சிவபெருமான், பக்தர்களின் மனத்தில் வாசம் செய்பவர். அவர்கள் தன்னை எப்படித் துதிக்கிறார்களோ அப்படியே அருள்பவர். நாயகன் நாயகி பாவம், ஆண்டான் அடிமை பாவம், தோழமை பாவம் என ஈசன் எந்த பாவத்தில் நினைத்தாலும் அப்படியே அருள்பாலிப்பவர். ஈசனைப் பொறுத்தவரை இவற்றில் எது ஒன்றும் உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை. இதை உணர்த்த ஈசன் பல்வேறு லீலைகள் புரிந்ததுண்டு. அப்படி ஈசன் திருவிளையாடல் புரியும் ஓர் அற்புதமான வாழ்வைப் பெற்றவர், ஏயர்கோன் கலிக்காம நாயனார். இவர், மானக்கஞ்சாறனாரது மருமகன். ஈசனுக்குத் திருப்பணிகள் செய்துவந்தவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் வாழ்ந்தவர்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஈசனிடம் தோழமையோடு பழகியவர். அவர், பரவைநாச்சியாரிடத்தில் தூது செல்லுமாறு ஈசனை வேண்ட, ஈசனும் அவ்வாறே சென்றார். இதுகுறித்துக் கேள்விப்பட்ட ஏயர்கோன் கலிக்காமர், மனம் வருந்தினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1