மகாபாரத போர் முடிந்தவுடன், போர்களத்தில் இறந்தவர்களின் உடல்கள் ஏராளமாக கிடந்தது. சிலர் குற்றுயிரும், குலையுயிருமாக இருந்தனர். போர்களத்தில் ஓடிய இரத்த ஆறுகளுக்கிடையே அழுகுரலுக் கூக்குரலும் கேட்டுக்கொண்டே இருந்தது. பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றாலும், அவர்களுக்கும் இந்த துக்க சம்பவத்தால் அவர்கள் அடைந்த வெற்றியும் ருசிக்கவில்லை.
காந்தாரியின் சாபம் :
அஸ்தினாபுரத்தில் காந்தாரியும் தனது 100 பிள்ளைகளும் இறந்த சோகத்தில் அழுதுக்கொண்டிருந்தாள். அவளுக்கு கிருஷ்ணன் மேல் அதீத கோபம் இருந்தது. ‘கிருஷ்ணர் நினைத்திருந்தால், இந்த போரை தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை . மாறாக எனது ஆசை மகன் துரியோதனை பீமனைக்கொண்டு வதைத்தும் விட்டார்‘ என்று அவளது மனம் மிகுந்த வேதனையடைந்தது. புத்திர சோகம் அவளை வாட்டியது. அச்சமயத்தில் கிருஷ்ணன் காந்தாரியைப் பார்க்க அவளின் அரண்மனைக்கு வந்தார்.காந்தாரி, கிருஷ்ணனைக் கண்டதும், அவரின் மேல் உள்ள கோபத்தில் கிருஷ்ணனை சபித்தாள்.
”நீ தான் என் குலம் அழிந்ததற்கு காரணம். ஆகவே, என் குல வம்சத்தையே நாசமாக்கிய உன் குலமும் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக்கொண்டு அழிந்து விடுவார்கள். என் நகரை நிர்மூலமாக்கி அழித்தது போல் உன் நாடும் அழிந்து விடும்” என்று சாபமிட்டாள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
1