gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (7.9.23)

சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.14 வரை அஷ்டமி. பிறகு நவமி. இன்று மாலை 03.59 வரை ரோகிணி. பிறகு மிருகசீரிடம். சுவாதி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

பங்காளி சண்டையை பஞ்சாயத்து மூலம் முடிவுக்கு கொண்டு வருவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் இறுதி வெற்றியை பெறுவீர்கள். உடன் வேலை பார்க்கும் பெண்ணின் உள்ளத்தை கவர்வீர்கள். வித்தியாசமான முயற்சியில் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். தந்தையார் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பீர்கள்.இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சியில் இறங்கினால் தோல்வியை சந்திப்பீர்கள். வியாபார எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவீர்கள். வருடாந்திர மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ள மறக்காதீர்கள். வீட்டிலும் வெளியிலும் அவமரியாதை அடைவீர்கள். . காதலியின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள்.சிவபெருமானை வழிபட நலன்கள் கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.




மிதுன ராசி அன்பர்களே!

உறவினர்கள் சண்டையால் உறக்கத்தை தொலைப்பீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு எதிரிகளின் இடையூறு ஏற்படும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பெண்களின் அன்பை பெரும் முயற்சியில் தோல்வியடைவீர்கள். வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றி சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணத்தில் பெரிய அனுகூலம் பெற மாட்டீர்கள் தட்சிணாமூர்த்தி வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

வர்த்தகத் துறையில் சிக்சர் அடிப்பீர்கள். எதிர்பார்த்ததை விட வியாபாரத்தில் அதிகம் லாபம் பார்ப்பீர்கள். மைத்துனருக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். வேலை திறனை வெளிப்படுத்தி மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வெளியிடங்களில் உங்களின் செல்வாக்கை உயர்த்தி பிடிப்பீர்கள். தாராளமாக பண வரவு வந்து கையில் காசு பார்ப்பீர்கள்.விநாயகரை வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத உறவினர் வருகைக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

துணிச்சலுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அந்நிய நாட்டில் இருந்து பொருளை இறக்குமதி செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். கஷ்டமே இல்லாமல் கன்னிப் பெண்களின் மனதை கொள்ளை அடிப்பீர்கள். வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபம் சம்பாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.அம்பிகையை வழிபடுவது நலம் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தையாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து வைப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து திடீர் அழைப்பு வரும். உங்களின் மன காயங்களுக்கு மனைவி மருந்தாக இருப்பார். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.விநாயகரை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

வெட்டி செலவு செய்யாதீர்கள். அவசர தேவைக்காக நகைகளை அடகு வைப்பீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவமானம் அடைவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இல்லாவிட்டால் கை கால்களில் ரத்தக்காயம் அடைவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள் சந்திராஷ்டம நாள். சங்கடத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.லட்சுமிநரசிம்மரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

திருமண பேச்சு முடிவடைந்து கல்யாண வேலைகளை ஆரம்பிப்பீர்கள். அவசியமான நேரத்தில் அன்பு செலுத்தும் பெண்கள் பண உதவியை பெறுவீர்கள். வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். பழைய கடன்களை பக்குவமாக அடைப்பீர்கள். கண்ணால் பேசி மனம் கவர்ந்த காதலியை வசப்படுத்துவீர்கள்.ஆஞ்சநேயரை வழிபட வெற்றிகள் வசப்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மகிழ்ச்சி தரும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு ராசி அன்பர்களே!

எதிரிகளின் தொல்லைகளால் தூக்கத்தை இழப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க தடுமாறுவீர்கள். அரசாங்க ஊழியர்கள் அவஸ்தையை சந்திப்பீர்கள். பெண்கள் புரிந்து கொள்ளாமல் உருவாக்கும் பிரச்சனையால் நிம்மதி இழப்பீர்கள். திடீரென்று வயிற்று கோளாறு ஏற்பட்டு அவதிப்படுவீர்கள். அந்நிய பெண்களிடம் விலகியே இருங்கள்.சிவபெருமானை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரியம் அனுகூலமாகும்.

மகர ராசி அன்பர்களே!

இரும்பாக இருக்கும் பெண்ணின் மனத்தை கரும்பாக மாற்றுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இடையில் ஏற்படும் சின்னத் தொல்லைகளைக் கிள்ளி எறிவீர்கள். ஆடம்பரமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். விருந்தினர்களுக்கு வீட்டில் சுவை மிகுந்த உணவு கொடுப்பீர்கள். நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள்.மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

பணப்புழக்கம் இருந்தாலும் மனக்கவலையால் தவிப்பீர்கள். தேவையில்லாத சிந்தனையால் தூக்கத்தைக் இழப்பீர்கள். மனைவி மக்கள் உறுதுணையால் சற்று ஆறுதல் அடைவீர்கள். உரிய நேரத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். தொழிலை சுமூகமாக நடத்துவீர்கள். வியாபாரத்தில் விருப்பத்திற்கு மாறாக ஏற்ற இறக்கமான லாபம் பெறுவீர்கள்.பைரவரை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

வீடு வாங்கி பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள். தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றமான பலனை அடைவீர்கள். திருமண முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!