gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/மகாபாரதப் போரில் அபிமன்யுவின் மரணத்தை கிருஷ்ணன் தடுக்காதது ஏன்?

மகாபாரத கதையை மேலோட்டமாக பார்த்தால் விடை தெரியாத, காரணம் புலப்படாத பல கேள்விகள் நமது மனதில் தோன்றும். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் கதைகளை கவனித்து பார்த்தால், ஏதோ காரணத்திற்காக தான் அனைத்தும் நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற காரணம் விளங்கும். அப்படி பலருக்கும் இருக்கும் ஒரு கேள்வி தான், அனைத்தும் தெரிந்த கிருஷ்ணர் எதற்காக அபிமன்யுவின் மரணத்தை தடுத்து, அவரின் உயிரை காப்பாற்றவில்லை என்பது. அதற்கான காரணத்தை இங்கே காணலாம்.




 

அபிமன்யுவின் மரணத்திற்கான காரணம்:

மகாபாரதம் மட்டுமல்ல குருஷேத்திர போரின் பின்னணியிலும் பலரும் அறியாத பல ரகசியங்கள் ஒழிந்துள்ளன. காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போது போல் பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றது முதல் மகாபாரதம் முடிவு வரை நடந்த பல விஷயங்களுக்கு பிறகும் ஒரு வலுவான காரணம் உள்ளது. அது போல் அபிமன்யுவின் மரணத்திற்கும், அவரது மரணம் பற்றி முன்கூட்டியே தெரிந்தும் கிருஷ்ணர் அதை தடுத்து நிறுத்தாததற்கும் ஒரு காரணம் உள்ளது.




யார் இந்த அபிமன்யு?

அர்ஜூனனுக்கும், கிருஷ்ணனின் தங்கை சுபத்திரைக்கும் பிறந்த மகன் தான் அபிமன்யு. தாயின் கருவில் இருக்கும் போது போர் வியூகங்களை கற்றறிந்த மாவீரன்.தனது தாய் சுபத்திரையை விட திரெளபதி மீது அதிக பாசம் கொண்ட அபிமன்யு, திரொபதியின் சபத்தை நிறைவேற்றுவதற்காக தனது 16 வது வயதில், திருமணம் முடிந்த கையோடு போர்களத்திற்கு புறப்பட்டான். மகாபாரத போரின் போது எத்தனையோ வீரர்கள் இருந்தாலும், தனது அசுர வேகத்தால் கெளரவர்கள் படையை நடுங்க வைத்தான் அபிமன்யு.

பாண்டவர்களின் குருவான துரோனாச்சாரியார், அர்ஜூனன் உள்ளிட்ட பலரும் எதிர்க்க தயங்கிய பீஷ்மர், கெளரவர்களின் தலைவன் துரியோதனன் என அனைவரையும் கதிகலங்க வைத்தான் அபிமன்யு. அத்தகைய மாவீரன், கடைசி வரை சக்கர வியூகத்தில் இருந்து வெளியே வரும் வழியை மட்டும் கற்றுக் கொள்ளவே இல்லை. அபிமன்யுவின் மரணம், அவனது பெரியப்பாவான கர்ணன் கையாலேயே நடக்க போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்தும், காப்பாற்ற முடிந்தும், அதை தடுக்காமல் கிருஷ்ணர் அமைதியாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.




முதல் காரணம் :

அபிமன்யு, சந்திர தேவனின் மகன் வர்ஷாவின் அவதாரம் ஆவான். சந்திர வம்சமானது, அவரது மகன் போதாவுடன் பூமியில் துவங்கியது. அவரது வழியில் வந்த சாந்தனு, சத்தியவதி என்ற மீனவ பெண்ணை காதலித்து, அவளை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். சத்தியவதிக்கு பிறகும் மகன்களே, உங்களுக்கு பிறகு அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்வார்கள் என வாக்கு கொடுத்தால் மட்டுமே தனது பெண்ணை திருமணம் செய்து வைக்க சம்மதிப்பதாக நிபந்தனை விதித்தார் சத்தியவதியின் தந்தை.

சாந்தனுவும் இதை ஏற்றுக் கொண்டதால் சாந்தனு – சத்தியவதியின் திருமணம் நடைபெற்றது. ஆனால் சாந்தனுவுக்கு ஏற்கனவே திருமணமாகி பிஷ்மர் என்ற மகன் இருந்தார். இந்த சமயத்தில் சாந்தனுவுக்கும், சத்தியவதிக்கும் இரண்டு மகன்கள் பிறந்தனர். இப்போது பீஷ்மர் இளவரசராக இருக்கும் போது, சத்தியவதியின் மகன்களை எப்படி இளவரசர்களாக அறிவிப்பது என சாந்தனு குழப்பத்தில் இருந்தார். தனது தந்தையின் மன வேதனையை போக்க, தான் எந்த சூழலிலும் அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பில் உரிமை கோர மாட்டேன் என தந்தைக்கு வாக்களித்தார் பீஷ்மர்.




பிரம்மச்சரியம் ஏற்ற பீஷ்மர் :

அதுமட்டுமின்றி தனக்கு பிறக்கும் பிள்ளைகளால் அஸ்தினாபுரத்தின் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான் திருமணமே செய்து கொள்ள போவதில்லை என பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். ஆனால் சத்தியவதிக்கு பிறந்த மகன்கள் இருவரும் இளம் வயதிலேயே உயிரிழந்தனர். இதனால் அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்க ஆள் இல்லாமல் போனது. அரச குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்பதற்காக வேத வியாசர் மூலம் அம்பிகாவிற்கு திருதிராஷ்டிரரும், அம்பலிகாவிற்கு பாண்டுவும் பிறந்தனர்.

சந்தினுக்கு கிருஷ்ணர் கொடுத்த வாக்கு :

திருதிராஷ்டிரர், அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றதால் சந்திர வம்சம் முடிவடைந்தது. ஆனால் சந்திர வம்சம் மீண்டும் பூமியில் நிறுவப்பட வேண்டும் என கிருஷ்ணர் நினைத்தார். இதனால் சந்திர தேவரின் மகன் பூமியில் பிறக்க வேண்டும் என வேண்டினார் கிருஷ்ணர். ஆனால் தனது மீது மிகுந்த பாசம் வைத்திருந்த சந்திர தேவன், அவனை பிரிய மனம் இல்லாமலும், கிருஷ்ணரின் வேண்டுகோளை மறுக்க முடியாமலும் ஒப்புக் கொண்டார். ஆனால் தனது மகனை 16 ஆண்டுகள் மட்டுமே பிரிந்திருக்க முடியும் என்ற நிபந்தனையை விதித்தார் சந்திர தேவர். இதனை கிருஷ்ணர் ஏற்றதால், சந்திர தேவரின் மகன் அபிமன்யுவாக 16 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்தான்.

​​




அர்ஜூனனை தடுத்த கிருஷ்ணன் :

அபிமன்யு, சுபத்திரையின் வயிற்றில் கருவாக தோன்றினான். சக்கர வியூகம் பற்றி நன்கு அறிந்திருந்த அர்ஜூனன், தனது மனைவி கருவுற்றிருக்கும் சமயத்தில் சக்கர வியூகம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான். சக்கர வியூகத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என்ற வழியை அர்ஜூனன் சொல்ல துவங்கும் சமயத்தில் சுபத்திரை தூங்கிப் போனாள். ஆனாலும் வயிற்றில் இருந்த அபிமன்யு அதை கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணன், சக்கர வியூகத்தில் இருந்து வெளியே வரும் சூட்சமத்தை அர்ஜூனனை சொல்ல விடாமல் தடுத்தார். கர்ப்பிணியான சுபத்திரை தூங்கி விட்டதால் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என அழைத்து சென்று விட்டார்.

சக்கர வியூகத்தை அபிமன்யு முழுவதுமாக அறிந்தால் அவனை யாராலும் வீழ்த்த முடியாது. பிறகு சந்திரனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என்பதால், அர்ஜூனை முழு வியூகத்தையும் சொல்ல விடாமல் தடுத்தார். அதனாலேயே 16 வயது அபிமன்யு உயிரிழப்பதையும் கிருஷ்ணரால் தடுக்க முடியாமல் போனது.

இரண்டாவது காரணம் :

போரில் அபிமன்யு மட்டும் உயிரிழக்காமல் இருந்திருந்தால் பாரத போர் பல யுகங்களை கடந்தும் நடந்து கொண்டு இருந்திருக்கும். கெளரவர்கள் அணியில் இருக்கும் அனைவரும் உறவினர்கள் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே போரில் தீவிர காட்ட அர்ஜூனன் தயக்கம் காட்டி வந்தான். தங்களை தற்காத்து கொள்வதில் மட்டுமே அவனது சக்தியை செலவழித்து வந்தான். போர் முடிய வேண்டுமானால் கெளரவர் படைகள் அழிக்கப்பட வேண்டும். அதை செய்யும் ஆற்றல் அர்ஜூனன் ஒருவனிடம் மட்டுமே இருந்தது.




அபிமன்யு மரணத்திற்கான காரணம் :

அர்ஜூனனின் ஆற்றல் வெளிப்பட வேண்டுமானால் அவனது அருமை மகன் கொல்லப்பட வேண்டும் என நினைத்தார் கிருஷ்ணர். அதனாலேயே அபிமன்யுவின் மரணத்தை தடுக்காமல் இருந்தார் கிருஷ்ணர். அதுவரை பெயரளவிலேயே போரில் பங்கேற்று வந்த அர்ஜூனன், அபிமன்யு கொல்லப்பட்ட அடுத்த நாள் முதல், மகன் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதமாக கெளரவ படைகளை ஆவேசமாக தாக்க துவங்கினான். அதற்கு பிறகு கெளரவர்கள் படை அழிந்து, போரும் முடிவுக்கு வந்தது. பாரத போர் முடிவுக்கு வருவதற்கு அபிமன்யுவின் உயிர் தியாகமே முக்கிய திருப்புமுனையாக இருந்தது.

மீண்டும் நிறுவப்பட்ட சந்திர வம்சம் :

அபிமன்யுவின் இறுதி நாளில் அவனது மனைவி உத்திரா கருவுற்றிருந்தாள். அதே சமயம் போரின் 18 வது நாளில் மற்ற பாண்டவர்களின் வாரிசுகள் அனைவரும் கொல்லப்பட்டனர். அபிமன்யு இறந்த பிறகு, அவருக்கு பிறந்த மகன் தான் பரிஷித். குருஷேத்திர போருக்கு பிறகு யுதிஷ்டிரன் ஆட்சி பொறுப்பேற்றார். பாண்டவர்கள் காலம் முடிந்ததும் பரிஷித், அஸ்தினாபுரத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றான். சந்திர வம்சம் மீண்டும் பூமியில் உதயமானது. சந்திரவம்சம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்பதற்காகவே, தனது அருமை மருமகனான அபிமன்யுவின் மரணத்தை பற்றி அறிந்தும் கிருஷ்ணரால் தடுக்க முடியாமல் போனது.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!