Big Boss Tamil 7 Cinema Entertainment

Big Boss Tamil 7:பிக்பாஸ் வீட்டில் அடுத்த காதல் ஜோடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே மணி – ரவீனா, நிக்சன் – ஐஷூ ஆகியோரின் லவ் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிதாக பூர்ணிமா – விஷ்ணு ஜோடி உதயமாகியுள்ளது.




பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. இந்த வீட்டில் தற்போது மாயா – விசித்ரா டீம்க்கு இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மோதலின் உச்சக்கட்டமாக இருக்கிறது. குறிப்பாக பிரதீப் ரெட் கார்டு வாங்கிக்கொண்டு சென்றது குறித்த சர்ச்சைகள் இன்னும் பிக்பாஸ் வீட்டில் வெடித்துக்கொண்டிருக்கிறது.

ஒருபுறம் சர்ச்சைகள் வெடித்து வந்தாலும் மறுபுறம் லவ் ட்ராக்குகள் பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதலில் மணி – ரவீனா காதல் ஜோடிகளாக சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து நிக்சன் – ஐஷூ இணைந்தனர். அதன்பிறகு சரவண விக்ரம் பூர்ணிமாவிடம் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில், தற்போது பூர்ணிமா விஷ்ணுவிடம் ப்ரபோஸ் செய்வது போன்ற ப்ரமோ வெளியாகியுள்ளது.

தற்போது வெளியகியுள்ள ப்ரமோவில், தினேஷ் பொறுக்கி என்று சொன்னது குறித்து பூர்ணிமாவிடம் விஷ்ணு பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது எங்கள் வீட்டில் நான் எந்த பொண்ணை காட்டினாலும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க, ஆனால் அவர் சொன்னாரே பொறுக்கி அது மாதிரி நான் சுற்றிக்கொண்டிருக்க மாட்டேன் என்று சொல்ல, அதற்கு பூர்ணிமா எதோ சொல்ல, விஷ்ணு நெஞ்சில் கைவைத்து எதோ சொல்கிறார்.




இதை கேட்ட பூர்ணிமா இப்போ ஒன்று பண்ணீங்கல்ல இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சரி நான் ஓப்பன சொல்லிடட்டுமா எனக்கு ஒரு ஃபீலிங் இருக்கு. எனக்கு என்ன தோனுதோ அதை சொல்கிறேன். நீ இல்லனா இல்லனு சொல்லிடு பிடிக்கலனா என்ட சொல்லிடுங்க என்று சொன்ன, நான் இப்போ ஒன்றுமே சொல்லயே என்று விஷ்ணு சொல்கிறார், அதன்பிறகு எனக்கு அப்படி ஒரு ஃபீலிங் இருக்கு அப்படி பண்றீங்களானு கேட்கிறேன் என்று பூர்ணிமா சொல்கிறார்.

அத்துடன் ப்ரமோ முடிவடையும் நிலையில்இந்த ப்ரமோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அடுத்த காதல் ஜோடி ரெடி என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சரவண விக்ரம் மீது பூர்ணிமாவுக்கு ஒரு க்ரஷ் இருந்ததை நாம் பார்த்தோம். அது மட்டுமின்றி சதா நேரமும் அவரை ஒட்டிக்கொண்டே அவர் தெரிந்து கொண்டிருந்தார். இதற்கு முக்கிய காரணம் எங்கே அவர் கடுமையான போட்டியாளராக மாறி விடுவாரோ என்ற எண்ணம் தான்.

ஆனால் அவர் ஒரு மிச்சர் பார்ட்டி என்று தெரிந்த பின்பு பூர்ணிமா விக்ரமை விட்டு விலகினார். அதைத் தொடர்ந்து விஷ்ணுவுக்கு தன் மேல் ஒரு இது இருப்பதை பூர்ணிமா அவருக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டார். இதற்கு விஷ்ணு பலியாவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் பெண்ணின் காதல் வலையில் சிக்கி சின்னாபின்னமான கதையும் உண்டு. அதைத்தான் தற்போது பூர்ணிமா அரங்கேற்ற தொடங்கியுள்ளார். அந்த வகையில் அவருடைய இந்த குள்ளநரித்தனம் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது விரைவில் தெரிந்து விடும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!