பிக்பாஸில் 20ம் நாளான நேற்று, சாப்பாட்டு சண்டை ஒன்றும் நடந்தது, தவிரவும் நேற்று நடந்த டாஸ்கை நினைவில் வைத்து கமல் சூசகமாக ஒரு செய்தியை கூறி இருக்கிறார். அது என்ன?
நேற்று நடந்த ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்கில், இருவர் வெற்றி பெறவேண்டும், இல்லையென்றால் பிக்பாஸ் வீட்டில் சமைத்த எந்த உணவையும் சாப்பிடக்கூடாது என்ற டாஸ்கில் மணி, யுகேந்திரன், ரவீனா விளையாடினர். இந்த கஷ்டமான டாஸ்கில் இவர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என்று நினைத்த பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலர், டாஸ்க் முடிவதற்குள் நாம் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்த ஐஷூ, கூல் சுரேஷ், ஜோவிகா, நிக்ஸன் ஆகியோர் அவசர அவசரமாக தங்களின் மதிய உணவை முடித்துக்கொண்டனர். அதன் பின்னால் வந்தவர்களுக்கும், விளையாடி முடித்து வந்தவர்களுக்கும் விதிமுறையை அமல் படுத்தினார் பிக்பாஸ் ஆகையால், பிக்பாஸ் வீட்டிலிருந்த சிலர் பட்டினி கிடந்தனர். இதை கண்ட் மாயாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பாட்டுப்பாடிய் படி பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களை வெறுப்பேத்தினார்.
யுகேந்திரனும் பதிலுக்கு ஸ்மால் வீட்டிலிருப்பவர்களை பழிக்கு பழி வாங்க நினைத்தார். ஆகையால் சமையல் பொருட்கள் அனைத்தையும் பிக்பாஸ் வீட்டிலிருந்து எடுத்து வந்து விடுகின்றனர்.
சிறிது நேரம் பிக்பாஸ் வீட்டினர் எதையும் சாப்பிடாமல் பட்னி கிடந்ததும் பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதன்படி, நீங்க என்னுடைய கண்டிஷனை நீங்க சரியா படிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் சமைத்ததைதான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லியிருந்தேனே தவிர.. நீங்க பட்னி கிடக்கனும்னு சொல்லலை.. என்றவர் பிக்பாஸ் வீட்டினருக்காக உணவு தட்டை கொடுத்தார். இதைக்கண்ட ஸ்மால் பாஸ் வீட்டினர் இதெல்லாம் அநியாயம் பிக்பாஸே ரூல்ஸை மீறுகிறாரே.. என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
யுகேந்திரனும் பதிலுக்கு ஸ்மால் வீட்டிலிருப்பவர்களை பழிக்கு பழி வாங்க நினைத்தார். ஆகையால் சமையல் பொருட்கள் அனைத்தையும் பிக்பாஸ் வீட்டிலிருந்து எடுத்து வந்து விடுகின்றனர்.
சிறிது நேரம் பிக்பாஸ் வீட்டினர் எதையும் சாப்பிடாமல் பட்னி கிடந்ததும் பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதன்படி, நீங்க என்னுடைய கண்டிஷனை நீங்க சரியா படிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் சமைத்ததைதான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லியிருந்தேனே தவிர.. நீங்க பட்னி கிடக்கனும்னு சொல்லலை.. என்றவர் பிக்பாஸ் வீட்டினருக்காக உணவு தட்டை கொடுத்தார். இதைக்கண்ட ஸ்மால் பாஸ் வீட்டினர் இதெல்லாம் அநியாயம் பிக்பாஸே ரூல்ஸை மீறுகிறாரே.. என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
அன்று கேப்டன்; இன்று தண்டனை! – பின்னணி என்ன?
இந்த சீசன் பிக் பாஸ் தொடக்கத்திலேயே, ஜோவிதாவின் படிப்பு சர்ச்சை, பவா செல்லதுரையின் விரக்தியான வெளியேற்றம் முதலான சில சம்பவங்கள் பரபரப்பாக அரங்கேறின.
இந்த சீசன் பிக் பாஸ் தொடக்கத்திலேயே, ஜோவிதாவின் படிப்பு சர்ச்சை, பவா செல்லதுரையின் விரக்தியான வெளியேற்றம் முதலான சில சம்பவங்கள் பரபரப்பாக அரங்கேறின.
தொடர்ந்து அனன்யா வெளியேறிய அடுத்த நாளே எழுத்தாளர் பவா செல்லத்துரை தன்னால் அந்த வீட்டிலிருக்க முடியாதெனக் கூறி தானாகவே வெளியேறினார். பவாவின் வெளியேற்றத்தால் இரண்டாவது வாரம் எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. மூன்றாவது வாரமான இந்த வாரம் வெளியேற்றத்துக்காக நாமினேட் செய்யப்பட்டவர்கள் சிறிய வீட்டுக்குச் சென்றார்கள்.
மாயா, விஷ்ணு, பிரதீப், சரவண விகரம், பூர்ணிமா உள்ளிட்டோர் சிறிய வீட்டிலிருந்த நிலையில், இந்த வார எவிக்ஷன் நடக்கவுள்ளது.
இதில் ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையிலும், அந்த வீட்டுக்குள் நடந்து கொண்ட முறைகளையும் வைத்துக் கணக்கிட்டு போட்டியாளர் விஜய் வர்மாவை வெளியேற்றியிருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரை வெளியுலகத்துக்கு யார் என்றே தெரியாத விஜய் வர்மா உள்ளே நுழையும் போதே முதல் வார கேப்டன் என்கிற பெருமையுடன் நுழைந்தார்.
திருச்சியைச் சேர்ந்த விஜய் வர்மாவின் குடும்பம் திருச்சி, மற்றும் சென்னையில் ஜிம்கள் நடத்தி வருவதாகத் தெரிகிறது. இவர்களுடைய ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்ய வரும் சினிமா மற்றும் டிவி பிரபலங்களுடன் தொடர்பை வளர்த்து வந்த விஜய் வர்மாவுக்கு மாடலிங் மற்றும் சினிமா ஆர்வம் வந்திருக்கிறது. தன்னுடைய மீடியா தொடர்பு மூலமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் இவர் பெற்றார் எனச் சொல்கிறார்கள். கேப்டன் என்ற பெருமையுடன் நிகழ்ச்சிக்குச் சென்றவரின் செயல்பாடுகள் அந்த வீட்டுக்குள் சிறப்பாக இல்லை என்பது முதல் வாரமே தெரிந்துவிட்டது.
சக போட்டியாளர்களிடம் மிரட்டல் தொனியில் பேசுவது, முரட்டுத்தனமான சைகை மொழியில் பேசுவது, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது என நடந்து கொண்டதால் கமலே மஞ்சள் கார்டு கொடுத்து எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.
முதல் வார எச்சரிக்கையையும் கண்டு கொள்ளாமல் தனது போக்கை மாற்றிக் கொள்ளாத விஜய் வர்மா சில தினங்களுக்கு முன் நடந்த டாஸ்குகளின் போது மீண்டும் விஷ்ணுவுடன் மோதினார்.
‘நடிகனுக்குத் தேவையே முகம்தான். டாஸ்க் அது இதுன்னு இவனுடன் மல்லுக்கட்டினா, அட்டாக் பண்ணி அந்த முகத்தையே பாழாக்கிடுவான் போல’ என விஷ்ணுவே சக போட்டியாளர்கள் மத்தியில் புலம்பியதெல்லாம் கூட நடந்தது. பிரதீப்பை இவர் தாக்கியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தச் சூழலில் இன்று நடந்த எவிக்ஷனில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பவும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1