Big Boss Tamil 7 Cinema Entertainment

Big Boss Tamil 7: பிக் பாஸில் Bulk அமவுன்டுடன் வெளியேறிய விக்ரம்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சரவணன் விக்ரம் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.




இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் கேப்டன் யாரும் இல்லை. இதனால் போட்டியாளர்கள் குஷி ஆகி விட்டார்கள். அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்கள். இதனால் பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆகி இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க்:

மணி உடைய பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அதன் பின் தினேஷ் அம்மா, அப்பா வருகிறார்கள்.இதனை அடுத்து விஷ்ணு அம்மா, அர்ச்சனா அம்மா, அப்பா வருகிறார்கள். பின் நேற்று நிகழ்ச்சியில் ரவீனாவின் உறவினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் வெளியில் நடந்து கொண்டிருப்பதை கோட்வோர்டில் சொல்லி இருக்கிறார்கள். இதனால் விதியை மீறி இவர்கள் இருவரும் சொல்லியதால் பிக் பாஸ் அவர்களை உடனடியாகவே வெளியில் அனுப்பி விட்டார்கள்.




விக்ரம் தங்கை சொன்னது:

அதற்குப்பின் மாயாவின் அம்மா, விசித்திரா குடும்பம், நிக்சன் நண்பர், விஜய் வர்மா உறவினர் ஆகியோர் வந்து இருக்கிறார்கள். இதனை அடுத்து விக்ரமின் அம்மா, அப்பா, தங்கை பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். விக்ரமனை கூட்டிக்கொண்டு தனியாக அவர் தங்கை அறிவுரை கூறியிருக்கிறார். அதோடு உறவினர்களும் தங்களால் முடிந்தவரை ஹிண்ட் எல்லாம் கொடுத்து இருந்தார்கள். குறிப்பாக, சரவணன் தங்கை மாயா- பூர்ணிமா உனக்கு முன் ஒன்று சொல்லி உன் முதுகுக்குப் பின்னால் வேறு ஒன்று சொல்கிறார்கள்.

வெளியேறிய சரவண விக்ரம்:

அவர்களிடம் பேசுவதை நிறுத்திக்கொள் என்று சொன்னவுடன் விக்ரமும் அவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் சரவணன் விக்ரம் வெளியேறி இருக்கிறார். இவர் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து தற்போது வரை பெரிதாக எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபாடுடன் செய்யவில்லை.




சரவண விக்ரம் வாங்கிய சம்பளம்:

மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் அதை கண்டு கொள்ளவும் இல்லை, தலையிடுவதும் இல்லை. அதோடு அடிக்கடி இவர், தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்றும் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் ரசிகர்களுக்கு மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இவர் வெளியேறியது சரிதான் என்று பலருமே கூறி வருகிறார்கள். மேலும், இவர் ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை 84 நாட்கள் இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு 15 லட்சம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!