Cinema Entertainment

எதிர் நீச்சல் திருச்செல்வித்திடம் கதை கேட்ட ரஜினி

எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வித்திடம் ரஜினி கதை கேட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் இயக்குனர்களில் இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் இடத்தில் டப்பிங் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து வந்தார். பின் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார்.




எதிர்நீச்சல் "திருச்செல்வம்” மனைவி யார் தெரியுமா? சீரியலுக்கும் அவருக்கும் இப்படி ஒரு தொடர்பா? | Ethirneechal director Thiruchelvam Do you know who is the wife - Tamil ...எதிர்நீச்சலுக்கு முன்பே இயக்குநர் திருச்செல்வம் பெற்ற அங்கீகாரம்!- Dinamani

அதற்குப் பிறகு தான் திருச்செல்வம் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். அந்த வகையில் இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் 2002  சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் நடிகராகவும் திருச்செல்வம் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் திருச்செல்வம்.

இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதோடு இந்த தொடருக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார் திருச்செல்வம். இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய சீரியலில் நடித்தும் இருக்கிறார். மேலும், திருச்செல்வம் சீரியல் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம், இவர் இயக்கும் சீரியல் பெரும்பாலும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதைகளாக அமைந்திருக்கும்.




தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலை வரவேற்பை  முதல் பெரியவர்கள் வரை என பலருமே விரும்பி பார்த்து வருகிறார்கள். தற்போது இந்த சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியல் அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் திருச்செல்வம் நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே கோலங்கள் சீரியலில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறார். தற்போது டிஆர்பி உச்சத்தில் இந்த சீரியல் தான் சென்று உச்சத்தில்  இதனால் இந்த சீரியல் வாரத்தின் ஏழு நாட்களும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் திருச்செல்வம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் ரஜினிகாந்த் குறித்து கூறியது, கோலங்கள் சீரியல் போதே ரஜினி சார் என்னை தனியாக கூப்பிட்டு பேசி இருந்தார்.




அந்த சமயம் எந்திரன் ரிலீஸ் டைம். அவர் என்னைப் பார்த்ததும் திருச்செல்வம் என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் பெயரை எல்லாம் அவர் எப்படி தெரிந்து பெயரை என்று தெரியவில்லை. என்னை கொஞ்ச நேரம் பார்த்துட்டே இருந்தார். எப்படி ஒரு ஆள் 1500 எபிசோடு திரைக்கதை வசனம் எழுதி அதோட ஆக்டிங்கும் செய்கிறீர்கள் என்று கேட்டார். டெலிவிஷன் சினிமாவை விட கம்மி நினைத்திருந்த என் மனநிலையை உடைத்தது ரஜினி சார் தான். இதற்குப் பிறகு படம் பண்ணுங்கன்னு சொன்னார்.

ரஜினி சார்  கதை ஏதாவது எழுதி இருக்கீங்களா என்று கேட்டதும் அந்த டைம் நான் எழுதி வைத்திருந்த ஹீரோயின் சப்ஜெக்ட் கதையை அவரிடம் சொன்னேன். கதை நல்லா இருக்கு. ஆனா, அது ஹீரோயினி சப்ஜெக்ட் ஆக இருக்கு என்று சொன்னார். அப்பதான் அவர் என்னிடம் கதை கேட்கிறார் என்று புரிந்தது. அதற்குப் பிறகு அவரை மீட் பண்ண வில்லை. சமீபத்தில் ஜெயிலர் படத்தில் மாரிமுத்து சாரை பார்த்துட்டு எங்க வீட்டில் எதிர்நீச்சல் பார்க்கிறார்கள் என்றும், அதை என்னிடம் சொல்லுங்கள் என்று ரஜினி சார் சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் அவர் சொல்லனும் என்று அவசியம் இல்லை. இருந்தாலும் சொன்னார் என்று கூறியிருந்தார்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!