gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (19.04.24)

சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 10.28 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று பிற்பகல் 01.18 வரை மகம். பின்னர் பூரம். மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனைக்கு உட்படுவீர்கள். ஊழியர்கள் இதே நிலையிலேயே தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள். எலெக்ட்ரிக் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியம் செய்யாதீர்கள். ஏற்றுமதி தொழிலில் ஆதாயம் அடைவீர்கள்.மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். மனையிடம் வாங்குவதும் புதிய வீட்டுக்கு குடி போவதற்குமான ஏற்பாட்டில் இறங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஆர்வத்தோடு செய்து முடிப்பீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்று வீட்டில் சந்தோஷத்தை கொண்டு வருவீர்கள். ‌சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

ஏற்றமான இருந்த வியாபாரத்தில் சின்ன இடையூறால் பாதிப்படைவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி உடல் அசதியால் அவதிப்படுவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தியை பெறுவீர்கள். உங்களால் உதவி பெற்றவர்கள் தக்க சமயத்தில் திருப்பித் தருவார்கள். புதிய முயற்சிகளால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் பண உதவி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேர்வதால் உற்சாகத்தில் திளைப்பீர்கள். உங்கள் அறிவாற்றல் அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். வீடு பூமி போன்றவற்றில் செய்த முதலீடு பல மடங்காகப் பெருகியதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு ஊழியர்கள் அற்புதமான பலனைப் பெறுவீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

பொல்லாங்கு பேசுபவர்களால் மன நிம்மதி இழப்பீர்கள். தொழில்துறைகளை நிதானமாக நடத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மை அடைய மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் நிதானத்துடன் செயல்பட தவறாதீர்கள். ஒப்பந்தக்காரர்களுக்கு வரவேண்டிய பணம் தள்ளிப் போவதால் சிரமப்படுவீர்கள். நியாயத்துக்குப் புறம்பாக நடக்காதீர்கள்.சூரிய பகவானை வழிபடுவது நலம் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

கணவன் மனைவி உறவில் நீடித்த சங்கடங்களை கஷ்டப்பட்டு நீக்குவீர்கள். செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். பங்குச் சந்தையில் அதிக பணம் போடாதீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகியிருங்கள். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபார ரீதியான அலைச்சலால் சிரமப்படுவீர்கள்.இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மற்றவர்களுக்காக நீங்கள் செய்கின்ற வேலைகளை தடங்கல் இல்லாமல் முடிப்பீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். இதுவரை தொழிலில் சிக்கலை ஏற்படுத்திய நெருக்கடிகளை விலக்குவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள்.பண வரவை அதிகரிப்பீர்கள்.
தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாய மும் ஏற்படக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

சாதுர்யமாக காய் நகர்த்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாக்கு திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மனைவியின் பாராட்டைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறனில் முன்னேற்றம் காண்பீர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். விநாயகரை வழிபட வெற்றிகள் வசமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்பட தவறாதீர்கள். வருமானத்திற்காக இடம் விட்டு இடம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடந்தால் அமைதியை அனுபவிப்பீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தவறி நடக்காதீர்கள்.துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு வந்து மருத்துவ சிகிச்சையால் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். இல்லத்தரசிகள் தெய்வ வழிபாட்டால் கணவர்களுக்கு இருந்த உடல் பாதிப்பு அகல பாடுபடுவார்கள். அரசுப் பணியாளர்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். பயணங்களில் கவனத்தை சிதற விடாதீர்கள்.சிவபெருமானை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

வியாபாரத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்களை அகற்றுவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கணிசமான பலன் பெறுவீர்கள். ஒர்க் ஷாப், எலக்ட்ரீசியன், கொத்தனார்கள் தொடர்ந்து வேலை செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். அரசுத் துறையில் நல்ல ஒத்துழைப்பை அடைவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி பெறுவீர்கள்.
மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!