gowri panchangam Sprituality Uncategorized

இன்றைய ராசி பலன் (24.9.23)

சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.10 வரை நவமி . பின்னர் தசமி. இன்று காலை 10.37 வரை பூராடம். பின்னர் உத்திராடம். மிருகசீரிஷம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

வியாபாரத்தை திட்டமிட்டு நடத்துவீர்கள். பொருளாதார உதவிகளை நண்பர்களிடமிருந்து பெறுவீர்கள். பெரியோர்களின் சந்திப்பால் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண்பீர்கள். வேலை இடங்களில் சிறப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.




ரிஷப ராசி அன்பர்களே!

கவனக்குறைவாக இருந்து கைப்பொருள் களவு போகும் நிலைக்கு ஆளாகாதீர்கள். அரசாங்க இடையூறுகளை ஒருவர் உதவியால் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் சின்னச்சின்ன பிரச்சினைகளை சந்திப்பீர்கள். சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வீர்கள். வாகனங்கள் பழுதாகி செல்ல வேண்டிய இடத்திற்கு தாமதமாக போவீர்கள்.இன்று சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள மறக்காதீர்கள். அப்படி கொடுத்தால் சாட்சி வைத்துக் கொள்ள தவறாதீர்கள். வியாபாரத்தில் மந்த நிலையை காண்பீர்கள். வெளியூர் பயணங்களில் அதிக பலன் அடைய மாட்டீர்கள். குடும்பப் பிரச்சினையால் குழப்பம் அடைவீர்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.இன்று நீங்கள் மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் நினைத்த காரியம் எளிதில் ஈடேறி மகிழ்ச்சி அடைவீர்கள். மங்கல நிகழ்ச்சியால் வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள். வயதான பெரியவர்களால் வாயார பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் மனம் குளிர்ந்து போவீர்கள். வீட்டு வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவால் அலைச்சலைக் குறைப்பீர்கள்.இன்று ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

ஆடல் பாடல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசைப்படுவீர்கள். அனாவசியமான செலவுகளால் கடன் வாங்குவீர்கள். ஆனால் உங்களின் விடாமுயற்சியால் தொழிலில் வெற்றியை பெறுவீர்கள். சொந்தமாக திட்டமிட்டு புதிய தொழில்களில் தடம் பதிப்பீர்கள். சிறு வியாபாரிகள் சிறப்பான லாபம் பெறுவீர்கள்.தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

வாக்கு கொடுத்தால் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் தலைகுனிவை அடைவீர்கள். என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள். காதலியின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வங்கிகளுக்கு பணத்தை கொண்டு செல்லும் போது எச்சரிக்கையாக இருங்கள். யாரிடமும் பேச்சு கொடுக்காதீர்கள்.அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

எந்தக் காரியத்தை தொட்டாலும் தடையின்றி நடத்துவீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் காண்பீர்கள். வாகனங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து அனைவரையும் பூரிக்க வைப்பீர்கள். அக்கறையுடன் வேலைசெய்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நிலம் வாங்க அச்சாரம் கொடுப்பீர்கள்.இன்று நீங்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

உங்கள் முயற்சிகள் முளைவிட்டு மரமாகி நல்ல கனிகள் கொடுப்பதை பார்த்து களிப்படைவீர்கள். கையில் காசு பணம் தாராளமாகப் புரளுவதால் அதிகம் செலவு செய்வீர்கள். ஓடி வந்து உதவி செய்யும் நண்பர்களை மறக்காதீர்கள். விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அரசியல்வாதிகளின் அன்பை பெறுவீர்கள். எங்கு சென்றாலும் புகழும் செல்வாக்கும் பெறுவீர்கள்.இன்று நீங்கள் விநாயகரை வழிபட மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

அனாவசிய செலவுகளால் அல்லல் படுவீர்கள். இருப்பினும் அதனால் உங்களின் செல்வாக்கை வேறு வகையில் உயர்த்துவீர்கள். இந்த நாளில் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். பங்குச் சந்தையில் சரிவை சந்திப்பீர்கள். உறவினர்களால் பல நன்மைகளை அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். தொழிலில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.இன்று நீங்கள் பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

பூரணச்சந்திரனால் ஓரளவு நன்மை பெறுவீர்கள். உடல்ரீதியான உபாதைகளை எதிர்நோக்குவீர்கள். மருத்துவச் செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள். பெற்றோர்களால் மனச் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். கொடுத்த இடத்தில் குறித்த நேரத்தில் பணம் திரும்பி வராமல் சங்கடப்படுவீர்கள். வம்பு வழக்குகளை இழுத்துக்கொண்டு நிம்மதி இழப்பீர்கள்.இன்று ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

காதலியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்துகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். திடீர் செலவுகள் ஏற்பட்டு பணத் தட்டுப்பாட்டால் தடுமாறுவீர்கள். சில நேரங்களில் கவனக்குறைவால் பண இழப்புகளுக்கு ஆளாவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு நண்பர்கள் கேட்ட தொகையை அனுப்பி வைத்ததால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த வேற்றுமையை சரிப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் பெருமிதம் கொள்வீர்கள். காதலியிடம் மனதை வெளிப்படுத்தும் வாய்ப்பை பெறுவீர்கள்.இன்று நீங்கள் மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!