gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (04.03.24)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.09 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று காலை 11.56 வரை கேட்டை. பின்னர் மூலம். பரணி கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.  மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்..

மேஷ ராசி அன்பர்களே!

உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக இருப்பதால் உங்கள் வேலையில், பேச்சில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில், உணவு விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். என்று ஆடம்பர விஷயங்களுக்காக அதிக பணத்தை செலவிட வாய்ப்பு உள்ளது. உங்களின் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும்.இன்று நீங்கள் பைரவரை தியானித்து வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

 அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங் கள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கடினமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவும். பங்குதாரர்களிடம் இருந்து பிரச்சனைகளும், அவர்களின் கோபமும் ஏற்படும். பெற்றோர்களிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். புதிய திட்டத்தில் பண முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை, சிந்தனை அவசியம். வேலையில் முன்னேற்றம் இருக்கும்.மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கப்  பெறலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராதபடி பணிச்சுமை அதிகரிக்கக்கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

பழைய கடன்களைச் சுலபமாக பைசல் செய்வீர்கள். இளம் வயதினர் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவி சங்கடங்கள் மறைந்து தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். தொழிலுக்கு வேண்டிய உதவிகளை பெறுவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். அரசுப் பணியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு அடைவீர்கள்
நடராஜப்பெருமானை தியானித்து வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைத்து மகிழ்ச்சி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும்.

கடக ராசி அன்பர்களே!

சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக நடத்துவீர்கள். சுபகாரியத் தடைகள் நீங்கி சொந்தங்களை வரவழைப்பீர்கள். ரத்த உறவுகள் இடையே உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வியாபாரத்தில் இனந்தெரியாத எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். முக்கிய கடன்களை சிரமப்பட்டு அடைப்பீர்கள்.தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தேடிய பொருள் கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

வேலை இடங்களில் இருந்த சிக்கலை விலக்குவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் அளவோடு ஈடுபடுவீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகி விடுவீர்கள். ஐடி ஊழியர்கள் அதிக எச்சரிக்கையுடன் பணியாற்றுவீர்கள். பிறரை நம்பி காரியம் செய்யாதீர்கள்.இன்று  முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

இல்லத்தில் நல்ல காரியங்கள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள். உண்மையான நண்பர்களால் உதவி பெறுவீர்கள். வெளியூர்ப் பயணங்களளில் தொழிலுக்குச் சாதகமான பலனை அடைவீர்கள். அரசுத்துறை சம்பந்தப்பட்டவர்கள் அற்புதமான வாய்ப்பை பெறுவீர்கள். பண வரவுகளை சீர்படுத்துவீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் லாபம் பெறுவீர்கள்.இன்று மகாலட்சுமியை வழிபட நன்மைகள் கூடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

பணியிடத்தில் உங்கள் பொறுமைக்குப் பரிசாக உயர்வு ஏற்பட்டு உற்சாகமடைவீர்கள். திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்படுவீகள். பணத்தைக் கையாளும் போது கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள். அலுவலக ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். காதலியின் அரவணைப்பால் களிப்படைவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.அம்மன்  வழிபாடு நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தோல்வியில் துவண்டு இருந்த நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாவற்றிலும் ஏற்றம் பெறுவீர்கள். வார்த்தை வசியத்தால் மரியாதையை கூட்டுவீர்கள். வெளிச் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். மனைவியின் குதிகால் வலிக்கு தீர்வு ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.
சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு ராசி அன்பர்களே!

வங்கியில் எதிர்பார்த்த கடன் சம்பந்தப்பட்ட விவரங்களில் இழுபறி ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். தொழில் வரியை முறையாக செலுத்த மறக்காதீர்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரம் மந்தமாக நடப்பதால் மனக்கவலை அடைவீர்கள். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடப்பதால் மனச்சஞ்சலம் கொள்வீர்கள்.இன்று மகா விஷ்ணு வழிபாடு சிறப்பு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

மகர ராசி அன்பர்களே!

சட்டத்திற்குப் புறம்பான நிலங்களை வாங்காதீர்கள் . பங்குச்சந்தை வியாபாரத்தில் பாதகமாக நிலையை பார்ப்பீர்கள். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் பகைக்கு ஆளாவீர்கள். நண்பர்களிடம் வாங்கிய கடனை செலுத்தி நாணயமாக நடந்து கொள்ள மறக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் விழுந்து கை கால்களளில் சிறிய காயமடைவீர்கள்.
சிவபெருமானை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் செய்தி கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள்.

கும்பராசி அன்பர்களே!

பேச்சுவார்த்தை மூலமாக பெரிய சாதனை புரிவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி பெண்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். படிப்பிற்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு செய்வீர்கள். பங்குச் சந்தை முதலீடுகளில் லாபத்தை அடைவீர்கள். வியாபாரத்திற்காக கேட்ட பணத்தை பெறுவீர்கள். காதலியின் மனம் கோணாமல் அன்பாக நடப்பீர்கள்.அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

இரக்க சிந்தனையோடு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த உற்சாகமாகப் பேசுவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். புதிய வீடு கட்ட திட்டமிடுவீர்கள்.
விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!