Bigg Boss Tamil 7 Cinema Entertainment

Big Boss Tamil 7: வந்தது முதல் பூகம்பம்..கதறும் போட்டியாளர்கள்!

விஜய் டிவியின்  பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.




இதுவரைக்கும் பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த மாதிரி நடைபெறவில்லை என்று சொல்லும் அளவிற்கு 5 போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பழைய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் போட்டியாளர்களை பழி வாங்குவதற்காக ஆரம்பத்திலேயே போட்ட ஸ்கெட்ச் அவர்களுக்கே ஆபத்தாக முடிந்தது. அது ரசிகர்களின் மத்தியில் மாயா மற்றும் பூர்ணிமா கேங் மீதான அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

பூர்ணிமா அந்த வார தலைவராக இருக்கும் நிலையில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வைல்டு கார்டு போட்டியாளர்கள் அனைவரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்த வண்ணமாகவே இருந்தது. இந்த நிலையில் இப்போது உள்ளே 14 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் இன்னும் மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வரப்போகிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.




இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7-ன் தனது 50-வது நாளில் அடியெடுத்து வைத்ததுமே, போட்டியாளர்களுக்கு குண்டை தூக்கி போட்டது போல் ஒரு ட்விஸ்டை வைத்தார் பிக் பாஸ். இந்த வாரம் வீட்டில் பூகம்பம் வெடிக்கப்போகிறது என்றும், வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி தரப்போகிறார்கள் என்றும் கூறினார். இந்த வார டாஸ்கில் தோற்றால் அந்த 3 போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என்றும் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகும் நபர்களின் எணிக்கை கூடும் என்றும் எச்சரித்தார்.

இதை கேட்டு அரண்டு போன பிக் பாஸ் வீட்டினர், இருக்கிறதே போதும் திரும்ப யாரும் வரவேணாம் என்று, அனைவரும் ஒன்றிணைந்து “Lets Play For The House” என்று தீயாய் களமிறங்க முடிவு செய்தனர். அதை தொடர்ந்து இன்று பிக் பாஸ் வெளியிட்டுள்ள முதல் ப்ரோமோவில், வெடிக்கப்போகும் பூகம்பம் என்று டாஸ்க் 1  செய்தி வருகிறது. அதில் 3 அடுக்கு ரேக் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த ரேக்கின் ஒருமுனையில் பந்தை வைத்து மேலும் கீழும் அசைத்து மறுமுனையில் இருக்கும் கூடையில் போடுவதுதான் டாஸ்க். இதை விஷ்ணு, பிராவோ, அர்ச்சனா, விக்ரம் என சிலர் விளையாட பந்து கீழே விழுகிறது. பதட்டத்தின் உச்சத்தில் பிளாஸ்மா முன்பு பிக் பாஸ் போட்டியாளர்கள் அமர்ந்திருக்கின்றனர்.கடுமையான சோதனைகளுக்கு தயாராகும் போட்டியாளர்கள் , ஹவுஸ் மேட்ஸ் வென்றார்களா? அல்லது தோற்றார்களா? பிக் பாஸின் இன்றைய எபிசோட் அனல் பறக்கப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.




இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு அள்ளுவிட்டு இருக்கிறது. அதே நேரத்தில் வரப்போகும் டாஸ்க்கில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஜெயிக்கவில்லை என்றால் உள்ளே வரும் வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கு வழி விட்டுவிட்டு பழைய போட்டியாளர்கள் வெளியே சென்று விட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதனால் வெளியே போகும் மூன்று போட்டியாளர்கள் யார் என்ற ஆர்வமும் அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வரப்போகும் மூன்று போட்டியாளர்கள் யார் என்று ஆர்வமும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. இப்படியான நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பது விஜய் வர்மா, அனன்யா மற்றும் வினுஷா என்று கூறப்படுகிறது.

ஒரு வேலை இதுதான் உண்மையான நிலவரமென்றால் வினுஷாவின் என்ட்ரியால் நிக்சனின் நிலைமை கஷ்டம் தான். ஏற்கனவே வினுஷாவை பற்றி நிச்சன் உருவ கேலி செய்திருந்தது பற்றி அம்பலமாகி இருந்த நிலையில் வினுஷா உள்ளே வந்தால் நிக்சன் பிரச்சனை பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இனி வினுஷா உள்ளே வந்த பிறகாவது நிக்சன் பற்றி கமல் கேள்வி கேட்பாரா என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!