Cinema Entertainment Uncategorized

சிவாஜியை அலட்சியம் செய்த சவுகார் ஜானகி: கடைசியில் மன்னிப்பு கேட்ட கதை

ஏற்கனவே எடுத்த காட்சியின் தொடர்ச்சியாக மற்றொரு நாள் படப்பிடிப்பு நடந்தபோது, நடிகை சௌகார் ஜானகி சேலை மாற்றி கட்டியதை சிவாஜி கணேசன் சுட்டிக்காட்டினாலும், அவர் மதிக்காமல் இருந்த நிலையில், அதன்பிறகு ஏற்கனவே எடுத்த காட்சியை பார்த்தபோது தனது தவறை உணர்ந்து சௌகார் ஜானகி மன்னிப்பு கேட்டுள்ளார்.அந்த சம்பவத்தை இந்த பதிவில் பார்க்கலாம்:




1968-ம் ஆண்டு ஏவிம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் உயர்ந்த மனிதன். சிவாஜி, வாணிஸ்ரீ, சிவக்குமார், பாரதி, சௌகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தின் அத்தனை பாடல்கையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில, பாடல்கள் பெரிய ஹிட் அடித்தது.

இடம் பொருள் இலக்கியம்: 5- ''சிவாஜி ஒரு சகாப்த கோபுரம்'' - நாட்டுப்புற எழுத்தாளர் பாரததேவி | sivaji birthday special - hindutamil.in

வாணிஸ்ரீயை காதலித்த பெரும் பணக்காரரான சிவாஜி கணேசன் சந்தர்ப்ப சூழ்நிலையால், சௌகார் ஜானகியை திருமணம் செய்துகொள்வார். இதனால் வாணிஸ்ரீயை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருக்கும், சிவாஜியிடம் வேலைக்கு வருபவர் தான் சிவக்குமார். வாணிஸ்ரீயின் மகனாக இவர், சிவாஜியின் மகனும் கூட. ஆனால் இவர் தனது மகன் என்று தெரியவில்லை என்றாலும், மகன் போல் அதிக பாசம் காட்டுவார் சிவாஜி.




இந்த படத்தில் ஒருநாள் படப்பிடிப்பு நடந்தபோது, அனைவரும் படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளனர். அப்போது மேக்கப்புடன், சௌவுக்கார் ஜானகி வந்தபோது, இந்த காட்சி ஏற்கனவே எடுத்த காட்சியின் தொடர்ச்சிதான். அந்த காட்சியில் சௌகார் ஜானகி கருப்பு நிற சேலை தான் அணிந்திருந்தார் என்பதை தெரிந்துகொண்ட சிவாஜி கணேசன், உதவி இயக்குனரை அழைத்து கூறியுள்ளார். அவரும் சௌகார் ஜானகியிடம் போய் இவ்வாறு சொல்ல, கட்டி இருந்த எனக்கு தெரியாதா என்று சௌகார் ஜானகி பேசியுள்ளார்.

இதை அந்த உதவி இயக்குனர் சிவாஜி கணேசனிடம் வந்து சொல்ல, அவரே அவர் அன்று கருப்பு நிற சேலை தான் கட்டியிருந்தார். நீ போய் இயக்குனரிடம் இதை சொல் என்று சொல்ல அவரும் இயக்குனரிடம் கூறியுள்ளார். இதை கேட்ட அவர் என்ன செய்வது என்று தெரியாமல், ஏற்கனவே எடுத்த காட்சியை போட்டு பார்க்கலாம் என்று கூறி அதற்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது சிவாஜியை அழைக்க அவர் உங்களுக்கு தானே சந்தேகம் நீங்களே போய் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு அந்த காட்சியை பார்த்தபோது, சிவாஜி சொன்னபடி, அவர் கருப்பு சேலைதான் அணிந்திருந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட சௌகார் ஜானகி, சிவாஜியின் மேக்கப் அறைக்கு சென்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!