உங்களில் பல பேர் ஆகாய தாமரைகளை பார்த்திருப்பீர்கள். இது பொதுவாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, தென் அமெரிக்காவிற்கு சொந்தமான ஒரு நீர்வாழ் தாவரமாகும். நம் இந்தியாவில் இந்த தாவரத்தை “வங்காளத்தின் பயங்கரவாதம்” என்று அழைக்கிறார்கள்.
இதன் இயல்புகள்:
-
ஆகாய தாமரை மிதக்கும் நீர்வாழ் தாவரமாகும். அதன் பளபளப்பான, கரும் பச்சை இலைகள் அகலமாகவும், அடர்த்தியாகவும், முட்டை வடிவமாகவும் இருக்கும்.
-
இந்த இலைகள் நீர் மேற்பரப்பில் இருந்து 1 மீட்டர் (3 அடி) வரை கீழ்நோக்கி வளரும் .
-
அதன் அடிப்பகுதியில் மிதக்கும் குமிழ் போன்ற முடிச்சுகளைக் கொண்டுள்ளதால், இயல்பாகவே தண்ணீரில் மிதக்க தன்மை பெற்றவை.
-
ஒவ்வொரு தாவரமும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விதைகளை உற்பத்தி செய்யக்கூடியவை, இந்த விதைகள் 28 ஆண்டுகள் ஆனால் கூட எந்தவித பிரச்சனையுமின்றி நிலைத்திருக்கும்.
-
தாவர எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அவை வெறும் 23 நாட்களில் நூறு மடங்குக்கு மேல் பெருகும்.
-
வேறு வேறு நீர்நிலைகளுக்கு மகரந்தச் சேர்க்கை(pollinate) மூலம் பரவி,பெருகி நீர் மேற்பரப்பில் காடுபோல் வளர்கின்றன.
இதன் தீமைகள்:
- ஆகாய தாமரைகள் இயற்கை வாழ்விடங்களை சீர்குலைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளை மாற்றுகின்றன. இது பூர்வீக நீர்வாழ் தாவரங்களின் இன பெருக்கத்தையும் குறைக்கிறது.
- இதன் அடர்த்தியான கிளைகள் நீரை தேக்க நிலையில் வைப்பதால், இ ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்துபோகின்றன.
- இவற்றின் பெருக்கத்தால் நீர்நிலை தேக்கம் அடைவதால் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் மாறுகிறது. இதனால் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.
- நீர்வழிகளை அடைத்து கூட்டமாக வளர்வதால், கப்பல் போக்குவரத்து, மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலாத் தொழில்களை பாதிக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1