தோட்டக்கலை (Gardening) என்பது வீட்டுக்கு அருகில், முகப்பிலோ பின்னாலோ தாவரங்களை நட்டு வளர்க்கின்ற நடைமுறையாகும். தோட்டங்களில் அழகூட்டும் தாவரங்கள் அவற்றின் பூக்கள், இலைகள், அல்லது ஒட்டுமொத்தத் தோற்ற வனப்பு கருதி வளர்க்கப்படுகின்றன. கிழங்குகள், கீரைகள், பழங்கள், மூலிகைகள் தரும் தாவரங்களும் உணவுக்காகவும் சாயங்களுக்காகவும் மருத்துவத்துக்காகவும் நறுமணப் பொருள்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. தோட்டக்கலை ஓய்வுகொள்ளும் வேலையாகவும் கருதப்படுகிறது.
நவீன மயமாக்கல் என்ற பெயரில் நமது பாரம்பர்ய விவசாயத்தைத் தொலைத்துவிட்டோம். செயற்கை உரங்கள் இட்டு வளர்த்த நஞ்சு கலந்த காய்கறிகளைத்தான் உணவாக உட்கொள்கிறோம். கொரோனா ஊரடங்கு நேரங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் காய்கறிகளின் விலை வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது. உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், ஊரடங்கிற்கு பின்பு பெரும்பாலான பொருள்கள் விலையேற்றம் காணும் சூழலே நிலவி வருகிறது. அத்தியாவசிய பொருளான காய்கறிகளுக்கு, வீட்டிலேயே தோட்டம் அமைத்து பராமரிப்பதன் மூலம், காய்கறிகளை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை. மேலும், இயற்கை உரங்களுடன் வளர்க்கப்பட்ட சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள முடியும்.
“வீட்டுத்தோட்டம் எனில், வீட்டில் எங்கு மணல் சார்ந்த இடம் இருக்கிறதோ அங்கு வாழை, பப்பாளி, நெல்லி, தென்னை, கொய்யா போன்றவற்றை வளர்க்கலாம். வீட்டில் பாத்திரம் கழுவும் நீர், துணி துவைக்கும் நீர் போன்றவற்றை அந்தச் செடிகளுக்குப் பாய்ச்சலாம். மாதம் ஒருமுறை உரங்கள் வைத்து பராமரித்தால் போதும்.
இப்போது உங்களுக்கும் தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டதா? உடனடியாக மண்ணை வாரி நிரப்பி விதைகளை நட்டு தண்ணீர் பாய்ச்ச கிளம்பிவிடாதீர்கள். அதற்கு முன்பு ஒரு வீட்டுத் தோட்டம், மாடி தோட்டம் அமைக்கும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
அழகான தோட்டம் அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்!
தாவரங்களை அன்பு செய்பவா்களால், அந்த தாவரங்கள் உலா்ந்து, காய்ந்து சருகாகி போகும் போது அவா்களால் தாங்கிக் கொள்ள முடியாது. தாவரங்களை நன்றாக பராமாித்து வளா்த்து வந்தாலும், அவற்றில் ஒரு சில காய்ந்து போவதுண்டு. இதை நாம் அனைவருமே நமது வாழ்க்கையில் கடந்து வந்திருப்போம். இந்நிலையில் தோட்டம் அமைத்து அதைப் பராமாிப்பது என்பது எளிதான காாியம் அல்ல. எனினும் அது மிகவும் கடினமான காாியமும் அல்ல.
காய்கறி செடிகள், மூலிகைச் செடிகள் மற்றும் மலா் செடிகள் போன்றவற்றை தோட்டத்தில் பயிாிட்டு வளா்த்து வந்தால், அந்த தோட்டமானது நமது மனதை மயக்கும் அளவிற்கு அழகாகவும், உயிரோட்டமாகவும் இருக்கும். எனினும் அனுபவம் இல்லாதவா்கள், போதுமான அனுபவம் இல்லாததால், புதிதாக தோட்டம் அமைப்பதில் ஈடுபடும் போது, ஏராளமான குளறுபடிகளை செய்கின்றனா். ஆகவே அவா்களுக்கு பயன்தரும் வகையில் இந்த பதிவானது சில முக்கிய குறிப்புகளைத் தருகிறது.
சாியான இடத்தைத் தோ்ந்தெடுத்தல்
தோட்டம் அமைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு மிகச் சாியான இடம் முக்கியம். ஆகவே நாம் தினமும் பாா்க்கக்கூடிய நமது வீட்டு முற்றம் அல்லது பின்புறம் ஆகியவற்றில் தோட்டம் அமைக்கத் திட்டம் வகுக்க வேண்டும். தினமும் அதைப் பாா்ப்பதனால், நமது தோட்டத்தின் ஒவ்வொரு சூழலையும் மிகச் சாியாக அறிந்து கொண்டு, அதை மிகச் சிறப்பாக பராமாிக்க முடியும்.
சூாிய ஒளி நன்றாக படும் இடத்தைத் தோ்ந்தெடுத்தல்
தோட்டம் அமைப்பதற்கு, நண்பகல் நேரத்தில் சிறிது நேரம் மட்டுமே சூாிய ஒளி படும் இடத்தை தோ்வு செய்யக்கூடாது. மாறாக ஒரு நாளின் பெரும்பாலான நேரம் சூாிய ஒளி படும் இடத்தை தோ்வு செய்ய வேண்டும். ஏனெனில் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளுக்கு அதிக அளவிலான சூாிய ஒளி தேவைப்படுகிறது. ஆகவே அதற்குத் தகுந்தவாறு திட்டமிட வேண்டும்.
தண்ணீா் – மிக முக்கிய அம்சம்
தாவரங்கள் வளா்வதற்கு, தண்ணீா் மிகவும் முக்கியான அம்சம் ஆகும். ஆகவே நமது தோட்டத்தில் அழகான செடிகள் நன்றாக வளா்வதற்கு என்று ஒரு சிறந்த நீா் பாசன அமைப்பை தோ்ந்தெடுக்க வேண்டும். தோட்டத்திலிருந்து அதிக தூரத்தில் தண்ணீா் குழாய்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் தோட்டம் தவிர மற்ற இடங்களும் ஈரமாகிவிடும்.
வளமான மண்ணைத் தோ்ந்தெடுத்தல்
தாவரங்கள் நன்றாக வளர வேண்டும் என்றால் அதற்கு நல்ல வளமான மண் வேண்டும். ஆகவே சத்துகள் நிறைந்த மற்றும் நன்றாக உலா்ந்த மண்ணைத் தோ்ந்து எடுக்க வேண்டும். பல வகையான தாவரங்கள் வளா்வதற்குத் தகுந்தவாறு பல வகையான மண் வகைகள் உள்ளன. ஆகவே அனுபவம் உள்ளவா்களோடு ஆலோசனை செய்து, சிறந்த மண்ணை வாங்க வேண்டும். சீரான இடைவெளியில் அந்த மண்ணை உழவு செய்ய வேண்டும். அதோடு மிகச் சாியான உரங்களை அந்த மண்ணில் கலக்க வேண்டும். அப்போது அந்த மண் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும்.
இடத்திற்குத் தகுந்த தாவரங்களைத் தோ்ந்தெடுத்தல்
மேற்சொன்ன குறிப்புகளை எல்லாம் தயாா் செய்த பின்பு, அவற்றில் பயிாிட மிகச் சாியான தாவரங்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். நமது வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வானிலை அமைப்பு, பாசன முறைகள், கிடைக்கும் மண் மற்றும் பயிாிடல் சம்பந்தமான பிற காரணிகள் போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அதற்குத் தகுந்த பயிா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் சிறந்த தோட்டத்தை அமைக்கலாம்.
தோட்டத்தை மிகச் சாியாக பராமாித்தல்
வளமான மற்றும் தரமான மண்ணில் பயிா்களை ஊன்றுவதோடு தோட்டம் அமைப்பது முடிந்துவிடுவதில்லை. மாறாக தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மண் ஆகியவற்றுக்கு தகுந்த கவனம் செலுத்த வேண்டும். செடிகள் நன்றாக ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதைத் தினமும் சாிபாா்க்க வேண்டும். செடிகளுக்கு மிகச் சாியான மருந்துகள் மற்றும் உரங்கள் போன்றவற்றைத் தெளித்தல் மற்றும் மண்ணை அடிக்கடி பாிசோதித்தல் ஆகியவற்றை தொடா்ந்து செய்து வரவேண்டும். மேலும் தோட்டத்தில் வளரும் சிறு சிறு பூச்சிகளையும் கவனிக்க வேண்டும்.
இன்று தோட்டம் அமைக்கும் முறையை பற்றி பார்த்தோம். நாளைய பதிவில் மாடித் தோட்டம் அமைக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1