Cinema

சூட்டிங் முடிந்து வீட்டுக்கே செல்லாத விஜய் – ஏன்?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து வரும் நிலையில், சூட்டிங் முடிந்து வீட்டுக்கே செல்லாமல் விஜய் தனியாக தங்கி வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருபவர், நடிகர் விஜய். ரஜினி, கமல்ஹாசன் ஆகிய சீனியர் நடிகர்களுக்கு, தென்னிந்தியாவின் மிகப்பிரபலமான நடிகராக விஜய் இருந்து வருகிறார்.




விஜய்யின் GOAT படத்தின் கதை இதுவா? வெங்கட் பிரபுவின் ஒன் லைன் ஸ்டோரி.. சோசியல் மீடியாவை தெறிக்க விடும் ரசிகர்கள் | Tamil360Newz

இன்னும் நடிகர் விஜய் குறித்து அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகள் வட்டம் அடித்துக்கொண்டே இருப்பதும், அதைத் தட்டிவிட்டு நடந்து செல்வதும் இயல்பு. சமீபத்தில் ஜெயிலர் பட பாடல் வெளியீட்டு விழாவின்போது கூட, நடிகர் ரஜினிகாந்த் பேசியது, விஜயை தாக்கும் வண்ணம் இருந்ததாகப் பலரும் இணையத்தில் கொதித்தனர். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யும் லியோ பட பாடல் வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் என்பவர் ஒருவர் தான் என்றும்; ஆனால், ஒரு தந்தையைப் போல் மகன் நடந்துகொள்ள முயற்சிப்பது தவறு இல்லை என்றும் தனது கருத்தினைப் பதிவு செய்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இணையத்தில் சண்டை முற்றியது. அது அப்படியே திரையுலகில் யார் வசூல் சக்கரவர்த்தி என்னும் ரேஞ்சுக்கு சென்றது. குறிப்பாக, லியோ பட ரிலீஸின்போது 10 நாட்களுக்குப் பின் வசூல் டல்லடித்தது. மேலும், அது ஜெயிலர் பட வசூலை முறியடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.




இதனால் ரஜினி ரசிகர்கள், விஜயை சமூக வலைதளங்களில் கலாய்த்தனர். இது ஒருபுறமிக்க, சமீபத்தில் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய விஜய் மீது சிலர் செருப்பினை எறிந்தனர். அன்றிலிருந்து விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் கலாய்ப்பதும், பதிலுக்கு ரஜினி ரசிகர்களை விஜய் ரசிகர்கள் பங்கம் செய்வதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து புதிய சர்ச்சை ஒன்று வட்டமடிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 68ஆவது படமான GOATற்கான படப்பிடிப்பு தாய்லாந்து, சென்னை கோவளம் ஆகியப் பகுதிகளில் நடந்து வருகிறது. பொதுவாகவே, கோவளம் பகுதியில் வீக் எண்ட் என்றாலே ஒவ்வொருவரும் வேறு ஒரு வைப்பில் சுற்றிக்கொண்டு இருப்பர். அதிலும் வெங்கட் பிரபு கேங்கை பற்றி தான் பலருக்கும் தெரியுமே. எந்நேரமும் மாலை நேரத்தில் பார்ட்டி மோடுக்கு மாறி கலாட்டா செய்யத்தொடங்கிவிடுவார்கள். அந்தவகையில் அக்கூட்டணியில் இணைந்த விஜய்யும் இந்த பார்ட்டி மோடில் புதிதாக ஐக்கியமாகியுள்ளாராம்.

கோவளம் பகுதியில் இருந்து அரைமணிநேரத்தில் நீலாங்கரை வீட்டுக்கு விஜய் எளிதில் போய்விடலாம். ஆனால், விஜய்யும் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அவரது சகாக்களுடன் சேர்ந்து அருகில் இருக்கும் ரிசார்ட்டிலேயே இரவில் தங்கி, பார்ட்டி மோடில் வைப் செய்ய ஆரம்பித்துவிட்டாராம். இதனால் பலநேரங்களில், பக்கத்தில் இருக்கும் வீட்டுக்குச் செல்வது இல்லையாம். இந்த தகவல் தான் தற்போது ஹாட் டாபிக்காக கோலிவுட் வட்டாரத்தில் வலம் வருகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!