gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன்(29.12.23)

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.12.2023, சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 08.15 வரை துவிதியை. பின்னர் திருதியை,இன்று அதிகாலை 01.41 வரை புனர்பூசம். பின்னர் பூசம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலமான நபரை சந்திப்பீர்கள். இன்று விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.

ரிஷப ராசி அன்பர்களே!

வீடு கட்டுவதற்கான வங்கி கடனை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் பெற்று கட்டுமான வேலையை ஆரம்பிப்பீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். மலர் வணிகம் செய்பவர்கள் விலை உயர்வால் மகத்தான பலன் பெறுவீர்கள்.மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் அடைவீர்கள். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகி அவஸ்தை படுவீர்கள். வயிற்றுக் கோளாறுக்கு மருத்துவமனை செல்வீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள். ஆடு மாடு வளர்ப்பதன் மூலமாக அபிரிமிதமான லாபத்தை அடைவீர்கள். இன்று மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்கள் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

விவசாயத் தொழிலில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். தோப்புக் குத்தகையின் மூலம் கணிசமான வருமானம் பெறுவீர்கள். தொழிற்சாலையில் உற்பத்தியை பெருக்குவீர்கள். வெளிநாட்டு பயணத்தில் உள்ள சிக்கலை தீர்ப்பீர்கள். கோயில் திருப்பணிகளுக்கு பண உதவி செய்வீர்கள். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.
துர்கையை வழிபட சிரமங்கள் குறையும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்கினால் வீண் விவகாரங்களில் மாட்டிக் கொள்வீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்குவீர்கள். இன்று முருகப்பெருமானை வழிபட காரிய அனுகூலம் உண்டாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

நம்பியவர்கள் கைவிட்டதால் மனவேதனை அடைவீர்கள். வேலை இடத்தில் செய்யாத தவறுக்கு திட்டு வாங்குவீர்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையே காண்பீர்கள். காதலியின் கோபத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். கடன்கள் அதிகரிப்பதால் கவலைப்படுவீர்கள்.ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.

துலா ராசி அன்பர்களே!

கையில் பணம் தாராளமாக புரண்டு காலரை தூக்கி விடுவீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள். அரசு, தனியார்துறை பணியாளர்கள் சிரமமின்றி வேலை பார்ப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்தால் பெருமைப்படுவீர்கள்.இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் பிற்பகலுக்குமேல் ஈடுபடவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மணமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். குடும்ப நலனுக்காக பெண்களின் சேமிப்பை பெறுவீர்கள். நீங்கள் தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபம் அடைவீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தில் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை முனைப்புடன் செய்வீர்கள்.தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் செலவுகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்த திட்டமிடுவீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள். உங்களை மதித்து உறவினர்கள் வீடு தேடி வருவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். அக்கறையாக பணியாற்றி அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.அம்பிகை வழிபாடு அல்லல் தீர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

ஆன்மீகப் பணியில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். உடன் வேலை பார்க்கும் பெண்ணின் உள்ளத்தை கொள்ளை அடிப்பீர்கள். குடும்ப உறவுகளை ஒன்றிணைக்க பாடுபடுவீர்கள். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள்.
பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

கும்பராசி அன்பர்களே!

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் செல்வாக்கு பெறுவீர்கள். அரசு வேலையில் சேருவீர்கள். கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பபை பெருக்குவீர்கள். இருதய நோய் தாக்குதலுக்கு ஆளான மாமனாருக்காக செலவு செய்வீர்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள்.துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

மீனராசி அன்பர்களே!

மற்றவர்களுக்கு நல்லது செய்யப் போய் கெட்ட பேர் எடுப்பீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்கினால் கஷ்டப்படுவீர்கள்.முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!