gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (3.9.23)

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.42 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி இன்று மாலை 04.24 வரை ரேவதி. பிறகு அஸ்வினி. பூரம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

விரயச் செலவுகள் அதிகரித்து அவஸ்தை படுவீர்கள். ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டால் அடுத்த பிரச்சனையில் சிக்குவீர்கள் வேலை இடத்தில் உங்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களை அடையாளம் காண்பீர்கள். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவமானம் அடைவீர்கள். இன்று முருகப்பெருமானை வழிபட முயற்சிகள் பலிதமாகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

 பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷப ராசி அன்பர்களே!

சொன்ன சொல்லைக் காப்பாற்றி செல்வாக்கை அதிகரிப்பீர்கள். தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைவீர்கள். கிடைத்த லாபத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்வீர்கள். அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பை பெறுவீர்கள். வேலை இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தையும் சாதகமாக முடிப்பீர்கள்.சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

தொழிலில் இருந்த மந்தநிலையை விளக்கி பிரகாசத்தை ஏற்படுத்துவீர்கள். வங்கி லோன் கிடைத்து புதிய தொழில் தொடங்குவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி கமிஷன் வியாபாரத்தில் கை நிறைய சம்பாதிப்பீர்கள். அதிக ஆசையால் சிலநேரங்களில் அவஸ்தையில் மாட்டிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். சிறு வியாபாரிகள் அதிக லாபம் பெறுவீர்கள்.மீனாட்சி  அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கடக ராசி அன்பர்களே!

குடும்பத்தில் சங்கடத்தை சந்தித்த நீங்கள் பிரச்சனை விலகி சந்தோஷம் அடைவீர்கள். வீட்டில் திருமண பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பொருளாதார சிக்கலால் ஏற்பட்ட கல்வி கடையை நீக்குவீர்கள். வெளியூரில் தங்க வேண்டிய நிலைக்கு உள்ளீர்கள். மனதை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள மறக்காதீர்கள். தேவையில்லாத காரியங்களில் தலையிடாதீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபட, சிரமங்கள்  குறையும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள். ஆனால் அதிக லாபம் அடைய மாட்டீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை காண்பீர்கள். ஊழியர்கள் வேலையில் அக்கறை காட்டி நடப்பீர்கள். அரசாங்க உதவிகள் சற்று தள்ளிப் போவதால் சங்கட்டப்படுவீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் சாதகமாக இருக்காது. சந்திராஷ்டம நாள் என்பதால் மிகவும் கவனமாக செயல்படுங்கள்.இன்று முருகப்பெருமானை வழிபட அதிக நன்மைகளைப் பெறலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடப்பீர்கள். எதிர்பாராத தன லாபத்தை அடைவீர்கள். புதிய முதலீடுகளை கொஞ்சம் தள்ளி வையுங்கள். இருப்பதைக் கொண்டு வாழப முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி பெறுவீர்கள். வேலை இடங்களில் செல்வாக்கு பெறுவீர்கள். பெற்றோரின் மனமறிந்து நடப்பீர்கள்.மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பிரச்னைகள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலா ராசி அன்பர்களே!

சிறுதொழில் செய்பவர்கள் வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை அடைவீர்கள். தொந்தரவு தந்த கழுத்து வலி நீங்கி நிவாரணம் பெறுவீர்கள். பெரும் பொறுப்பில் இருப்பவர்களின் வெறுப்பால் செல்வாக்கு சேதம் அடைவீர்கள். முதலாளியின் கருத்துக்கு ஏற்ற வகையில் நடக்க இயலாமல் தடுமாறுவீர்கள்.லட்சுமி நரசிம்மரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

விருச்சிக ராசி அன்பர்களே!

தடைபட்டிருந்த வருமானங்கள் தாராளமாக வரத் தொடங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு நெருக்கடியைத் தந்த கடன்களை அடைப்பீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் அதிகரிப்பீர்கள். திருமண வயதினர் மங்கல நிகழ்ச்சி கை கூடி மகிழ்ச்சியில் திளைப்பீர்கள் . பிள்ளைகள் தரும் பிரச்சனையால் மனைவியோடு சண்டை போடுவீர்கள். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

குழப்பமான சூழ்நிலைகள் விலகி நிலையான வருமானம் பெறுவீர்கள். பெற்றோர்கள் வழியில் சில நன்மை அடைவீர்கள். பிள்ளை குறித்த கவலை நீங்க நிம்மதி அடைவீர்கள். வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டியது இருந்தால் தள்ளிப் போட தயங்காதீர்கள். அவசியமில்லாத காரியங்களில் தலையிடாதீர்கள். சந்திராஷ்டமம். கவனம் தேவை.ஆஞ்சநேயரை வழிபட நினைத்தவை நிறைவேறும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

சின்னச்சின்ன சங்கடங்களை சந்தித்தாலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகளை முடிப்பீர்கள். எதிர்ப்புகள் தந்த பிரச்சனையை சாதுரியத்தால் சமாளிப்பீர்கள். கெடுதல் செய்ய நினைத்தவர்கள் கெடுதல் அடைவார்கள். பூர்வீக சொத்து பற்றிய கவலையை மறந்து விடுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள்.தட்சிணாமூர்த்தியை தியானிப்பதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பராசி அன்பர்களே!

வியாபாரத்தில் இருந்த தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவீர்கள். இயந்திர வகை தொழில்களில் ஈடுபாட்டை அதிகரிப்பீர்கள். எதையும் சிந்தித்து செயல்பட்டு சேதாரத்தை குறைப்பீர்கள். இடம் மாறுதல் அடைந்து வெளியூர் செல்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அனுசரிப்பு தன்மையை அதிகரிப்பீர்கள். வெளி நாட்டிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள். அம்பிகை வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

நன்மைகளையும் தீமைகளையும் கலந்து சந்திப்பீர்கள். தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு பொருளாதார உயர்வு அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற மாட்டீர்கள். வேலையில் உங்களுடைய நேரடி கண்காணிப்பை செலுத்துவீர்கள். அரசு பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். அலட்சியமாக பேசி வந்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் குறையும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டி வரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!