gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா நகரம் பற்றிய அரிய தகவல்

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான துவாரகை குஜராத்தில் அமைந்துள்ளது. தொல்லியல் துறையால் பல ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்ட துவாரகையில், கிருஷ்ண ஜெயந்தி மிக சிறப்பாகக் கொண்டாடப்படுவது உண்டு. ஆரம்பத்தில் துவாரகை தான் குஜராத்தின் தலைநகரமாக இருந்துள்ளது. இது யாதவ குலத்தவர்களின் தலைநகராகவும், ஆனந்த நகராகவும் விளங்கி உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. இங்கு ஆதிசங்கரர் நிறுவிய சாரதா பீடமும் உள்ளது. இந்த நகரம் பற்றி பலரும் அறியாத அரிய தகவல்கள் சிலவற்றை இங்கு தெரிந்து கொள்ளலாம்.




முழுமஹாபாரதம்: "கிருஷ்ணனே பரம்பொருள்!" பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 067

இந்தியாவில் உள்ள மிக புனிதமான நகரங்களில் ஒன்று துவாரகா. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்ந்து, ஆட்சி செய்ததாக சொல்லப்படும் நகரம். இந்த நகரம் கிட்டதட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக சொல்லப்படுகிறது. தனது மாமனான கம்சனை மதுராவில் வதம் செய்த பிறகு, துவாரகையின் மன்னனாக முடி சூடிய கண்ணன், வைகுண்டத்திற்கு திரும்புவதாக முடிவு செய்யும் வரை துவாரகை நகரிலேயே வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணர், துவாரகையில் இருந்து வெளியேறியதும் அந்த நகரமே கடலில் மூழ்கியது.

துவாரகை நகரில் துவாரகாதீஷ் எனப்படும் ஜகத் மந்திர், குஜராத்தில் உள்ள கோமதி நதியின் கரையில் அமைந்துள்ளது. இது முக்தி தரும் ஏழு தலங்களில் ஒன்றாகவும், திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் உள்ளது. மகிழ்ச்சியான தேசத்தின் தலைநகராக துவாரகை விளங்கியது. கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் 2200 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் வஜ்ரனபா என்பவரால் கட்டப்பட்டதாகும். கடலில் இருந்து கிருஷ்ணரால் மீட்கப்பட்ட நிலத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.




துவாரகா கோவிலுக்கு இரண்டு நுழைவு வாசல்கள் உள்ளன. இதன் வட வாசலை மோட்ச வாசல் என்று அழைக்கின்றனர். இந்த வாசல் வழியாக சென்றால் மூலஸ்தானத்தை அடையலாம். மற்றொரு வாசலான தெற்கு நுழைவு வாசலுக்கு சொர்க்க வாசல் என்று பெயர். இதன் வழியாக சென்றால் கோமதி நதியை அடையலாம். செளலக்கிய முறையிலான கட்டிடக்கலையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இது சுண்ணாம்புக்கல் மற்றும் மணல்கற்களால் கட்டுப்பட்டுள்ளதாகும். ஐந்து அடுக்குகளைக் கொண்ட இக்கோவில் 78.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். மழைக்காலத்தில் 16 நாட்கள் துவாரகை நகரம் மட்டும் வெப்பம் நிறைந்ததாக காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

துவாரகா கோவிலின் கருவறையில் அமைந்துள்ள மூலவர் விக்ரஹம் சாளகிராமத்தால் ஆனது. பார்ப்பதற்கு இது கருங்கல்லால் ஆன விக்ரஹம் என்றே காட்சி தோன்றும். துவாரகா கோவிலின் உச்சியில் ஆரஞ்சு, மஞ்சள், நீலம் என பல வண்ணங்கள் கலந்த கொடி ஒன்று எப்போதும் பறந்து கொண்டே இருக்கும். இது சூரியன், சந்திரன் இங்கு வசிப்பதன் அடையாளமாக உள்ளது. இந்த கொடியானது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றப்படுகிறது.




கிருஷ்ணனின் கையில் எப்போதும் ஓயாது சுழன்று கொண்டிருக்கும் சுதர்சன சக்கரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இது பல அசுரர்களை போரில் வென்று, வதம் செய்த மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இந்த சுதர்சன சக்கரம் பல நூற்றாண்டுகளாக துவாரகா கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இந்து புராணங்களின் படி, கிட்டதட்ட 36 ஆண்டுகளுக்கும் மேல் கிருஷ்ணன் துவாரகையை ஆட்சி செய்துள்ளார். துவாரகையில் கிருஷ்ணன், ருக்மணியை திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ருக்மணி, கிருஷ்ணன் எட்டு மனைவிகளில் ஒருவர்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!