Cinema Entertainment

 ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா..பின்னணி என்ன ?

 ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா..பின்னணி என்ன ? வெளியான உண்மை காரணம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்துகொண்டிருக்கின்றார் ரஜினி. குணச்சித்திர நடிகராக தன் திரைப்பயணத்தை துவங்கிய ரஜினி பிறகு வில்லனாக சில படங்களில் நடித்தார். அதன் பின் மெல்ல மெல்ல ஹீரோவாக நடிக்க துவங்கிய ரஜினியை ரசிகர்கள் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றனர்.




ரஜினி தொட்டதெல்லாம் ஹிட்டடிக்க சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார். அதன் பிறகு அந்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை இன்றுவரை தன்வசப்படுத்தியுள்ளார் ரஜினி. இந்நிலையில் தற்போது தொடர் தோல்விகளினால் சறுக்கல்களை சந்தித்து வரும் ரஜினி ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கின்றார்.

மேலும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ரஜினி கமிட்டாகி வருகின்றார். இதைத்தொடர்ந்து இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால் அவரை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்றாக ரஜினியின் பில்லா திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க மறுத்ததற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.




அதாவது ரஜினி பரபரப்பான நடிகராக வலம் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் பில்லா திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில் ரஜினியுடன் நடிக்க பல நாயகிகள் போட்டிபோட்டு வந்தனர். அப்போது தான் பில்லா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்காக ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெயலலிதா அந்த காலகட்டத்தில் மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்த துவங்கினார். அதன் காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அப்போது ஒரு பத்திரிகையில் ஜெயலலிதாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை, அதன் காரணமாக தான் அவர் படங்களில் நடிப்பதில்லை என ஒரு செய்தி வந்திருந்தது.

இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, நான் அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் தான் படங்களில் நடிப்பதில்லை. சமீபத்தில் கூட ரஜினியுடன் பில்லா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அரசியலில் ஈடுபட்டு வருவதால் நான் அப்படத்தில் நடிக்கவில்லை.

படங்களில் நடித்து தான் நான் ராணியாக வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்படி வாழ்ந்தாலும் நான் ராணி தான் என பத்திரிகையில் வந்த அந்த செய்திக்கு பதிலடி கொடுத்திருந்தார் ஜெயலலிதா. இதன் மூலம் அந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.




What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!