16
சாத்தியம்தானென சமாதானம் செய்ய முயன்ற பொழுதுகள்
அரிப்பு பூச்சியாய் உடலில் ஊர்கின்றன
அச்சத்தை முந்தி வரும் அருவெறுப்பில்
நக கண்களும் அழுது
நகம் உதிர்க்கின்றன
ஸ்விம்மிங்பூலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாத்விகா .இப்படி சும்மா பார்த்துக் கொண்டிருப்பவளில்லை அவள் .குளத்தின் அருகே வந்த்துமே தனை மறந்து அதனுள் விழுந்துவிடுவாள் .இந்த குளத்தை அவளுக்காகவே பத்தே நாட்களில் அவள் விரும்பிய ஓவல் வடிவத்தில் வடிவமைத்து கொடுத்திருந்தார் சண்முகபாண்டியன் .தனது தோழி ஒருத்த வீட்டில் பார்த்ததாக சும்மா ஒரு கோடுதான் காட்டியிருந்தாள் சாத்விகா .பத்தே நாட்களில் அவளுக்கே அவளுக்கென அவளது வீட்டில் குளம் தயாராக இருந்த்து .
எதற்காக என்னை இவ்வளவு பாசத்தை கொட்டி வளர்க்க வேண்டும் …? முன்பு உரிமையாக தெரிந்த செய்கைகள் இப்போது கடமையாக பட்டது .நண்பனின் மகளென்பதால் அடி மனதில் உறுத்திக் கொண்டிருந்த விலகலை சமனிக்க இந்த அளவற்ற பாச ஒட்டுதல்களோ …???சாத்வகாவிற்கு இப்படித்தான் தோன்றியது .
ஏனெனில் அந்த வீட்டில் கார்த்திக்கிற்கு இருக்கும் கண்டிப்பு அவளுக்கு கிடையாது .அவள் வாய் திறக்கும் முன் அந்த சொற்கள் வடிவம் பெற்று அவள் முன் பொருட்களாக நிற்கும் .கார்த்திக்கிற்கு அப்படி கிடையாது .ஏன் …எதற்கு என ஆயிரம் விசாரணைகளுடன் தான் தேவைகள் நிறைவேறும் .இவ்வளவு நாட்களாக இது தன் மேலிருந்த அதிக பாசமென எண்ணியிருந்தாள் .இப்போது சொந்த பிள்ளைக்கும் …தத்து பிள்ளைக்குமுள்ள வேறுபாடோ என எண்ணுகிறாள் .
இந்த அளவற்ற கவனப்பிகள் தானே அவள் மீது ரங்கநாயகிக்கு ஒரு வித வெறுப்பை வர வைத்துவிட்டது .அந்த வீட்டில் எப்போதும் அவள் மீது கண்டிப்பை காட்டி வந்தவர் ரங்கநாயகி மட்டுமே .அவள் கொஞ்சம் பெரிய பெண்ணானதும் கார்த்திக் கொஞ்சம் கண்டிப்பான் .அப்போதெல்லாம் அவனது கண்டிப்பற்கும் சேர்த்து சண்முகபாண்டியன் அவளிடம் உருகுவார. அவனும் மௌனமாக இருந்துவிடுவான் .
ரங்கநாயகியின் விருப்பம் போன்றே …சாரதா , தனசேகரிடம் போய் மன்னிப்பு கேட்டு வந்திருந்தாள் .மிகுந்த சந்தோசம் அவர்களுக்கு . அவர்கள் வீட்டுக்கு வருவதானால் இனி எப்போதும் இது போன்ற குனிந்த தலையுடன் இருக்க வேண்டுமென அவர்கள் கூறியபோது தன் எதிர்காலத்தை குறித்த கலவரம் சாத்வகாவின் மனதில் உண்டானது .
ஆனாலும் மீண்டுமொரு முறை இந்த திருமணத்தை தடுக்கும் தைரியம் அவள் மனதில் இல்லாதிருந்த்து .விதி வழி என் வாழ்க்கை என்ற கடின பாதையில் நடக்க அவள் தன்னைத்தானே தயார் படுத்தி கொள்ள துவங்கினாள் .
” ஹாய் சாத்வி இங்கே என்ன பண்ற …? ” உற்சாக கேள்வியோடு அவளருகில் அமர்ந்தான் சுகுமார் .
” ஒன்றுமில்லை சுகு ….அத்தான் .சும்மா …உட்கார்ந்திருக்கிறேன் ….”
” ஆஹா …காதில் தேன் பாய்ந்த்து போல் இருக்கிறதே ….” சுகுமார் உரிமையாக அவளை நெருங்கி உரசியபடி அமர்ந்தான் .
உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடத் துடித்த கால்களை அடக்கியபடி அங்கேயே அமர்ந்திருந்தாள் சாத்விகா .
” இதெல்லாம் நம்ம கல்யாணத்திற்கு பிறகுதான் நடக்குமென்று நினைத்திருந்தேன் சாத்வி .ஆனால் காட்ஸ் கிரேஸ் ….ஐ டோன்ட் பிலீவ் திஸ் வொன்டர் ….” அவள் தோள்களில் கைகளை போட்டு அவளை தன்புறம் இழுத்தான் .
” நீ இப்படியெல்லாம் என்னிடம் மிக மரியாதையாக நடந்து கொள்ள வேண்டுமென்பது எனது வெகுநாள் ஆசை தெரியுமா …? நானே உன் திமிரை சரி பண்ணியிருப்பேன் .ஆனால் உன் அப்பா நம் இருவருக்குமிடையே இருந்து உயிரை வாங்கிக் கொண்டிருந்தார் .இப்போது எல்லாம் சரியாகிவிட்டது ….இனி நமக்கிடையே தடையேதுமில்லை ….” என்றபோது அவனது பார்வையில் அருவெறுப்பானாள் .
வேகமாக எழப் போனவளின் கைகளை பற்றியவன் ” நாம் இருவரும் குளிக்கலாமா சாத்வி …” குளத்தின் பக்கம் கைகளை காட்டியபடி பேராசை மின்னும் கண்களுடன் கேட்டான் .இது போல் முன்பும் அவளிடம் கேட்டிருக்கிறான் .சாத்வி அவனை தன் காலில் ஒட்டிய சகதியின் பாவனை பார்வையிலோ , திருவோடு நீட்டும! பிச்சைக்காரன் பாவனை பார்வையிலோ பார்த்து வைப்பாள்.சுருங்கி போன முகத்துடன் போய்விடுவான் .இன்றோ ….
” எழுந்திரி ….சாத்வி .போய் ஸ்விம் சூட் போட்டுக் கொண்டு வா …ம் ….” என்றான் அதிகாரம் சொட்டிய குரலில் .
இவனுடன் ஸ்விம் சூட்டுடன் குளத்தில் நீச்சலா …உடலெங்கும் கம்பளி ஊறும் உணர்வில் குறுகியவள் …” இல்லை அத்தான் .நான் வரவில்லை ” பொறுமையாக கைகளை கட்டிக் கொண்டு பதிலளித்தாள் .
” வருகிறாயா ….இல்லையா என்றா கேட்டேன் .வா என்றுதான் சொன்னேன் …” குரலை உயர்த்தினான் .
” எனக்கு வேறு வேலை இருக்கிறது …” எழுந்து நடக்க தொடங்கியவளின் கைகளை அழுத்தி பிடித்தான் .
” இப்போது நாம் இருவரும் இங்கே ஸ்விம் பண்ண போகிறோம் ….”
” இல்லை …அது முடியாது ….” சாத்விகாவின் பெண்மை இந்த பதிலை தைரியமக சொன்னது .
” அது எப்படி முடியாமல் போகிறதென பார்க்கிறேனடி…” சுகுமார் சாத்விகாவை அப்படியே இழுத்து குளத்தினுள் தள்ள முயன்றான் .
அவனது ” டி ” யில் வெகுண்டவள் ” மரியாதையாக பேசுங்கள் சுகுமார் …” என்றாள் .
” ஏய் என்னடி திரும்ப பெயர் சொல்ற …? என் பொண்டாட்டி நான் அப்படித்தான் ” டி ” போடுவேன் .நீ மரியாதையாக பேசு …”
பொண்டாட்டி என்றால் டி போடுவானாமா …இப்படி ஒரு ஆண் சாத்விகாவை டி போடுவது இதுதான் முதல் முறை .சண்முகபாண்டியன் வாயிலிருந்து ” பேபி ” என்பதை தவிர வேறு வார்த்தை வராது .கார்த்திக் சண்டை போடும் போது வாடி …போடிதான் .ஆனால் அதில் தெறிக்கும் உரிமையில் சாத்விகாவிற்கு வித்தியாசம் தோன்றாது .அதன்பிறகு…….யோசனையில் சாத்விகாவின் உடல் மென்மையாக அதிர்ந்து அடங்கியது .
அவன் வீரேந்தர் ….அன்று விமானத்தில் வைத்து அவளை ” போடி ” என்றான் .அதில் சாத்விக்கு கோபம் வந்த போதும் …இது போல் வெறுப்பு வரவில்லை .இப்போது போல் அவமானப்படுத்தியது போன்ற எண்ணம் வரவில்லை .மாறாக அவனுடன் வம்பிழுத்து வாயாடும் வேகம் வந்த்து .
வீரேந்தர் நினைவு வந்த்தும் ஒரு புது தைரியம் உடலில் பரவ …தன்னை பிடித்திருந்த சுகுமாரை ஒரு உதறலில் தள்ளினாள் .தள்ளி போய் தடுமாறிய அவன் …
” ஏய் உனக்கு கொழுப்பாடி …” ஆத்திரமாக அவள் தோள்களை பற்றி உலுக்கினான் .
” அவளை விடு சுகுமார் ….” பின்னிருந்து கோபமாக ஒலித்தது ஒரு குரல் .
What’s your Reaction?
+1
17
+1
14
+1
1
+1
1
+1
+1
+1