .அவரிடம் நான் நன்மதிப்பைப் பெற்றேன். இதோ இப்போது உன்னையும் அடைந்துவிட்டேன் .என் மனதை முழுவதுமாக உன்னிடம் திறந்து காட்டி விட்டேன் .இதற்குப் பிறகும் உனக்கு கேட்பதற்கு என்று கேள்விகள் எதுவும் இருக்கிறதா

 

மிருதுளா மெலிதாக விசும்பினாள் ” ஏய் குட்டி அழுறியா என்ன ? ” தன் மார்பில் இருந்தவளை முகம் பற்றி தூக்கி கண்களுக்குள் பார்த்தான்.

 

” சாரி அத்தான் நான் ஏதோதோ நினைத்துக்கொண்டு நானும் குழம்பி உங்களையும் குழப்பி ….” விம்மினாள்

 

டேய் குட்டி திரும்ப சொல்லுடா .எனக்கு எப்போதுமே நீ அத்தான் என்று கூப்பிடுவது ரொம்ப பிடிக்கும். திடீரென்று நீ அப்படி கூப்பிடுவதை நிறுத்தி விட்டாய் .மகிமகிபாலன் என்று பெயர் சொல்லி கூப்பிட துவங்கினாய். இந்த பெயர் அழைப்பு உனக்கு என்னிடமிருந்த உரிமையை குறைத்து என்னை அன்னிய னாக்கி உன்னிடமிருந்து தள்ளி நிறுத்தியது .அது ஒரு மிகப்பெரிய மனபாரம் எனக்கு ” 

 

” அது வந்து அம்மாதான்..” 

 

” ம்தெரியும்டா குட்டி அத்தையை எனக்கு தெரியாதாஇதற்கு காரணம் அவர்கள் தான் என்று புரிந்தாலும் அத்தான் என்ற உன்னுடைய அழைப்பிற்காக என் மனம் ஒவ்வொரு தடவையும் ஏங்கிக் கொண்டே இருக்கும் ” 

 

மிருதுளா நெகிழ்ந்தாள். அவன் கன்னத்தை தன் கைகளால் வருடினாள் .மெல்லிய குரலில் பாடத் துவங்கினாள் .அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்ஒவ்வொரு அத்தானிலும்  அழுத்தம் கொடுத்து பாடி அவள் பாடலை தொடர ,மோகம் பொங்கும் கண்களுடன் அவளைப் பார்த்தபடி இருந்த மகிபாலன் அவளுடைய ஒரு அத்தானுக்கு கிறங்கி அவள் கன்னங்களை பற்றி இழுத்து இதழ்களை சிறை செய்தான்.

 

மிருதுளாவின் பாடல் நின்றது. அவள் கைகள் மகிபாலன் முதுகில் பரவி அவனை தன்னோடு அணைத்துக் கொண்டன .அவளுக்கு பழக்கமற்ற புதியதோர் உலகிற்கு அவளை அழைத்துச் சென்று கொண்டிருந்தான் மகிபாலன்.

 

ர்ராக் ….என்ற சப்தம் முதலில் மெலிதாக கேட்டு பின்பு அதிகமாகியது. மகிபாலனின் முத்தங்களில் தன் சுயம் இழந்து முழுதுமாக தன்னை அவனுக்கு ஒப்புக்கொடுத்து கொண்டிருந்தவள் அந்த போதையான நேரத்திலும் ஏதோ உள்ளுணர்வில் விழி திறந்து பார்த்தாள்.

 

அந்த அறையின் கதவு மெல்ல திறந்து கொண்டிருந்தது .உள்ளே நுழைந்ததும் கதவை தாள் போட்டது மிருநுளாவிற்கு நன்றாக நினைவில் இருந்தது .பிறகு எப்படி கதவு திறக்க முடியும் பயமாக விழி விரிய அந்த அறையை பார்த்தாள்.

 

மாலதியுடனான கவுன்சிலிங்கிற்கு பிறகு அவளும் மதுராவும் பயன்படுத்திக் கொண்டிருந்த அறையை விட்டு விட்டு கீழே இருந்த இந்த அறை அவளுக்கு ஒதுக்கப்பட்டது .இது அவர்களின் தாத்தா பாட்டி இருந்தா அறை  , காலம் காலமாக ஆகிவந்த அறை என  குலம் தழைக்க வேண்டும் என்று இந்த அறையிலேயே அவர்களது முதலிரவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அறைக்கு மாறிய பிறகு மிருதுளா பெருமளவு மனம் லேசாக உணர்ந்திருந்தாள்.

 

இப்போது பெரிய பாறாங்கல் ஒன்று பாரமாக தன் தலைக்கு மேல் அமர்ந்திருப்பதாக உணர்ந்தாள் .வெறித்த விழிகளுடன் திறந்த கதவுகளை பார்த்தவள் உறைந்தாள் .திறந்து கொண்ட அறை கதவின் வழியாக மதுரா உள்ளே வந்தாள் .அவள் பார்வை கட்டில் மேல் இருந்த இவர்கள் மேல் இருந்தது .அவள் ஆழ்ந்த சிகப்பில் ஒரு சேலை கட்டி கொண்டு இருந்தாள் .தோள் வரை பாப் கட் செய்திருக்கும் அவள் கூந்தல் காற்றில் பறந்தபடி இருந்தது.

 




நிதான நடையுடன் உள்ளே வந்தவள் அவர்கள் கட்டிலுக்கு எதிரே இருந்த ஒற்றை சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள் .இவர்களை கூர்ந்து பார்க்கத் தொடங்கினாள் .முதலில் சாதாரணமாக இருந்த அவளது பார்வை நேரம் செல்லச் செல்ல கடுமையானதாக மாறியது .கொஞ்சம் கொஞ்சமாக தீப்பிழம்பாக மாறிய அவள் கண்கள் கொழுந்துவிட்டு எரியத் துவங்கின .அந்த பெரு நெருப்பின் வெப்பம் மிருதுளாவை கொடூரமாக தாக்கியது.

 

மிருதுளா  ” ” என்று அலறினாள் .தன்மேல் படர்ந்திருந்த மகிபாலனை தள்ளினாள் .கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு வீல் வீல் என்று மாறிமாறி கத்த துவங்கினாள் .அவளை சமாதானம் செய்ய பல வழிகளில் முயற்சி செய்து மகிபாலன் இறுதியில் வேறு வழியின்றி பளார் என்று அவள் கன்னத்தில் அறைந்தான் .மிருதுளா தன் சுயநினைவை இழந்து மயக்கம் ஆனாள் .

 

 

 

 

What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!