gowri panchangam Sprituality ராசிபலன்

இன்றைய ராசி பலன் (01.6.23)

ஜூன் 1 வியாழன் இன்று சந்திரன் சுக்கிரனின் ராசியான துலாமில் சஞ்சரிக்கிறார். நாள் முழுவதும் சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் சந்திரன், ரிஷபம், கும்பம், துலாம் ராசியினருக்கு சிறப்பான நாளாகவும்,, நல்ல செய்திகளைப் பெறுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும் தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி அன்பர்களே!

வாழ்க்கையில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களைக் கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கினால், நீங்கள் கண்டிப்பாக இதயம் நொறுங்கிப் போகும் அளவுக்கு வலிகளைப் பெறுவீர்கள். பணம் மட்டுமே உங்கள் வாழ்க்கையின் இறுதி இலக்காக இருக்கும்போது, உங்கள் கவனத்தை ‘பணம் சம்பாதிப்பதில்’ இருந்து விலகி உங்கள் திறமைகளை அதிகரிக்கும் செயல்களில் கவனம் செலுத்தவும்.மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில பிரச்சனைகள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று, நீங்கள் சில விஷயங்களால் மிகவும் போராடுகிறீர்கள். நல்ல நபர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். மற்றவர்களிடம் உதவி கேட்பதை, நீங்கள் தவறாக உணர வேண்டாம். நீங்கள் ஒருபோதும் சந்திக்காத நபர்களிடமிருந்து கூட உதவியைப் பெறலாம். அவர்களுக்கு உங்கள் நன்றியை தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். இன்று, குழப்பம், கோபம் போன்றவை ஏற்படுவதற்கு ஒரு பெரிய சூழ்நிலை உள்ளது. உங்களுக்கு எதுவும் சரியாக தெரியாவிட்டால், எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள்.வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஷண்முகக் கடவுளை வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

பல விஷயங்கள் இன்று உங்களைப் பாதிக்கலாம். உங்கள் உணர்ச்சிகள் எல்லா இடங்களிலும் வெளிப்படலாம். மேலும், வாழ்க்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். நீங்கள் தேர்வு செய்தவை மற்றும் முடிவெடுத்தவற்றை வெளிக்காட்டச் சிறிதளவில் நேரத்தைச் செலவிடுங்கள்.

இதன் மூலம், உங்களுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்த கேள்விகளில் சிலவற்றுக்குப் பதில் கிடைக்கச் பெறுவதுடன், உங்களுக்குத் தேவையான தெளிவுகளைத் தரும். உங்கள் மனதைக் கவலையடையச் செய்யும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெறவும். உங்களை விரும்புவாரால் மட்டுமே உங்களுக்காகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும். விநாயகரை வழிபட தடைகள் விலகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

சில நாட்களாக உங்கள் மனதில் அதிருப்தி எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று, அந்த எண்ண ஓட்டங்கள் நின்றுவிடும். உங்கள் விலைமதிப்பற்ற வாழ்க்கையிலிருந்து, கடந்த கால நினைவுகளை வெட்டி விட்டு, பலனளிக்கும் பயணத்தைத் தொடங்குங்கள். ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. எனவே, அவற்றை விட்டு விட முடியாது. இதுபோன்ற மகிழ்ச்சியான இந்த பயணத்தில், காதல் மலர்கிறது. இந்த மாற்றம், பதற்றம் நிறைந்ததாக இருந்தாலும், அது மதிப்புக்குரியது என்பதைக் கவனித்து, மாற்றம் குறித்து விவாதித்துப் புரிந்து கொள்ளுங்கள்.  வேங்கடேசபெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்றைய நாளில், அமைதியான மற்றும் செறிவுமிகுந்த எண்ணங்களால் உங்களது வாழ்க்கை நிறைந்திருக்க வேண்டும். இன்று, உங்களை நீங்களே வழிநடத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு உண்மையிலேயே தேவையானவைகள் தான், உங்களது வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால், வெற்றி மற்றும் அதிர்ஷ்டதிற்கான அலைகள் உங்களது வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கின்றன.பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அம்பிகை வழிபாடு நலம் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.

கன்னி ராசி அன்பர்களே!

கடின உழைப்பு மிகுந்த பலனளிக்கும். எந்த நேரத்திலும் அதன் முடிவுகளை நீங்கள் காண்பீர்கள். உங்களை நீங்களே நிதானமாகப் மாற்றிக் கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதை நீங்கள் வரமாகவே பெற்றுள்ளீர்கள்! உங்களுக்குரிய பயணம் மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புகள் விரைவில் அமையும். அதைச் செயல்படுத்த, சிறந்த முடிவுகளை எடுங்கள். உங்கள் மனதின் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த விடவேண்டாம். தேவைப்பட்டால், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தீராமல் இருந்த பிரச்னை ஒன்று நல்லபடி முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனஅழுத்தமானது உங்களது உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள செரிமான பிரச்சினைகள் மோசமான உணவுப் பழக்கத்தினால் ஏற்பட்டதல்ல. மாறாக, உங்களது மன அழுத்ததினால் ஏற்பட்டதாகும். உங்களுக்கு ஒரு கடினமான நேரத்தை அளிக்க விரும்பும் ஒரு சில நபர்கள் உள்ளனர். நீங்கள் கோவப்படுவதாக உணரும் போது, சிறிது நேரத்திற்கு அந்த இடத்தை விட்டு அகன்று, உங்கள் சொந்த நலனுக்காக வேறு ஏதாவது ஒன்றை நினைத்துப் பாருங்கள். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாக வாய்ப்பு உண்டு.

விருச்சிக ராசி அன்பர்களே!

உங்கள் வாழ்க்கையில், இந்த முடிவை  தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று நீங்கள் உணரலாம். இது உங்களுக்கு மன அழுத்தத்தை மட்டுமே ஏற்படுத்தும். இதற்காகக் கவலை கொள்ள வேண்டாம். இந்த நிலை விரைவில் மாறும். நிகழ்காலத்திலிருந்து தப்பிக்க நீங்கள் முயல்கிறீர்கள், இது நீண்ட நாட்களுக்கு உதவாது. யதார்த்தத்தைத் தைரியமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டும். உங்கள் வாழ்க்கையில் சில புதிய விஷயங்களை முயற்சியுங்கள். பிள்ளைகள் வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் வீண் செலவுகள் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் வணிக அல்லது தொழில் விவகாரங்களை முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டில் கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது. உங்கள் அறிவை மெருகூட்டவும், உடைந்த இணைப்புகளை இணைக்கவும், நீங்கள் முன்னேறும் போது தவறான அடி எடுத்து வைத்து இருப்பதை நிறுத்த இது உதவும். ஆராய்ந்து, உங்கள் மனதைத் திறந்து, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் சரியான பாதையில் செல்லத் தொடங்குவீர்கள்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். விநாயகரை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் பணவரவு உண்டு.

மகர ராசி அன்பர்களே!

உடனடி கவனம் தேவைப்படும் வகையில், உங்களது வீட்டில் சில விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற சில விஷயங்கள் மிக மோசமான நிலைக்குத் திருப்புவதற்கு முன்பு, நீங்கள் அவற்றை விரைவாகச் சமாளிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. ஒரு சிறந்த பந்தம் பற்றிய உங்களது புரிதலானது நடைமுறைக்கு அப்பால் உள்ளது. உண்மைக்குப் புறம்பாக இருப்பது, உங்களை விரக்தியடையச் செய்யும். இது உண்மையான அன்பில் நம்பிக்கையை இழக்கச்செய்யும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட பல வகைகளில் நன்மைகள் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். ஏனென்றால், சில புதிய வாய்ப்புகள் விரைவில் உங்கள் கதவைத் தட்டும். நீங்கள் உடனடியாக வெற்றி பெற்றுவிட மாட்டீர்கள். மாறாக, உங்களை மொத்ததில் ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு, நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உந்திச்செல்ல வேண்டும். நீங்கள் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டால், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆலோசனைகளை கேளுங்கள். இன்று, உங்களின் சமூகத்தொடர்புகள் மிகச்சிறந்த விதத்தில் அதன் பயன்களைப் பெற்றுத்தரும்.  நரசிம்மரை வழிபட கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடம் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மீன ராசி அன்பர்களே!

யாரும் வந்து உங்கள் கதவை தட்டி, உங்களுக்கான மேஜையை போட்டு உங்களை உட்கார வைப்பார்கள் என்று காத்திருக்க வேண்டாம். எல்லா வேலைகளையும் நீங்களே செய்யவேண்டும். நீங்கள் செல்லும் வழியில் நிறைய வாய்ப்புகள் வரும். அதில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும் வாய்ப்பில் சரியானவற்றை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் வழியில் செல்லும் வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது, மற்றவர்ளின் மகிழ்ச்சியை கெடுக்காமல், பார்த்து கொள்ளுங்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க, அற்பத்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் பணவரவு உண்டு.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!