Author's Wall Coming Soon Serial Stories

Coming Soon

 

எனது அடுத்த குடும்ப நாவல் இப்போது உங்கள் ஊர் கடைகளில் கிடைக்கிறது

 

” நந்தா  மலேசியாவில் எதுவும் படத்தில்ஹீரோவாக  நடித்தாயா …? “

” ஏன்டா அப்படி கேட்கிறாய்…? “

” அப்படியே சினிமா ஹீரோ போலவே இருக்கிறாய்டா .எப்படிடா இப்படி அழகாக மாறினாய் …? “

ஒல்லியாய் ஒட்டடை குச்சி போல்உடலும் ,  வளர்ந்தும் வளராத மீசையோடு , பழுப்பு நிறத்தோடும் எந்நேரமும் பரபரவென கண்களை சுற்றிக் கொண்டிருக்கும் தங்கள் பழைய நண்பனா இவன் …என்ற சந்தேகம் அங்கிருந்த அனைவருக்குமே இருந்த்து .

” கொஞ்சம் சதை போட்டிருக்கேன்டா .அவ்வளவுதான் ….” சொன்னபடி நந்தகுமார் அவனது பாக்கெட்டிலிருந்து எடுத்து பற்ற வைத்த சிகரெட்டை பார்த்து நண்பர்களின் கண்கள் விரிந்தன .

” பாரின் சிகரெட்டுடா …”

” என்னா ஸ்மெல் பார்த்தியா …? ” ஆளாளுக்கு கிசுகிசுக்க நந்தகுமார் சிகரெட் பாக்கெட்டை அவர்களிடம் நீட்டினான் .” எடுத்துக்கோங்கடா “

ஆளாளுக்கு அடித்து பிடித்து சிகரெட்டை உருவினர் .


” ஏய் வாயை மூடுடி “




” முடியாது ” திட்டவட்டமாக அறிவித்தவள் ” அம்மா அண்ணன் இன்னைக்கு அவன் ப்ரெண்ட்ஸோட சேர்ந்து …” என மீண்டும் ஆரம்பித்து விட்டு உச்சந்தலையில் மிக அழுத்தமான கொட்டு ஒன்றை வாங்கினாள் .

ஒரு கணம் மூளை கலங்கியதோ என்ற சந்தேகத்தில் விழுந்து பின் எழுந்து …தெளிந்து தன் உச்சந்தலையை தடவி பார்த்து ” விண் ” என்ற வலியை உணர்ந்து ” அம்மா ” என்று அலறினாள் .

” இந்த வெட்டிப்பய இன்னைக்கு டீக்கடையில் உட்காரந்து …” மேலே பேசும் முன் அவள் வாயை அழுத்தமாக பொத்தினான் முரளி .முடிந்தால் அப்படியே கையை கொஞ்சம் நகர்த்தி தங்கையின் மூக்கையும் சேர்த்து பொத்தி அவள் மூச்சை நிறுத்தும் ஐடியாவும் அவனுக்கிருந்த்து .

” டேய்  என்னடா பண்ற …? பொம்பளை பிள்ளைகிட்ட உன் வீரத்தை காட்டுற …? கையை எடுடா …” செண்பகம் கத்தியபடி உள்ளருந்து வந்து முரளியின் முதுகில் ஒன்று போட்டாள் .அவன் சுரீரென்ற முதுகை பிடித்தபடி ஆ என நெளிய , அவனிடமிருந்து விடுபட்ட தன் வாயை சந்தோசமாக திறந்தாள் ராகவி .


” கண்ணா …வெண்மை நிற கண்ணா …உன்னைக் காணாத கண்ணில்லையே …” வானத்தை அண்ணாந்து பார்த்தபடி பாடிக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் நறுக் நறுக்கென மாறி மாறி கிள்ளினாள் ராகவி .

” அம்மா தாயே மீரா பாயே …உன் கண்ணனை விட்டு நிகழ்வுக்கு வா …”

” வேண்டாம் ராகவி .என்னை மீரா என்று சொல்லாதே .அவள் விதியின் சதியால் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டவள் .சொல்வதானால் கோதை ,ராதை இப்படி யாரையாவது சொல் .சை எங்க  அம்மா அப்பா எனக்கு கீதான்னு பெயர் வைத்ததற்கு பதிலாக ராதான்னு வச்சிருக்க கூடாதா …? என் நந்தனுக்கு எற்ற ராதையாக நான் இருந்திருப்பேனே …”

ராகவிக்கு தோழியை அடிக்கும் எண்ணம் வரவில்லை . பதிலாக தன் தலையை அந்த கருங்கல் சுவரின் மீது மடார் மடாரென மோதும் எண்ணம் வந்த்து .இவளை மாதிரி ஜொள்ளிகளை எல்லாம் இனி உன் வேலை துணைக்கு கூப்பிடுவாயா …கூப்படுவாயா …தன் ஆட்காட்டியை தன் நெஞ்சுக்கு நேராகவே திருப்பிக் கேட்டுக் கொண்டவள் கீதாவின் கையை அழுத்திப் பற்றினாள் .

” அடியேய் உளர்றதை நிறுத்திட்டு கவனி .உன் கொலுசை முதலில் கழட்டி உன் பேக்குக்குள் போடு .சத்தமில்லாமல் என் பின்னால் வரனும் .நான் ஏறுகிற இடத்தில் ஏறனும் …இறங்குகிற இடத்தில் இறங்கனும் சரியா ..? “

தஞ்சாவூர் பொம்மையை நகலெடுத்த கீதா ” எனக்கு கொஞ்சம் பயமாயிருக்குடி ” என்றாள் .

” எதுக்குடி பயப்படனும் ..? நாம் என்ன திருடவா போகிறோம் …? ” தலையுயர்த்தி நிமிர்வாய் சொல்லி விட்டு …” அதோ அந்த இடத்தில் சுவரில்  சின்ன பள்ளம் இருக்கும் .அதில் காலை வைத்து எம்பி ஏறனும் …” என்று ராகவி சொல்லிக் கொடுத்த அடுத்த  வீட்டுக்குள் அரவமில்லாமல் நுழையும்    வழி திருட்டோடு சேர்த்தி கிடையாதா …குழம்பினாள் கீதா .


பிரம்ம கமலம் பூ பார்க்க வந்தாயாக்கும் ..? ” கிசுகிசுப்பாய்  கேட்டவன் நந்தகுமார் .

ராகவி அவனை நிமிர்ந்து பார்க்க இருளில் அவன் கண்கள் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருந்தன .ஒரு கையால் அவள் வாயை பொத்தியிருந்தவன் ,மறு கையால் அவளை முழுக்க வளைத்து தன் மிக அருகே இருத்திக் கொண்டிருந்தான் .அவன் உடலோடு உராய்ந்தபடியிருந்த தன் உடலை உணர்ந்து கலவரமடைந்த ராகவி அவன் மார்பில் இரு கையையும் பதித்து தள்ளினாள் .

” விடுங்க என்னை …” மூடப்பட்ட வாய்க்குள் முயன்று இதழசைத்தாள் .அவன் இன்னமும் அழுத்தமாக தன் உள்ளங்கையை அவள் இதழ்களின் மேல் தேய்த்து ஸ்பரிசித்தான் .

” விட்டா ஓடிடுவியே …”

இம்மியும் அசைய முடியாத தன் இதழ்களில் பரிதாபமாக அவனை பார்த்தாள் .நந்தகுமார் மிக நேராக அவள் விழிகளை சந்தித்தான் .” உன் லிப்ஸ் எவ்வளவு சாப்டாக இருக்குது …? ” சொக்கல் குரலில் தன் கையை அவள் இதழ்களில் மேலும் அழுத்தினான்.

ராகவி தன்னை அநாதரவாக உணர்ந்தாள் .இவன் விசயத்தில் எப்போதும் அவள் நிலைமை இப்படித்தானா …? அவள் கண்களின் வேதனை சாயலை உணர்ந்து கொண்டானோ …என்னவோ …மெல்ல தன் பிடியை தளர்த்தினான் .

—————————–

தண்ணீர் ட்யூப்பை அம்மா போன திசையில்  தூக்கி எறியும் வேகத்தோடு உயர்ந்த ராகவியின் கைகள் அப்படியே உறைந்து நின்றன…” ஏய் என்ன பண்ண போகிறாய் ..? ” என்ற அதட்டல் கேட்டு .

தூங்கி எழுந்து விட்டேனா …இல்லை இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறேனா …ராகவி  தன்னை தானே கிள்ளி விட்டுக் கொண்டாள் .கனவில்தானே அவன் அதட்டிக் கொண்டிருந்தான் …என்ற சந்தேகம் அவளுக்கு .

” இங்கே உனக்கு எதிரில்தான் நின்று …நானேதான் பேசிக் கொண்டிருக்கிறேன் …” வீட்டிற்கு வெளியே கேட்ட நந்தகுமாரின் சத்தத்திற்கு எட்டிப் பார்த்து ” ஙே ” என விழித்தாள் .

” ஒரு சின்ன வேலை பார்ப்பதற்கு எதற்கு உனக்கிந்த ஆவேசம் …? “

போடா …டேய் …பெரிய இவன் .சொல்ல வந்துட்டான் …ராகவியின் கணகள் கீழே கிடந்த கற்களில் பதிய , நந்தகுமார் முறைத்தான் .

” ஏய் அடங்குடி .முன்னால் எல்லா செடிகளுக்கும் முடித்து விட்டு , பின்பக்க செடிகளுக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும் .ம் …சீக்கிரம் .அப்படியே உன் அண்ணனை வரச் சொல்லு …”

அவனது அதிகார வேலை ஏவலில் வெகுண்டிருந்தவள்  அண்ணனை பேசியதும் சுதாரித்தாள் .




 

” எந்நேரமும் அண்ணனிடம் என்ன ரகசிய பேச்சு …? அவனை ஏதோ மிரட்டுகிறீர்களோ …? “

” ஆமாம் அவனை மிரட்டி …அவன் பேரில் இருக்கிற ஐம்பது லடச ருபாய் சொத்தை என் பெயருக்கு மாற்ற போகிறேன் .போடி …போ …அவனை கூப்பிடு …”

” அதென்ன எப்போது பார்த்தாலும் ” டி ” …? ” ராகவி கை டியூபை கீழே எறிந்து விட்டு தன் வீட்டு வாசல் தாண்டி தெருவிற்கு வந்தாள் .வீட்டு காம்பவுண்ட் சுவர் மேல் வைத்திருந்த டேபிள் ரோஜா செடி தொட்டியை ஓரக் கண்ணால் கவனித்து வைத்துக் கொண்டாள் .மண்டை உடையாவிட்டாலும் லேசான பொத்தலாவது விழாது …? மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டாள் .

ஆவேச மூச்சு வாங்கலுடன் தன் முன் வந்து நின்றவளை ஏற இறங்க பார்த்தவன் , ” காலங்கார்த்தாலே பல்லு கூட விளக்காமல் …இப்படி நடுத்தெருவில் வந்து கழுதை சுமக்கும் மூட்டையாக நிற்கிறாயே ..? கூச்சமாக இல்லை  …? ”

——————–

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Rajalakshmi
Rajalakshmi
5 years ago

Nan vangitaen mam

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!