Cinema Entertainment

வாரிசு விழாவில் விஜய் நடந்து கொண்ட விதம்..ஷோபா சந்திரசேகர் விளக்கம்




வாரிசு விழாவில் விஜய் அவரது தாய் தந்தையிடம் நடந்துகொண்ட விதம் சரியில்லை என விமர்சனம் எழுந்தது. எனவே இதுகுறித்து விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் விஜய் எது செய்தாலும் அது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. விஜய் காரில் வந்தாலோ, சைக்கிளில் வந்தாலோ அதுகூட சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் அவரின் படங்கள் வெளியாகும் போது அவர் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி நாம் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை.

 

அந்த வகையில் சமீபத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவரின் தாய் தந்தையிடம் நடந்துகொண்ட விதம் சரியில்லை என சிலர் கருத்துக்களை கூறி வந்தனர். விஜய் வாரிசு விழாவில் அவரின் தாய் மற்றும் தந்தையை சரியாக கவனிக்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என்று ஒரு கூட்டம் விமர்சித்தது.




இதைவைத்து பல கதைகள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில் இதுகுறித்து விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, வாரிசு விழா விஜய்யின் ரசிகர்களுக்காக நடத்தப்பட்டது. விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக அந்த விழா நடத்தப்பட்டது. நாங்களும் விஜய்யின் ரசிகர்களை பார்த்து, அவர்கள் விஜய்யின் மீது வைத்துள்ள அன்பை பார்த்து ஆச்சர்யப்பட்டோம்.

ஒரு குடும்ப விழா என்றால் குடும்பத்தை சார்ந்தவர்களை கவனிக்காமல், விழாவிற்கு வந்தவர்களை தான் கவனிப்போம். அதே போல தான் விஜய்யை காண வந்த ரசிகர்களை திருப்திப்படுத்துவதே எங்களின் நோக்கமே தவிர விஜய் எங்களை கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணமே எங்களுக்கு இல்லை.

இதெல்லாம் தேவையில்லாமல் பரவும் வதந்திதான். இருப்பினும் அந்த வதந்திக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஒரு விஷயம் உண்மையாக இல்லாத பட்சத்தில் அந்த விஷயத்திற்கு ஏன் தேவையில்லாமல் பதிலளிக்க வேண்டும் என அதை நாங்கள் கண்டுகொள்ளாது கடந்து விட்டோம் என்றார் ஷோபா சந்திரசேகர். இந்நிலையில் பல நாட்களாக பரவி வந்த வதந்திக்கு ஷோபா சந்திரசேகர் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!