gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (05.04.24)

சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.59 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று பிற்பகல் 02.57 வரை அவிட்டம். பின்னர் சதயம். திருவாதிரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களே… கல்வியில் திறமையை அதிகரிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெற்று பிரகாசிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். பங்குதாரர்களுடன் பக்குவமாகப் பேசி தொழிலை நிலை நிறுத்துவீர்கள். அரசு வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு பெறுவீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் ஆதாயம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எந்தக் காரியத்திலும் நன்கு யோசித்து இறங்குவீர்கள். குடும்பம் பற்றிய கவலையால் மன வேதனைப்படுவீர்கள். உறவினர்கள் கொடுக்கும் தொல்லையால் டென்ஷன் ஆவீர்கள். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். படிப்பில் வெற்றிபெற திட்டமிட்டு மாணவர்கள் கல்வி கற்பீர்கள். எதிர்பார்த்த பண உதவியை சுனக்கமில்லாமல் பெறுவீர்கள்.சித்தி விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள் மூலம் காரியம் அனுகூலமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

எல்லாம் தெரியும் என்ற நினைப்பை மூட்டைகட்டி வையுங்கள். கைமாற்றாக பணம் கொடுப்பதைத் தவிருங்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடாதீர்கள். வியாபாரம் மந்தமாக நடப்பதால் விசனப்படுவீர்கள். அனாவசியமான செலவுகளால் கடன் வாங்குவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களில் தொந்தரவை சந்திப்பீர்கள். சந்திராஷ்டம நாள்.காமாட்சி அம்மன் வழிபாடு நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

கடக ராசி அன்பர்களே!

நயந்து பேசி நண்பரின் திருமணத்தை நல்ல விதமாக முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே பாசத்தை அதிகரிப்பீர்கள். புதிய வீடு வாங்க திட்டம் தீட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைப்பீர்கள். கணிசமான லாபத்தை கமிஷன் வியாபாரத்தில் பெறுவீர்கள். வாங்கிய கடனை அசலும் வட்டியும் செலுத்தி அடைப்பீர்கள்.சந்திராஷ்டம நாள்.திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே!

மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் வேலையில் சாதகமான பலனை அடைவீர்கள். கடுமையான போராட்டத்தில் தொழிலை நடத்துவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்பீர்கள். மேலதிகாரிகளின் டார்ச்சரால் வேலையில் கவனச் சிதறலை அடைவீர்கள். பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்தால் பண இழப்புக்கு ஆளாவீர்கள்.இன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

பொறுமையாக இருந்து பூர்வீகச் சொத்தை அடைவீர்கள். தொழிலில் வேகம் காட்டி போட்டியாளர்களைத் திணறடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக பணம் சேர்ப்பீர்கள். உறவினர்கள் வகையில் உதவிகளை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவீர்கள். வெளியூரிலிருந்து வியாபாரத்திற்கான புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். வீட்டில் மங்கல காரியங்கள் நடத்துவீர்கள்.மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

நீண்டகாலமாக நினைத்திருந்த இடத்தை வாங்கி பத்திரம் போடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் பெறுவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பங்குச் சந்தை வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள். தேவைக்கான பணத்தை எந்த வகையிலயாவது பெறுவீர்கள். கார் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்கி மகிழ்வீர்கள்.
லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

போட்டிகள் அதிகரித்து வியாபாரத்தில் சிக்கலை சந்திப்பீர்கள். வேலையைக் கெடுக்க, கூட இருப்பவர்களே குழி பறிப்பார்கள். சிறு வியாபாரிகள் ஏதாவது ஒரு இடையூறால் சிரமப்படுவீர்கள். மனைவியின் மனமறிந்து நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவீர்கள். வரவுக்கு மேல் வரும் செலவால் விழி பிதுங்குவீர்கள்.திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வழிபாடு நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

வழக்கறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள் முத்திரை பதிப்பீர்கள். வியாபாரத்தில் காட்டும் வேகத்தால் லாபத்தை கூட்டுவீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். சாதுர்யமாகவும் நயமாகவும் நடந்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனை நீங்கி நிம்மதி அடைவீர்கள். வெளிநாட்டுப் பயண ஏற்பாடுகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனம் சஞ்சலப்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகர ராசி அன்பர்களே!

சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறந்தால் சங்கடங்களை சந்திக்க மாட்டீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைத் தவறாகப் புரிந்து கொள்வதால் வேதனை அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்புகள் வந்து சிரமப்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சளி இருமல் தொல்லைக்காக மருத்துவரை பார்ப்பீர்கள்.இன்று பத்திரகாளி வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பராசி அன்பர்களே!

அரசாங்க வேலைகள் இழுபறியாக நடந்து அலைச்சலால் அவதிப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சுணக்க நிலையை காண்பீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யப்போய் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் பொருள் விரயமடைவீர்கள். வியாபாரத்தில் தொய்வு நிலையை காண்பீர்கள். பார்ட்னர்களிடையே பணப் பிரச்சனையால் உங்கள் பங்கை உடனடியாக கேட்பீர்கள். சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறுவதால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகமான வருமானம் அடைவீர்கள். வியாபாரத்தில் காதலியையும் கூட்டு சேர்த்துக் கொள்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவியை வெளிநாட்டில் இருந்து பெறுவீர்கள்.கற்பக விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!