Serial Stories Sprituality

இன்றைய ராசி பலன் (08.04.24)

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 02.54 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று காலை 10.06 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

வீண் அலைச்சலால் பொருள் விரையம் ஏற்படுத்துவீர்கள். உடன் வேலை செய்பவர்களால் டென்ஷன் அடைவீர்கள். மனநிலை புரியாமல் குடும்பத்தினர் குத்தலாகப் பேசுவதால் வேதனைப்படுவீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வண்டி வாகனங்கள் இடைவழியில் மக்கர் பண்ணுவதால் பங்க்சுவாலிட்டி இல்லாமல் சிரமப்படுவீர்கள்.இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கட்டுமானத் தொழிலை கன ஜோராக நடத்துவீர்கள். வியாபாரத்தில் வெற்றிகரமான உத்திகளைக் கையாளுவீர்கள்‌. அலைச்சல் அதிகமானாலும் தொழிலுக்குத் தேவையான ஆர்டர்களைப் பெற்று வருவீர்கள். மனத் தைரியமும் தன்னம்பிக்கையும் அடைவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பதால் நிலத்தில் தைரியமாக பணத்தை முதலீடு செய்வீர்கள்.இன்று சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

நினைத்த காரியத்தை நடத்திக் காட்டுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி பண்ண கடுமையாக உழைப்பீர்கள். சொந்தத்தில் திருமணம் பேசி முடிப்பீர்கள். அரசுப் பணியில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு பெறுவீர்கள். தனியார் துறையிலும் சம்பள உயர்வு அடைவீர்கள். வியாபாரம் சிறப்பாக நடந்து முன்னேற்றம் காண்பீர்கள். இன்று நீங்கள் மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

நில விற்பனை மூலம் பணவரவை அதிகப்படுத்துவீர்கள். மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்குவீர்கள். இல்லறத்தில் கசப்புணர்வை போக்குவீர்கள். காதலியின் மனமறிந்து நடந்து கொள்வீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வீர்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள்.இன்று ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

அடுத்தவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். உடன் வேலை செய்பவர்கள் கொடுக்கும் தொல்லையால் மன வேதனைப் படுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற முடியாமல் சிரமப்படுவீர்கள். சின்ன சின்ன விபத்துகளில் சிக்கிவீர்கள்.தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி ஒற்றுமையை பலப்படுத்துவீர்கள். புது வியாபாரம் தொடர்பான காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள். உறவினர்களிடம் அனுசரித்துப் போவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள்.அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

வியாபாரத்திற்கு இடையூறு செய்பவர்களை அடையாளம் காண்பீர்கள். புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள். பங்குப் பரிவர்த்தனை வியாபாரம் மந்த நிலையில் இருப்பதால் எச்சரிக்கையாக முதலீடு செய்வீர்கள். தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொள்வீர்கள். பணம் கொடுக்கும்போது பத்திரத்தில் கையெழுத்து வாங்க மறக்காதீர்கள்..இன்று நீங்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

வியாபாரத்துக்கு உதவியான நல்ல செய்தி வெளிநாட்டிலிருந்து பெறுவீர்கள். வேலை காரணமாக சில நாட்கள் வெளியூரில் தங்குவீர்கள். கலைத்துறையினர் புதிய சாதனை படைப்பீர்கள். புதிய காண்ட்ராக்ட்களை பெறுவீர்கள். அடுத்தவருக்காக உத்தரவாதம் கொடுக்காதீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும் பணம் தங்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.லட்சுமி நாராயணணை  வழிபட பல நன்மைகள் உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

பிடிவாதமாக நின்று நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். தாய் வழி சொத்தில் உங்களுக்கு உரிய பங்கை அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் இரு மடங்கு லாபம் பார்ப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்திற்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வீர்கள். சில்லரை வியாபாரிகள் கணிசமான பண வரவை காண்பீர்கள்.இன்று நீங்கள் பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

உங்களை மட்டம் தட்ட நினைப்போருக்கு நல்ல பாடம் புகட்டுவீர்கள். துணிச்சலுடன் எந்தக் காரியத்திலும் இறங்குவீர்கள். புதிய ஆர்டர்கள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். குடும்பம் பற்றிய கவலைகளை மறப்பீர்கள். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் இறுதியாக அவற்றை உங்களுக்குச் சாதகமாக்கி வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.இன்று ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

வங்கியில் எதிர்பார்த்த லோனை உரிய நேரத்தில் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட மிஷின்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வீர்கள். நண்பர்களுடன் இருந்த சண்டையைப் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். மனையிடம் வாங்கி பத்திரப் பதிவு செய்வீர்கள். எதிலும் நிதானமாகச் செயல்படுவீர்கள். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த வேலையும் செய்யாதீர்கள். தொழிலில் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க தவறாதீர்கள். .வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். உறவினர்களால் சிக்கலை சந்திப்பீர்கள். முழங்கால் வலியால் சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணங்களில் வேலைச் சுமை அதிகரித்து மனச்சோர்வு அடைவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.இன்று நீங்கள் மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!