பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று ஜோவிகா வெளியேறிய பின், மாயா கேங் பயங்கர அப்செட் ஆனது. ‘நம்ம கேங்ல இருந்து ஒவ்வொருத்தரா போறாங்க’ என்று பாத்ரூம் ஏரியாவில், பூர்ணிமாவிடம் நேரடியாக புலம்பினார் மாயா. அதன் பின், வழக்கமான கமல் எபிசோட் குறித்த வாதங்களை ஒவ்வொரு டீம் மேட்ஸூம் பகிர்ந்து கொண்ட பின், விளக்குகள் அணைக்கப்பட்டு உறங்கச் சென்றனர். அப்போது, மாயா, பூர்ணிமா, விக்ரம் ஆகிய மூன்று பேரும் தனிமையில் அமர்ந்து பேசினர்.
அப்போது, பிரதீப்க்கு ரெட் கார்டு தூக்கியது பற்றி பேசத் தொடங்கினர். மாயா தன்னுடைய கருத்தை கூறிக் கொண்டிருந்த போது, வழக்கம் போல ‘டைட்டில் வின்னர்’ விக்ரம், ‘ஜிங்’ அடித்துக் கொண்டிருந்தார். சில சமயம், மாயா சில உண்மை கருத்துக்களை வைக்கும் போது, ‘அது இல்லடா..’ என்று மீண்டும் அவரை குழப்பிக் கொண்டிருந்தார். இந்த உரையாடலில் பூர்ணிமா எதுவுமே பேசவில்லை என்பது தான், ஹைலைட். இதோ அந்த உரையாடல்.
மாயா: எனக்கு இப்போ யோசிச்சா, பிரதீப் போயிருக்க கூடாது தான். அவரை அப்படி அனுப்பியிருக்க கூடாது தான். எதுக்காக நான் ரெட் கார்டு தூக்குனேன்னு என்னை நானே கேள்வி எழுப்புறேன். அவருடைய செயல்பாடுகள் மோசம் தான். இதை அவர் வெளியே போய் எதிர்கொள்ள வேண்டுமே, இந்த பெயரோடு போய் அவர் அதை வெளியே எதிர்கொள்ள வேண்டுமே என்பதை யோசித்தேன். அதனால் தான் அவனிடம் பேசினோம். அந்த நேரத்தில் பேசுவதற்கான நேரமும் இல்லை, பயம் தான் இருந்தது. என்னை தனியா கூட்டிட்டு போயிறாதீங்க, சேர்ந்து கூட்டிட்டு போயிருங்க!
விக்ரம்: சேர்ந்து போயிடலாம்
மாயா: தனியா போயிடக் கூடாது. எல்லா நல்லவங்களும் கிளம்பிட்டாங்க.
விக்ரம்: நிக்ஸனிடம் அதை தான் பேசிட்டு இருந்தேன்.
மாயா: எல்லா நல்லவங்களும் போய்ட்டாங்க. அப்போ இந்த ஷோ, கேரக்டர் பத்தினது கிடையாது. வெளிப்படுத்துவதை பற்றி தான். யோசித்து பாரு, யுகேந்திரன், அக்ஷயா, ஜோவிகா எல்லாரும் போய்ட்டாங்க. இன்னும் 3 வாரம் இருப்பேன் வெச்சுக்கோ, சண்டை போடாமல் சமாதானமும் போனோம்னு வெச்சுக்கோ, ஈஸியா 3வது வாரம் நான் எலிமினேட். காரணம், நாம நல்லவங்களா இருப்போம்.
விக்ரம்: நல்லவங்கனு இல்லடா.. நம்மை பத்தி வேறு விதமா வெளிப்படுத்துறாங்கள்ள.. அதை தடுக்காம இருந்தா வெளியே போயிடுவோம். நம்ம மேல ஒரு விசயத்தை வைக்கிறாங்க. அதை தடுக்காமல் இருந்தோம்னா போய்டுவோம். சண்டை போட வேண்டாம், நம்ம மேல அதை வர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நாம இருக்கலாம்.
என்று அந்த உரையாடலில் மாயா மற்றும் விக்ரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1