Author's Wall

WELCOME SPEECH

வணக்கம் தோழமைகளே ,

 

உங்கள் ஆர்வத்திற்கும் , எதிர்பார்ப்பிற்கும் மிகுந்த நன்றிகள் .நமக்கு மிகுந்த இக்கட்டு வரும் போதுதான் பிரியமானவர்களின் தன்மை தெரிய வரும் .இதோ எனக்கு வந்த இக்கட்டுதான் நிறைய அன்புள்ளங்களை எனக்கு தெரியப்படுத்தி இருக்கிறது .சளைக்காமல் எனக்கு இன்னமும் ஆறுதல் சொல்லி என்னை கை தூக்கி விட்டுக் கொண்டிருக்கும் தோழமைகள் .உங்களுக்கு நான் என்ன செய்தேன் …என் மனவோட்டங்களை எழுத்தாக்கி தந்ததை தவிர . எழுத்தையே விட்டு விடலாமென்ற என் மன துயரையும் மாற்றியது உங்களது ஆர்வம்தான் தோழமைகளே .

 

ஆன்லைன் எழுத்துக்கள்தான் என்னை உங்களுக்கு பரிட்சையமாக்கியது .என்னை வளர்த்து விட்டதும் ஆன்லைன் ரீடர்களாகிய நீங்களே . ஒரு போதும் உங்களை ஒதுக்கி திசை மாறாது என் எழுத்துக்கள் .என் ஆசுவாசத்திற்கான அவகாசமே இத்தனை நாட்கள் இடைவெளி .இப்போது நானும் உங்கள் அனைவரையும் தினமும் சந்திக்க ஆவலாக உள்ளேன் . என் எழுத்துக்கான தளத்தின் வேலைகள் முடிந்து இதோ தளம்  உங்கள் முன்னிலையில் . என்னை உருவாக்கிய , உயர தூக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் அன்பும் , பிரியங்களும் .

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!