ஏதாவது வித்தியாசமா சமைக்கனுமா? அப்போ இந்த தினை கீர் ட்ரை பண்ணி பாருங்க. சுவையான வித்தியாசமான முறையில் தினை கீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தினை அரிசி- 1/2 கப்
சர்க்கரை- 100 கிராம்
கோவா- 50 கிராம் (சர்க்கரை இல்லாதது)
நெய்யில் வறுத்த முந்திரி
திராட்சை, பாதாம் தலா- 1 டீஸ்பூன்
கசகசா- 10 கிராம்
ஏலக்காய்- 2
பால்- 1 டீஸ்பூன்
குங்குமப்பூ- 1 சிட்டிகை
செய்முறை விளக்கம்:
-
தினை அரிசியை தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து குக்கரில் குழைய வேகவைக்கவும்.
-
கசகசாவுடன் ஏலக்காய், பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். இனிப்பு இல்லாத கோவாவை உதிர்த்து போட்டு நன்றாக பிசைந்து சேர்க்க வேண்டும். அதனுடன் வேகவைத்துள்ள தினையையும், அரைத்த விழுது, சர்க்கரை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.
-
இறுதியாக குங்குமப்பூ (தேவைப்பட்டால்) தூவி பரிமாறினால் சுவையான தினை கீர் தயார்.
டிப்ஸ்:
-
இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.
வீட்டு குறிப்பு
-
அடுப்பில் சாம்பார், ரசம் பொங்கி வழியாமல் இருக்க, பாதி கொதி வரும்போதே இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டால் பொங்கி வழியாது.
-
கிழங்குகளை வேகவைக்க, அரிசி கழுவிய நீரை பயன்படுத்தினால் சீக்கிரம் வெந்துவிடும்.
-
ஆம்லெட் செய்யும்போது ஒரு ஸ்பூன் மைதா மாவு கலந்து செய்தால் பெரியதாகவும், உப்பியும் வரும்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1