gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (27.02.24)

சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று முழுவதும் திரிதியை, இன்று அதிகாலை 04.10 வரை உத்திரம். பின்னர் அஸ்தம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

 

மேஷ ராசி அன்பர்களே!

ஏதாவது ஒரு மனக்கவலை இதயத்தை அழுத்துவதால் தூக்கம் இழப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான பணத்தை திரட்ட சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவும் குழப்பமான போக்கால் முடிவு எடுக்க தடுமாறுவீர்கள்.. பணத்தைக் கையாளுவதில் கவனம் இல்லை என்றால் இழப்பை சந்திப்பீர்கள். வியாபாரம் சற்று சறுக்கல் ஆக நடப்பதால் சங்கடப்படுவீர்கள்.இன்று அம்பிகையை தரிசிக்க நற்பலன் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே!

சிறிய தொழில் தொடங்குவீர்கள். அதற்கான அரசாங்கக் கடன் பெறுவீர்கள். வெளிவட்டாரப் பழக்கங்களால் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பள்ளிப் பிள்ளைகள் படிப்பில் அக்கறையாக படிப்பீர்கள். அரசாங்க வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் கூடும். காதலிக்காக கடன் வாங்கி செலவு செய்வீர்கள். நண்பரிடம் உதவி பெறுவீர்கள்.
முருகப்பெருமான் வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.




மிதுன ராசி அன்பர்களே!

திடீரென்று பணம் வந்து திக்கு முக்காடி போவீர்கள். தொழிலை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். வீட்டில் மக்கள் செல்வம், மழலைச் சத்தம் கேட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். கணினித்துறையில் சாதனை நிகழ்த்துவீர்கள். பெரியோர்களின் அன்பும் ஆசியும் பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் வருமானத்தை அதிகரிப்பீர்கள்
அம்பிகையை வழிபடுவது நன்மை தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் நகைகள் வாங்கி சந்தோஷப்படுவீர்கள். சகோதர உறவுகள் உதவியால் பிரச்சனையிலிருந்து மீண்டு வருவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமையை விலக்குவீர்கள். அண்டை வீட்டாருடன் அன்பாக நடந்து கொள்வீர்கள்.மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.




சிம்ம ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் எதிர்பாராத நன்மைகள் அடைவீர்கள். தொழிலில் நினைத்ததைவிட லாபம் பெறுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக நடப்பதால் பணவரவு அதிகரித்து மன மகிழ்ச்சி கொள்வீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் பரபரப்பாக இருக்கும். பங்குப் பரிவர்த்தனையில் பெருந்தொகையை முதலீடு செய்வீர்கள்.விநாயகர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி அன்பர்களே!

வளர்பிறைச் சந்திரன் என்பதால் நஷ்டங்கள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். சின்னச் சின்னத் தோல்விகளை தாண்டி வருவீர்கள். நீர்க்கட்டி பிரச்சினைக்காக மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வீர்கள் . வியாபாரம் சுமாராக நடந்து தொழில் துறைகளில் சிறிய பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். உறவினர்கள் உதவ மாட்டார்கள்.
மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்அலைச்சலுடன் வீண் விவாதங்களையும் தவிர்க்கவும்.




துலா ராசி அன்பர்களே!

என்னதான் அக்கறையாக வேலை பார்த்தாலும் மேல் அதிகாரிகள் குறை கூறலுக்கு ஆளாவீர்கள். அவர்களை திருப்திப்படுத்த இயலாமல் திண்டாடுவீர்கள். தொழிலாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு வராததால் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள். . மனைவி குறை சொல்வதிலேயே குறியாக இருப்பதால் வீட்டுக்கு வர விரும்ப மாட்டீர்கள்.
சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

நல்ல காரியங்களை மளமளவென்று நடத்துவீர்கள். நினைத்த இடத்தில் கேட்ட உதவியை பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த இடமாறுதலில் செல்வீர்கள். பழைய கடன்களை அடைக்க வழி தேடுவீர்கள். வாக்குத் தவறாத உங்கள் நடத்தையால் செல்வாக்கை உயர்த்துவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.




தனுசு ராசி அன்பர்களே!

தொடரும் தோல்விகளை உங்களை விட்டு துரத்துவீர்கள். பங்குப் பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டுவீர்கள். லாட்டரி யோகமும் பெறுவீர்கள். இதமான பேச்சால் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூரிலிருந்து இனிப்பான தகவல் வந்து குடும்பத்தினரோடு குதூகலம் அடைவீர்கள்.
ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

மகர ராசி அன்பர்களே!

வேண்டாதவர்கள் செய்யும் தீங்கால் விசனப்படுவீர்கள். பழைய பகையால் பாதிப்படைவீர்கள். இருப்பினும் தொழில்துறைகளில் ஏற்றம் காண்பீர்கள். பங்கு பரிவர்த்தனைகளில் கணிசமான பலனைப் பெறுவீர்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் விரயச் செலவு ஏற்பட்டாலும் நண்பரின் உதவியால் நன்மை அடைவீர்கள்.பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.




கும்பராசி அன்பர்களே!

யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். நான் சொல்வதுதான் சரி என்று விவாதம் செய்யாதீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை ஒரு நாள் ஒத்தி வையுங்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யாதீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். கடன் வாங்காதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.இன்று வீரபத்திரரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

மீனராசி அன்பர்களே!

வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்குவீர்கள். நகை வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்து குஷிப்படுத்துவீர்கள். இல்லாதவர்களுக்கு பண உதவி செய்து இன்பம் காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டால் அலுவலகத்தில் அந்தஸ்தை உயர்த்துவீர்கள்.விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!