gowri panchangam Sprituality

Bigg Boss Tamil7: பூர்ணிமாவை வறுத்தெடுத்த கமல்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் சீசன் 7, 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், ஒவ்வொவரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்ற்றாட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட 3 பூகம்பம் டாஸ்கில் ஒரு டாஸ்கில் மட்டும்  வெற்றி பெற்ற ஹவுஸ்மேட்ஸ் , மற்ற இரண்டு டாஸ்குகளிலும் கோட்டை விட்டனர்.




பிராவோ, அக்ஷயா எலிமினேட் செய்யப்பட்டு வெளியரற்றப்பட்ட நிலையில், விஜய் வர்மா, அனன்யா ராவ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தனர்.இந்த சீசனில் விளையாடி வரும் பூர்ணிமா ரவி, பல சம்பவங்கள் செய்து பெயர்போனவர். மேலும் பிக் பாஸை விமர்சிப்பது, கமல் ஹாசன் பாரபட்சம் பார்க்கிறார் என சக போட்டியாளர்களிடம் பேசி வந்தார்.சென்ற வாரம் முழுவதும் நான் வில்லன் இல்லை, நா அன்பான பெர்சன் தான் என்று ரிப்பீட் மோடில் கூறிக்கொண்டே இருந்தார்.

நேற்று நடந்த சண்டே எபிசோடில் பூர்ணிமா ரவிக்கு மிகவும் மோசமான நாள் என்றே கூறலாம்.. ‘வேணாம் அழுதுடுவேன்..’ என்று கதறும் அளவிற்கு நேற்றைய நாள் அவரை வைத்து செய்தது.நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த விஜய் வர்மாவுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது அதில், ஒவ்வொருவரின் குணத்தில் (Quality)இதை நான் உடைப்பேன் என்று கூறி அவர்களின் முகம் பதித்த டைல்ஸை துடைக்கவேண்டும்.




பூர்ணிமா ரவியிடம் உங்களுக்கு குவாலிட்டி என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை, உங்களை நான் பிரேக் செய்ய நிறைய வழிகள் என்னிடம் உள்ளது என்று கூறியதும், பூர்ணிமா மாயாவிடம் நா அப்படி என்ன பண்ணேன், அவருக்கும் புரியல உள்ள என்ன நடக்குதுன்னு என்று வழக்கம் போல செல்ப் டிபென்ஸ் மோடுக்கு சென்றார்.

பூர்ணிமா ரவியிடம் உங்களுக்கு குவாலிட்டி என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை, உங்களை நான் பிரேக் செய்ய நிறைய வழிகள் என்னிடம் உள்ளது என்று கூறியதும், பூர்ணிமா மாயாவிடம் நா அப்படி என்ன பண்ணேன், அவருக்கும் புரியல உள்ள என்ன நடக்குதுன்னு என்று வழக்கம் போல செல்ப் டிபென்ஸ் மோடுக்கு சென்றார்.

இங்கே யாரும் என்னை இதை கேட்கவேண்டும் அதை கேட்க வேண்டும்  என்று சொல்ல முடியாது.. கேட்டகலான என்ன பண்ணுவீங்க என்று கொந்தளித்தார்..  பூர்ணிமாவுக்கு தான் அந்த பேச்சு என்பது ஹவுஸ்மேட்ஸ் முதல் பொது மக்கள் வரை அனைவருக்கும் புரிந்தது .நீங்களும் சம்பளம் வாங்குறீங்க நானும் சம்பளம் வாங்குறேன் ,  மரியாதை கொடுங்க..  யாரும் இங்க எனக்கு Favourite கிடையாது, ‘நீங்க நான் ஏன்னா சொல்லணும்னு எனக்கு டயலாக் எழுதி கொடுக்காதீங்க’ என்று கூறிய கமல், அதற்க்கு உங்களில் யாருக்கு முன்னனுபவம் இருக்கிறது சொல்லுங்கள் என்று கேட்டார்.




நான் இல்லாம  ஒரு கன்டென்ட் உங்களால கிரியேட் பண்ண முடியுதான்னு முதல்ல பாருங்க. உங்க கேம்ல உங்களோட பார்ட்டனார் இல்ல, நான் ஆங்கர்.  நாங்க உங்க கண்டென்ட்டுக்கு வாக்கிங் ஸ்டிக்கா இருக்கமாட்டேன் , ஒருத்தர் தோள ஒருத்தர் பிடிச்சிட்டு நடங்க என்று ஆவேசமாக பேசினார் கமல்ஹாசன்.

மேலும் ஆடியன்ஸ் கிளாப் பற்றிய உங்களின் புரிதல் மிகவும் தவறாக இருக்கிறது என்று பூர்ணிமாவை பார்த்து செம்ம டென்ஷானாக கமல்ஹாசன் பேசியது கண்டெஸ்டண்ட்ஸ் அனைவரையும் கதிகலங்க வைத்து என்றே கூறலாம்.வெளியே வந்த பூர்ணிமா மாயாவிடம் எனக்கு ஏன் இவ்வளவு ஹேட்ரெட் என்று கதறி அழத்தொடந்தினார். நேற்றைய எபிசோடில் பூர்ணிமாவை கமல்ஹாசன் ரோஸ்ட செய்த சம்பவம் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!