17
” சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களமனு சொல்லுவாங்க .அப படி சாத்தான் புகாமல் இருக்கத்தான் எப்பவும் ஏதாவது வேலை செஞ்சி உங்களை பரபரப்பாகவே வச்சுக்கிட டீங்களா அண்ணி …?”
கவிதா கேட ட கேள்வியில் கண்ணாத்தாள் திடுக்கிட டு திரும்பினாள் .
” என்ன உளரற புள ள ? வாயிருக்குங்கிறதுக்காக கண்டபடி பேசக் கூடாது கவிதா …”
” உள்ளதை சொன்னால் உங்களுக்கு எதற்கு கோபம் அண்ணி? சமையல் வேலைக்கு ஆள் வைத்த இந்த ஒரு வாரமாக பார்க்கிறேன். நீங்கள் நீங்களாக இல்லை .கொஞ்சம் டல்லாகவே வீட்டை சுற்றி வருகிறீர்கள் .அந்த பழைய வெங்கல குரல் ஆத்தாவை காணவில்லையே …”
” சின்னப் பொண்ணுங்கறது சரியாத்தான இருக்கு .எதையாவது உளறிக்கிட டு …” கண்ணாத்தாள் வேகமாக அந்த இடத்தை விட்டு எழுந்து போனாள் .
ம் …இப்போ போங்க .ஆனால் உங்களை விடமாட்டேன் …மனதுக்குள் கறுவக்கொண்டாள் கவிதா.
” என ன புள்ள இப்ப உங்க அப்பாருக்கு சந்தோசமா …? என் மகளுக்கு நிறைய வேலை செஞ்சி பழக்கமில்ல …கொஞ்ச வருசம் போகட்டுமே , பிறகு மெல்ல பழகிடுவான னு தயங்கி தயங்கி செல்றதுக்குள்ள சட்டை வேர்த்து உப்பரிச்சுடுச்சு …”
வீட்டின் பின்பக்கம் களத்தில் காய வைத்திருந்த நெல்லை காலால் எத்தி பரப்பியபடி இருந்த பெண களோடு சேர்ந்து தானும் நெல்லை பரப்பியபடி இருந்த கண்ணாத்தாள் அவர்களை வேடிக்கை பார்த்தபடி எதிரே அமர்ந்திருந்த கவிதாவிடம் கேட டாள் .
” எப்படி இப்படி அழகாக ஒண்ணு போல நெல்லை தள்ளுறீங்க அண்ணி ..? நானும் டிரை பண்றேனே …” மழையில் நனைய ஆசைப்படும் குழந்தையின் ஆவலோடு தானும் களம் இறங்கினாள் கவிதா .
” இதோ …இப்படி …” கண்ணாத்தாளின் கற்றுக் கொடுத்தல்படி தானும் காலசைத்து நெல்லை பரப்பியவள் , மெல்ல அவளை ஏறிட்டாள் .
” உங்கள் வயசு என ன அண்ணி ? ”
கண்ணாத்தாளின் கால்கள் தயங்கி நின்று பிறகு வேலையை தொடர்ந்தன .
” நீங்க ஏன் இன்னமும் கல்யாணம் பண்ணிக்கலை ? ”
கண்ணாத்தாள் வேலையை நிறுத்தவில்லை .தலை நிமிரந்து பார்க்கவுமில்லை .
” என் அப்பவிற்கும் உங்களுக்கும் ரொம்ப நாள் பழக்கமா அண்ணி …? எத்தனை வருடங்களாக …? எப்படி பழக்கம் …? ”
அசைந்து கொண்டிருந்த கண்ணாத்தாளின் கால்கள் நின றன . கண்கள் அவளை வெறித்து பார்த்தன .பின் தூக்கி சொருகிய புடவையை இறக்கி விட்டபடி அவள் களத்தை விட்டு வெளியேறி பொனாள.
” கடைசி வீர்ரும் தோல்வியொடு களத்தை விட்டு அவுட்டாகி வெளியேறிகிறார. …” உரக்க கண்ணாத்தாளின் காதில் விழும்படி கவிதா கத்த , அவள் இவளை திரும்பி முறைத்தபடி போனாள் .
தனக ்குள் சிரித்தபடி திரும்பிய கவிதா அந!தப் பக்கம் கைகளை கட டிக்கொண ்டு நின்றபடி இவர்களை பார்துக் கொண மிருந்த அய்யனாரை பார்த்ததும் கொஞ்சம் பயந்தாள் .பிறகு தைரியமாக தலை நிமிர்த்தியபடி நெல்லை காலால் அளைந்தபடி நடக க ஆரம்பித்தாள் .
மூஞ்சியை பாரு …என்னத்தையோ புடுங்கிட்டு போகிற மாதிரி எதற்கு இப்படி பார்க்கிறான் …?
” கமலாக்கா , காமாட்சிக்கா …போயி சேறுண்ணுட்டு வந்து குறை வேலையை பாருங்க ”
உடன் வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களையும் அனுப்பினான் . காய்ந்து கொண்மிருந்த நெல் மேல் நடந்து கவிதாவினருகில் வந்தான. .
” என்ன செய்து கொண்டிருக்கிறாய் …? ”
” தெரியலை ..்நெல் காய வச்சுட டு இருக்கூன் …” கொஞ்சம. திமிராகவே பதில் சொன்னாள் .
” ம்ப்ச் இதை கேட கலை . அக்காவை என்ன செஞ்சிட்டிருக்க …? இரண்டு நாட்களாக நீ அக்காவிடம் எகனைக கு மொகனையா பேசிட்டு திரியிற …ஏன் …? ”
அவன் உச்சரித்த எகனைக்கு மெகனை கவிதாவை வெகுவாக கவர ,அந்த வார்த்தையை தானும் மெல்ல உச்சநரித்து பார்த்தாள் .அவனளவு அந்த சொல்லாடல் தனக கு வரவில்லையென நினைத்தாள் .
திரும்ப தரும்ப எகனைக்கு மொகனை சொல்லிப் பார்த்துக் கொண்டிருந!தவளை விசித்திரமாக பார்த்தான் அய்யனார் .
” ஏய் என்னடி செஞ்சிட்டு இருக்கிற ? ”
” டி “யா…? அவனை முறைத்தாள் .
” எதுக்குடி முழக்கிற …? ” அய்யனாரின் இந்த ” டி ” இன்னமும் அழுத்தமாக இருந்த்து .
ஒரு வாரத்திற்கும் மேலாக கணவனுன் மனைவியும் நேரடியாக பேசிக்கொள்வதில்லை . ஒருவர் இருக்கும் இடத்தில் அடுத்தவர் இருப்பதில்லை .இரவு அறைக்குள் நுழைந்த உடனேயோ மிக அமைதியாகி விடுவார்கள் .ஒழுவரையொருவர் பார்ப்பதையே தவிர்த்து திரும்பி படித்துக் கொள்வார்கள் .கஙிதா கட்டிலில் …அய்யனார் பால்கனியில் ..
மனைவியை சமாதானப்படுத்தும் நோக்கில்ஓர் இரவில் அவளருகே நெருங்கியவனை கண்ட கவிதாவின் மனம் படபடத்தது .இ…இவன் என்ன செய்ய போகிறான் …?
” சமாதானம் …” கெஞ்சல் குரலில் கேட டபடி தன் முன் நீண்ட அந்த அகன ற முறம் போன ற கைகளை பதட்டாமாக பார்த்தாள்.
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் மனதை வைத்துக. கொண டு கணவனின் நுனிவிரலை கூட தொட அவள. தயாராவிர்லை .அந்த சிறு தீண்டலும் அவளது ஆழ்மனதை சொல்லி விடக. கூடும் .
வேகமாக பின்னடைந்தாள் .இவன் அன்று என்னவெல்லாம் பேசினான் …? எப்படோயெல்லாம் நடந்து கொண்டான் …? மனதையும் , உடலையும் எந்த அளஙு நோக வைத்தான் …? இப்போது கை நீட்டியதும் நான் போய் கோர்த்துக் கொள்ள வேண்டுமா …?
” காட்டுமிராண்டிகள் சமாதானதிற்கெல்லாம் வருவார்களா …?”
காட்டுமிராண்டி என அழைப்பது அவனுக்கு பிடிக்காது என அவளுக்கு தெரியும் . திரும்ப இவன் அன்று போல் மேலே பாயத்தான் போகிறான் என்றும் தெரிந்து கொண்டேதான் கேட்டாள். எப்படியும் அவள் மீது வெறியை திமிரை காட்டப் போகிறான் .அதனை அவள் ஏன் வாய் மூடி நின்று வாங்கிக் கொள்ள வேண்டிம் …இந்த நினைப்புதான் கவிதாவிறகு .
கேட்டுவிட்டு …அன்று போலொரு ஆகரோசத்தை , வேகத்தை ,வெறியை எதிர்பார்த்து உடலை தயார்படுத்தி இறுக கண் மூடி நின்றாள் . எதிரில் எந்த அசைவுமின்றி உணர மெல்ல விழி திறந்து பார்க்க , நீட்டிய கையை மடக்கி கட்டிக் கொண்டு அவளெ பார்த்தபடி நின்றான் அய்யனார் .அவன் கண்களில் வேதனை தெரிந்த்து .
” அன்று ஏதோ தெரியாமல் நடந்துடுச்ஞ்சு கண்ணு . அதக்கு ரொம்ப வருத்தப்படுறேன் ”
அந்த ஊரையே ராஜா போல் கட்டி ஆள்பவன் . தன் முன் தவறுதானென நிற்பது கவிதாவிற்கு ஆச்சரியமும் , திருப்தியும் தந்தாலும் , அவளது குணத்தின் மீது அவன் சந்தேகம் கொண்டு கேட ட கேள்விகள் இன்னமும் மனதை அறுத்துக் கொண டுதான் இருந்தன .
” நான் உங்களை வுறுக்கிறேன். எனக்கு உங்களை பிடிக்கவில்லை ,”
இதனை அய்யனாரின் மனதை நோகடிப்பதற்கெனவும் , அவனை தன னை விட டு தள ளி நிறுத்தி வைப்பதற்கெனவும் சொன்னாள் .சோம்பிய முகத்துடன் தலையணையை எடுத்துக் கொண டு பால்கனிக்கு நடந்தான் அய்யனார் .
ஒரு வாரமாக இருவரும் இப்படித்தான் கண்ணாமூச்சு ஆடிக் கொண்ணிருக்கின்றனர் .இன்றென்னவோ உரிமையாய் ” டி ” போட்டுக் கொண்டு நிற்கிறான் .
” இப்போ உங்களுக்கு என்ன வேணும் ? ”
” உனக்கு என னடி வேணும் ? ”
” எனக்கு உங்க அக்காவை பற்றிய விபரங்கள் வேண்டும் .”
” அதனை என்கிட்ட கேட்கலாம்ல .ஏன் அக்காகிட ட கேட்டு அவுங்களை நோகடிக்கிற …? ”
” ஏன் நீங்களே சொல்லலாம்ல …? நானே கேட்கனும்னு ஏன் நினைக்கிறீங் க ? ”
அய்யனார் மௌனமாக அவளை பார த்தான் .
” நீயே கேட்க மாட்டேங்கிறீயேடி ்நானேதானே உன்கிட்டு இருந்து எடுத்துக்க வேண்டிய நெலமை வருது .பொறவு அதையும் குத்தம் சொல்ற ”
கவிதாவின் முகம் சிவந தது . வில்லங்கம. பிடித்தவன. .நான் என ன கேட்டால் …அவன் எதை சொல்கிறான் …
மதிய வெயில் நேரடியாக அங்கே இறங்காமல் தடுத்த வீட்டின் நிழல் விழுந்த களத்தில் , மேலே பட்டும் படாமலும் விழுந்த அச்சூரிய ஒளியில் , தூக்கி சொருகிய சேலையோடு நெல் தூளாஙிக் கொண்டிருந்தவள் வண்ணத்துப்பூச்சிகளிலிருந்து பிறந்து வந்தவள் போல் அவனுக்கு தோன்ற , கணவனின் உரிமையுடன் அவளை நெருங்கினான் .
” என்ன செய்ய போறீங்க …? ” பயந்து பின் நடந்தாள் .
அய்யனார் நின்று விழி மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான் .
” பிடிக்காதவன் . தொடமாட டேன டி ” சூளுறைப்பது போல் சொன்னான் .
What’s your Reaction?
+1
14
+1
17
+1
+1
1
+1
+1
+1