தமிழ் சினிமாவில் ப்ளேபாய்களுக்கா பஞ்சம் என்ற ரீதியில் ஒவ்வொரு சீசனிலுமே ஒவ்வொரு நாயகர்கள் அந்த இடத்தினை பிடித்து கொண்டு சுற்றுவார்கள். ஆனால் இப்படி இருக்கும் நாயகர்கள் பெரும்பாலும் பெரிய நடிகர்களாக இருக்கமாட்டார்கள். அப்படி பெரிய நடிகர்கள் ப்ளேபாயாக இருப்பது சிலரிடம் மட்டுமே நடக்கும்.
போன தலைமுறையில் பெரிய நாயர்களில் ப்ளேபாய் எனக் கேட்டால் பலரிடம் வரும் முதல் பதிலே கமல்ஹாசன் என்பதாக தான் இருக்கும். அதை தொடர்ந்து பலர் கூறப்பட்டாலும் சமீப காலமாக தனுஷை குறித்து நிறைய கிசுகிசுக்கள் வலம் வர துவங்கி இருக்கிறது.
இந்நிலையில் திரை விமர்சகர் சேக்குவாரா ஜெய் சங்கர் தனுஷ், கமலெல்லாம் என்னங்க ப்ளேபாய். அந்த கால ரியல் ப்ளேபாயே ரஜினிகாந்த் தான் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறார். அவர் பேசி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நடிகை லதா சம்பவத்தில் எம்.ஜி.ஆரிடமே சிக்கியவர் தான் ரஜினிகாந்த். அந்த காலத்தில் அச்சு ஊடகம் தான் என்பதால் பெரிய அளவில் அதுகுறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இன்றைய காலம் என்றால் அது குறித்து பெருவாரியான தகவல்கள் தெரிந்து இருக்கும்.
ரஜினிக்கு நிறைய நடிகைகளுடன் தொடர்பு இருந்தது. அதில் பல நடிகைகள் இன்று குடும்பத்துடன் செட்டில் ஆகி இருப்பதால் அதை எடுத்து பேசுவது இன்னும் சர்ச்சையை கிளப்பி விடும். அமலாவுடன் கூட அவருக்கு காதல் இருந்ததும் ஒருவகையில் உண்மை தான். ரஜினிக்கு ஆரோக்கிய கோளாறு ஏற்படவில்லை என்றால் தனுஷுடன் கூட அவர் போட்டி போட்டு இருப்பார்.
ரஜினிகாந்த் ஒன்றும் ஏகப்பத்தினி விரதன் கிடையாது. பல பெண்களுடன் இருந்தவர் தான். அவர் பல குடும்பத்தில் பிரச்னையை கிளப்பியவர். அந்த கர்மா திரும்பி தானே வரும். அதான் இன்று அவரின் மருமகன் மூலமாக அவருக்கே திரும்பி வருவதாக கூறி இருக்கிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1