அஜித் வீட்டில் நடந்த சோகத்தால் வெளிநாட்டில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு வந்துள்ளார்.
அஜித்தின் துணிவு வெற்றிக்குப் பிறகு ஏகே 62 படத்திற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் அஜித் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருந்தார். அங்கு கடற்கரையில் அஜித், ஷாலினி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது.இப்போது அஜித்தின் குடும்பத்தில் ஏற்பட்ட மரண செய்தியால் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு விரைந்து உள்ளார் அஜித். அதாவது அஜித்தின் தந்தை பி சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85 ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். பி சுப்பிரமணியனுக்கு மோகினி என்ற மனைவி உள்ளார். மேலும் அனில் குமார், அனூப் குமார், அஜித்குமார் என மூன்று மகன்கள் உள்ளனர். அஜித் சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பினால் மட்டுமே இந்த உயரத்தை அடைந்துள்ளார்.
இது குறித்து அஜித் குமாரின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி (85 வயது) அவர்கள் பல நாள்களாக உடல்நலமின்றி படுக்கையிலிருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்புச் செய்தியைப் பற்றி அறியவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களைத் தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை எடுப்பது அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாமல் போவது போன்றவற்றை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
எங்கள் தந்தையாரின் இறுதிச் சடங்குகளை ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்கவேண்டுமெனக் கருதுகிறோம். எனவே இந்த இறப்புச் செய்தியை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதிச் சடங்குகளைத் தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.” என்று அதில் தெரிவித்துள்ளனர்.
அஜித்தின் ஒவ்வொரு கஷ்டமான சூழலிலும் அவருக்கு உத்வேகம் கொடுத்த தந்தை இப்போது அவருடன் இல்லை. அவரின் மரணத்தால் மிகுந்த மன கஷ்டத்தில் உள்ள அஜித்துக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
மேலும் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியன் உடல் இன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஜித்தின் தந்தைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2