சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 03.20 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று இரவு 09.16 வரை சதயம். பின்பு பூரட்டாதி. இன்று அதிகாலை 01.50 வரை உத்திராடம். பின்னர் திருவோணம். புனர்பூசம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே!
எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்கள் கிடைத்து எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்து நன்மதிப்பை அடைவீர்கள். சிக்கலான விஷயங்களை பெண்கள் மூலமாக தீர்த்து வைப்பீர்கள். விற்பனையில் கிடைத்த பணத்தை தொழிலில் முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மிகவும் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள்.
மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
ரிஷப ராசி அன்பர்களே!
கணிசமான லாபத்தை ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் அடைவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனை காண்பீர்கள். நண்பர்கள் மூலமாக புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். சுவாசப் பிரச்சனையை தீர்க்க எக்ஸ்ரே எடுப்பீர்கள். காதலிக்கும் பெண்ணிடம் முக்கிய உதவி பெறுவீர்கள்.இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மிதுன ராசி அன்பர்களே!
என்றோ செய்த நல்ல காரியத்திற்கான பலனை இன்று அறுவடை செய்வீர்கள். குடும்பத்திற்குள் இருந்த குழப்பத்தை நீக்கி குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். கவனக்குறைவாக வேலை செய்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவீர்கள். .ஆன்மிகப் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
கடக ராசி அன்பர்களே!
வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசாதீர்கள். வளைவுகளில் திரும்புகின்ற பொழுது மிகவும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் விபத்து ஏற்பட்டு காயம் அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். சிறியோர்களின் பழக்கத்தினால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். கடுமையாக முயற்சி செய்து கடனை அடைக்க நினைப்பீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
சிம்ம ராசி அன்பர்களே!
காதலி உங்கள் கருத்துக்கு எதிராக நடப்பதால் கவலைப்படுவீர்கள். புதிய வாகனம் வாங்கி பெருமைப்படுவீர்கள். வியாபாரிகள் பொருளாதார முன்னேற்றம் பெறுவீர்கள். கட்டிடத் தொழிலில் எலக்ட்ரீசியன்கள் தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள். எதிர்கால நலனுக்காக நிலத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்களின் சேமிப்பை தக்க சமயத்தில் பயன்படுத்தி கொள்வீர்கள்.துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கன்னி ராசி அன்பர்களே!
நீண்ட தூரப் பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மறக்காதீர்கள். ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். மாமியார் மருமகள் சண்டையால் மன நிம்மதியை இழப்பீர்கள். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.சிவபெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாக முடியும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
துலா ராசி அன்பர்களே!
மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பீர்கள். தொழிலுக்கான பணத்தைப் புரட்ட சிரமப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்காமல் தடுமாறுவீர்கள். அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். நெருக்கமான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவீர்கள். பேசும் வார்த்தையில் கோபத்தைக் கலக்காதீர்கள்.விநாயகப்பெருமானை வழிபடுவ தன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
கூட்டாகச் செய்யும் தொழிலில் கொள்ளை லாபம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல பலனை அடைவீர்கள். தொழிலை நிலைநிறுத்த பாடுபடுவீர்கள். நினைத்தது நிறைவேற நண்பர்களின் உதவி பெறுவீர்கள். மனைவி உங்களைப் புரிந்து கொண்டு நடப்பதால் மன நிம்மதி அடைவீர்கள்.துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
தனுசு ராசி அன்பர்களே!
நண்பரின் பிரச்சினையைத் தீர்க்க காவல் நிலையம் செல்வீர்கள். வியாபாரத்தைப் பெருக்க இரவு பகலாக உழைப்பீர்கள். தொழிலாளர் பற்றாக்குறையால் வேலையில் சுணக்கம் காண்பீர்கள். மேலதிகாரிகள் குறை சொல்லாத அளவிற்கு பணியில் கவனமாக இருப்பீர்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு உங்கள் வேலையைக் கோட்டை விடாதீர்கள்.
ஆஞ்சநேயரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.
மகர ராசி அன்பர்களே!
வாக்குத் திறமையைக் காட்டி வேலைவாய்ப்பைப் பெறுவீர்கள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள் சாதனை படைப்பீர்கள். பொருளாதாரச் சரிவால் உறவினர்கள் மத்தியில் மரியாதை குறைவை சந்திப்பீர்கள். . கேட்ட இடத்தில் பண உதவி பெறுவீர்கள். வேலைப்பளு குறைந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபடு வதன் மூலம் வீண் பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.
கும்பராசி அன்பர்களே!
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிப்பீர்கள். அதையும் தாண்டி அவமானங்களையும் சந்திப்பீர்கள். வேலை விஷயமாக அலைச்சலால் பாதிக்கப்படுவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். ஜீரணக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். எடுத்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். வாகனக் கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள்.அம்பிகை யை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி உற்சாகம் தருவதாக இருக்கும்.
மீனராசி அன்பர்களே!
ஞாபக மறதியால் நல்ல வாய்ப்பை கோட்டை விடுவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள். வியாபாரத்தில் ஏற்ற நிலையை காண்பீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் அடைந்து மன நிம்மதியை பெறுவீர்கள்.தட்சிணாமூர்த்தியை வழிபடு வதன் மூலம் காரியத்தடைகள் விலகும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1