gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (27.5.23)

சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 06.57 மணி வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று இரவு 10.53 மணி வரை மகம் . பின்னர் பூரம். உத்திராடம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனைக்கு உட்படுவீர்கள். ஊழியர்கள் இதே நிலையிலேயே தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள். எலெக்ட்ரிக் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியம் செய்யாதீர்கள். ஏற்றுமதி தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியைத் தவிர்க்கவும்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகி முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் தந்தைவழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். மனையிடம் வாங்குவதும் புதிய வீட்டுக்கு குடி போவதற்குமான ஏற்பாட்டில் இறங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஆர்வத்தோடு செய்து முடிப்பீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்று வீட்டில் சந்தோஷத்தை கொண்டு வருவீர்கள்.அம்பிகை வழிபாடு நன்று.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

ஏற்றமான இருந்த வியாபாரத்தில் சின்ன இடையூறால் பாதிப்படைவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி உடல் அசதியால் அவதிப்படுவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தியை பெறுவீர்கள். உங்களால் உதவி பெற்றவர்கள் தக்க சமயத்தில் திருப்பித் தருவார்கள். புதிய முயற்சிகளால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். குரு வழிபாடு நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேர்வதால் உற்சாகத்தில் திளைப்பீர்கள். உங்கள் அறிவாற்றல் அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். வீடு பூமி போன்றவற்றில் செய்த முதலீடு பல மடங்காகப் பெருகியதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு ஊழியர்கள் அற்புதமான பலனைப் பெறுவீர்கள். மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

பொல்லாங்கு பேசுபவர்களால் மன நிம்மதி இழப்பீர்கள். தொழில்துறைகளை நிதானமாக நடத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மை அடைய மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் நிதானத்துடன் செயல்பட தவறாதீர்கள். ஒப்பந்தக்காரர்களுக்கு வரவேண்டிய பணம் தள்ளிப் போவதால் சிரமப்படுவீர்கள். நியாயத்துக்குப் புறம்பாக நடக்காதீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

கணவன் மனைவி உறவில் நீடித்த சங்கடங்களை கஷ்டப்பட்டு நீக்குவீர்கள். செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். பங்குச் சந்தையில் அதிக பணம் போடாதீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகியிருங்கள். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபார ரீதியான அலைச்சலால் சிரமப்படுவீர்கள். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

துலா ராசி அன்பர்களே!

மற்றவர்களுக்காக நீங்கள் செய்கின்ற வேலைகளை தடங்கல் இல்லாமல் முடிப்பீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். இதுவரை தொழிலில் சிக்கலை ஏற்படுத்திய நெருக்கடிகளை விலக்குவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். அம்பிகை வழிபாடு நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

கடினமான சிக்கல்களை கடந்து செல்வீர்கள். இதுவரை உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகியதால் நிம்மதி அடைவீர்கள். மார்க்கெட்டிங் சேல்ஸ்மேன் என்ற அலைச்சல் மிகுந்த தொழிலில் மாற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைப்பதால் அதை விரிவுபடுத்த எண்ணம் கொள்வீர்கள். தனியார்துறை ஊழியர்கள் வருமானத்தைப் பெருக்கி சேமிப்பை அதிகரிப்பீர்கள்.முருகப்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் புத்திசாலித்தனத்தால் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். பணத்தின் மீது இருந்த மதிப்பை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். இடுப்பு வலி மூட்டு வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுவீர்கள். தந்தைவழி உறவுகளால் சண்டை சச்சரவுகளை சந்திப்பீர்கள்.
துர்கை அம்மனை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்பட தவறாதீர்கள். வருமானத்திற்காக இடம் விட்டு இடம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடந்தால் அமைதியை அனுபவிப்பீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தவறி நடக்காதீர்கள். இன்று காலபைரவரை வழிபடுவது நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் பிள்ளைகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கும்பராசி அன்பர்களே!

தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு வந்து மருத்துவ சிகிச்சையால் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். இல்லத்தரசிகள் தெய்வ வழிபாட்டால் கணவர்களுக்கு இருந்த உடல் பாதிப்பு அகல பாடுபடுவார்கள். அரசுப் பணியாளர்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். பயணங்களில் கவனத்தை சிதற விடாதீர்கள்.தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

மீன ராசி அன்பர்களே!

வியாபாரத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்களை அகற்றுவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கணிசமான பலன் பெறுவீர்கள். ஒர்க் ஷாப், எலக்ட்ரீசியன், கொத்தனார்கள் தொடர்ந்து வேலை செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். அரசுத் துறையில் நல்ல ஒத்துழைப்பை அடைவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி பெறுவீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையால் அசதி ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவது தாமதமாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!