Cinema Entertainment

ஜோதிகாவை வைத்து சூர்யாவை கடுப்பேற்றிய விக்ரம்

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சில நடிகர்களுக்கிடையே போட்டிகள் நிலவி வரும் . அப்படி எம்ஜிஆர்- சிவாஜி தொடங்கி இப்போது இருக்கும் சிவகார்த்திகேயன்- விஜய் சேதுபதி வரை பல நடிகர்கள் இரு துருவ நட்சத்திரங்களாக இருந்து வந்தனர். அந்த வரிசையில் ஒருவர்கள் தான் விக்ரம் – சூர்யா . இந்த இரண்டு நடிகர்களுக்குமே மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது,







இயக்குனர் பாலா தான் . இதன் பிறகு பிதாமகன் படத்தில் விக்ரமும் , சூர்யாவும் ஒன்றாக நடித்திருந்தனர் . இந்த திரைப்படம் இருவருக்குமே நல்ல வரவேற்பை பெற்று தந்தது . ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே சூர்யாவின் ஒரு சில காட்சிகளை நீக்கிவிடுமாறு , இயக்குனர் பாலாவிடம் கேட்டிருக்கிறார் இயக்குனர் விக்ரம்.  பின்னர் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சூர்யா அப்போதிலிருந்து விக்ரமிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம் . அது மட்டுமல்லாமல் அப்போது சூர்யாவை வெறுப்பேற்றுவதற்காக தொடர்ந்து ஜோதிகாவை ,

தன்னுடைய படங்களில் விக்ரம் நடிக்க வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.  அந்த வகையில் விக்ரமும் , ஜோதிகாவும் இணைந்து தூள், அருள் போன்ற படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் பிறகு தான் விக்ரம் , சூர்யா இருவருக்கும் இடையே ,

பெரிய அளவில் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த காரணத்தினால் தன்னுடைய திருமணத்திற்கு கூட விக்ரமுக்கு சூர்யா அழைப்பு கொடுக்கவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!