வித்யாசமான ஒரு திகில் கதை எழுதுவோம் என்று முடிவு செய்தாயிற்று .
இதுபோல் கதையெல்லாம் ராத்திரிதான் எழுதணும் .அப்பத்தான் எபெக்ட் கதைக்குள் நன்றாக வரும் என்று முடிவு செய்து எழுத உட்கார்ந்து
இரண்டு அத்தியாயங்களை தாண்டவில்லை …
#திடீரென்று இந்த தலைவலி தனக்கு ஏன் வந்தது மிருதுளா யோசிக்க முயன்றாள் .இப்போதுதான் தூங்கி விழித்து இருக்கிறாள் .விழிக்கும் போதே இந்த தலைவலி .தூங்குவதற்கு முன்பு தனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்ததா ? சளி காய்ச்சல் போன்ற தொல்லைகள் இருந்ததா ? அதனால் வந்த தலைவலியா ? அவள் நினைவுகளை முன் செலுத்தி யோசித்தாள் .ம்கூம் … முன்னால் துழாவிய அவளுடைய நினைவுகள் வெறும் கறுப்பு பக்கங்களையே அவளுக்குக் கொடுத்தன .எந்த சம்பவங்களும் அவள் மனதிற்குள் தோன்ற வில்லை .என்ன இது எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லையே… இந்த தலைவலிக்கு என்ன காரணம் இருக்கக்கூடும்#
இன்னிக்கின்னு பார்த்து வெளியில காத்து ஒரு மாதிரி உர் உர்ருன்னு உறுமுது .வாசல் வேப்பமரம் அநியாயத்துக்கு ஆடுது .ஒருமாதிரி வயிற்றில் அமிலம் சுரப்பது போலிருக்கிறது …ஐய்யய்யோ வாசல்ல பாலுக்கு பை வைக்க மறந்தாச்சு .இந்த நேரம் கதவை திறந்து வாசலை திறந்து காம்பவுண்ட் கேட் வரை போய் ..நோ வே . ஒரு நாள் காபி குடிக்கலைன்னா இப்ப என்ன ?
#கடந்த ஒரு வாரமாக என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை மகி .யோசித்துப் பார்த்தால் எதுவும் நினைவுக்கு வருவதில்லை .தலைவலி மட்டுமே அதிகமாகிறது .ஏதேதோ வேண்டாத கனவுகள் கண்களுக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது .யாரோ ஒரு பெண் ஏதோ ஒரு பெரிய ஆயுதத்தை தூக்கிக்கொண்டு என்னை விரட்டுவது போல் …பேசிக்கொண்டே போன மிருதுளா ஸ்தம்பித்தாள் .அவள் விழிகள் நிலை குத்தலாக சாலை மேல் நின்றன.அந்தப் பெண் …அவளை கனவில் துரத்திய அதே பெண் நடுரோட்டில் தூரமாக நின்றிருந்தாள். கையில் ஆயுதத்தை உயர்த்தியபடி வா..வா என்ற அழைப்போடு இவளது கார் அவளை நெருங்க காத்துக் கொண்டிருந்தாள்.மிருதுளா வீல் என்று ….#
அடப்போங்கப்பா எனக்கு தூக்கம் வருது .போய் படுக்க போகிறேன் .இதையெல்லாம் நாளை பார்த்துக்கலாம் .மனதிற்குள் ( இனி இந்த கதையை ராத்திரியில் எழுத உட்கார்ந்தேன்னா உனக்கு இருக்குடி ….)
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1