Cinema Entertainment

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கமல்!விஜய் டிவி குறி வைத்த 5 பிரபலங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலஹாசன், இந்த சீசனோடு தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ள நிலையில்… அடுத்ததாக ஐந்து பிரபலங்களை விஜய் டிவி குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹிந்தியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு எதிராக பல சர்ச்சைகள் எழுந்தது. சில அரசியல் கட்சிகள் இந்த நிகழ்ச்சி நடத்தக்கூடாது என, போர் கொடி உயர்த்திய நிலையில், அனைத்து பிரச்சனைகளையும், சர்ச்சைகளையும், சாமர்த்தியமாக தன்னுடைய வார்த்தைகளால் சமாளித்து… வெற்றிகரமாக 7-ஆவது சீசன் வரை கொண்டு வந்த பெருமை,  உலக நாயகன் கமலஹாசனியே சேரும்.

 

கடந்த அக்டோபர் மாதம், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 8 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. கடந்த 6 சீசன்களில் இல்லாத வகையில் 2 பிக்பாஸ் வீட்டுடன் துவங்கி, பரபரப்புக்கும் சண்டை – சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

போட்டியாளர்கள் எண்ணிக்கை குறைந்த போது… அதிரடியாக 5 போட்டியாளர்களை வைல்ட் கார்டாக உள்ளே அனுப்பிய பிக்பாஸ்… பின்னர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய…  இரண்டு போட்டியாளர்களை பூகம்பம் டாஸ்க் மூலம் உள்ளே அனுப்பினார். கடந்த வாரம்… மக்கள் பலர் மழை காரணமாக வாக்களிக்காத நிலையில்… எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. எனவே இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆறு சீசர்களை விட, கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளர்களிடம் பாரபட்சம் காட்டுவது, மட்டுமின்றி மக்கள் மனசாட்சியாக பேசாமல்… சுய லாபத்திற்காக பேசுகிறார் என்கிற விமர்சனங்கள் அதிகம் முன் வைக்கப்படுகிறது.

குறிப்பாக பிரதீப்புக்கு ரெக்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரம், பல ரசிகர்களை கொந்தளிக்க வைத்த நிலையில்… இதற்கு கமல் விளக்கம் கொடுத்த விளக்கம் மழுப்பலாக இருந்ததே தவிர நேர்மையானதாக தோன்றவில்லை. அதே போல் வினுஷாவின் உருவ கேலியை தட்டி கேட்க வேண்டிய இடத்தில் கமல் இருந்த போதிலும்… அதையும் அவர் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். விசித்ரா ஷூட்டிங் ஸ்பாட்டில் எதிர்கொண்ட பிரச்சனை குறித்து பிக்பாஸ் வீட்டில் பேசியது பற்றியும் ஒரு வார்த்தை கூட கமல் கேட்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேச வேண்டிய இடத்தில் கூட அவரை திட்டியதும்,  அவர் பக்கத்தில் உள்ள நியாயத்தை பேசாமல் மாயா மற்றும் நிக்சனுக்கு ஆதரவு தெரிவித்தது போல் பேசியதும் கமலஹாசனை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்கள் பலர்…  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட நீங்கள் போட்டியாளர்கள்  செய்த தவறை சுட்டிக்காட்டி தப்பை தட்டிக் கேட்க மறுக்கிறீர்கள்? நீங்கள் அரசியலுக்கு வந்தால் எப்படி குற்றம் செய்பவர்களை நோக்கி கேள்வி எழுப்புவீர்கள் என வருத்தெடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் தற்போது தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளதால், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியோடு கமல் வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக கமல்ஹாசனின் கடைசி சீசனாக இது இருக்கும் என சில நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே விஜய் டிவி இப்போது அடுத்த தொகுப்பாளருக்கான வேட்டையையும் துவங்கி விட்டதாம். அதன்படி விஜய் டிவி 5 பிரபலங்களை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் ஓ டி டி நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் வெளியேறியதும், தொகுப்பாளராக சிம்பு மிகவும் நேர்த்தியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எனவே இந்த லிஸ்டில் முதலிடத்தில் சிம்பு உள்ளார். இதைத்தொடர்ந்து கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக பிரபலமான ஆக்ஷன் கிங் அர்ஜுன்,  நடிகர் சரத்குமார் மற்றும் மாதவன் ஆகியோர் இந்த லிஸ்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!