gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (17.02.24)

சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.52 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று பிற்பகல் 02.02 வரை கிருத்திகை. பின்பு ரோகிணி. அஸ்தம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

நினைத்த காரியங்களை தடை இன்றி நடத்தி மள மளவென்று பொருளாதாரத்தை பெருக்குவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் கொடியை பறக்க விட்டு செல்வாக்கை காட்டுவீர்கள். கனவில் காதலித்த பெண்ணை நனவில் கை பிடித்து சந்தோச நடை போடுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகளை நீக்குவீர்கள். பெரிய மனிதரின் சந்திப்பால் அரிய காரியங்கள் செய்வீர்கள்.இன்று சரபேஸ்வரரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கண் காது போன்ற உறுப்புகளில் நோய் தொந்தரவு ஏற்பட்டு மருத்துவச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் சரிவுகளை சந்திப்பீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். பெண்கள் மேல் ஆசைப்பட்டு பிரச்சனைகளை சந்திக்காதீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் தன்மூப்பாக திரிந்து பிரச்சனையில் சிக்குவார்கள்.சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

அலட்சியமான போக்கால் சிலர் அரசாங்க வேலையை இழப்பீர்கள். தூர தேச பயணங்களளில் துன்பத்தை அனுபவிப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதில் அவசரம் காட்டாதீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கை இழப்பீர்கள். பிள்ளைகள் பெரிய பிரச்சனையை கொண்டு வருவார்கள். வெளியூரில் வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள்.அம்பிகையை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்குவது நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கடக ராசி அன்பர்களே!

புதிய தொழிலில் அதிக லாபம் பார்ப்பீர்கள். மக்கள் பணி செய்து அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பொருளாதாரத்தை குவிக்க புதுப்புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தங்க வளையல் வாங்கி கொடுத்து விரும்பிய பெண்ணை மடக்குவீர்கள். உங்களை முடக்கி போட்ட மூட்டு வலி பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபட, சிரமங்கள் பெரிதும் குறையும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் மனைவி சந்தோஷ பூக்களை தூஙவுவதால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். வியாபாரத்தில் வெற்றி பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். உடலை வருத்தும் சின்ன சின்ன நோய்களுக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். காதல் பெண்ணின் கடைக்கண் பார்வையால் கணினி துறையில் உச்சம் தொடுவீர்கள்.சிவபெருமானை வழிபட்டு இன்றைய நாளை தொடங்க, எதிலும் வெற்றியே ஏற்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

கவனக்குறைவாக இருந்தால் வீட்டில் பணம் களவு போகும் நிலைக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றி பொருள் இழப்பை சந்திப்பீர்கள். கொடுத்த கடனை திருப்பி அடைக்க முடியாமல் மரியாதை குறைவு ஏற்பட்டு மனம் வருந்துவீர்கள். பிள்ளைகளின் பிரச்சனையால் வீட்டில் நிம்மதி குறைந்து காணப்படுவீர்கள். ஆடம்பரமாக செலவு செய்வீர்கள்.தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலா ராசி அன்பர்களே!

விதண்டாவாதமாக பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்காதீர்கள். அடகு வைத்த நகையை மனைவிக்கு மீட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் மந்தமான நிலையை காண்பீர்கள். வெளியூர் பயணங்களில் வீண் செலவு செய்வீர்கள். வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு கை காலில் அடிபடுவீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக இருங்கள்.லட்சுமி நரசிம்மரை தியானிப்பதன் மூலம் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகி திருப்தி அடைவீர்கள். வியாபாரத்தில் கிடுகிடு லாபம் பார்ப்பீர்கள். பொறுப்பாக நடந்து உறவினர்கள் மத்தியில் மரியாதையை உயர்த்தி கொள்வீர்கள். வசீகரமான பேச்சால் இளம் பெண்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். காதலில் வெற்றி பெறுவீர்கள். தந்தையாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வீர்கள்.இன்று மகான் ராகவேந்திரரை வழிபடுவதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

தொழிலை வெகு சிறப்பாக நடத்தி பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். சின்ன சின்ன தொல்லைகளால் பாதிக்கப்படுவீர்கள். எதிரிகள் உண்டாக்கும் இடையூறுகளைத் தாண்டி வருவீர்கள். அறிமுகம் இல்லாத பெண்களிடம் அதிக நெருக்கம் காட்டாதீர்கள். தொண்டையில் புண் ஏற்பட்டு அதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள். ஆஞ்சநேயரை வழிபட எண்ணங்கள் நிறைவேறும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

பஞ்சு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராமல் புரள்வீர்கள். புதுப்புது சிக்கல்கள் தோன்றி பொருளாதார பாதிப்பு அடைவீர்கள். மற்றவர்கள் மத்தியில் மரியாதை குறைந்து மனம் சங்கட்டப்படுவீர்கள். காதல் விவகாரங்களில் பின்னடைவு ஏற்பட்டு வருந்துவீர்கள். பிள்ளைகளால் பெரும் தொல்லைகளை சந்திப்பீர்கள். கடனை அடைக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பராசி அன்பர்களே!

பிள்ளைகளின் வெற்றியால் பெருமிதம் அடைவீர்கள். அரசாங்க ஊழியர்கள் அனுகூலமான பயனை பெறுவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கை உயர்த்தி கொள்வீர்கள். கையில் கணிசமாக காசு புரளவதால் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெருவாரியாக செலவு செய்து பெண்கள் மனசை கொள்ளை அடிப்பீர்கள்.அம்பிகை வழிபாடு மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

கணவன் மனைவி உறவை கல்கண்டாய் இனிக்க செய்வீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். வணிகத்தில் ஈடுபடும் நீங்கள் வலுவான லாபத்தை அடைவீர்கள். கலகலப்பாக பேசி காதலியின் கவலையை போக்குவீர்கள். வெளிநாட்டில் கடுமையாக உழைத்து வீட்டிற்கு பணம் அனுப்புவீர்கள். மனதை வாட்டிய நோய்ப் பயத்திலிருந்து விடுபடுவீர்கள்.பிரத்தியங்கிரா தேவி வழிபாடு பிரச்னைகளைக் குறைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!