health benefits

சுளுக்கு பிடிச்சா இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க…

நம்முடைய உடலில் உள்ள தசைகள் நம்முடைய ஏதாவது சில திடீர் செயல்பாடுகளினால் விரிவடைய ஆரம்பிக்கும். அப்போது நரம்பும் தசையும் சேர்ந்திருக்கிற இடத்தில் விரிவடைகிறபோது தான் சுளுக்கு ஏற்படுகிறது. அதை எப்படி மிக எளிதாக சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்.

தசைகளில் சுளுக்கு ஏற்படுகிற போது, அது வெறும் தசையை மட்டுமே பாதிப்பது இல்லை. உள்ளுக்குள எலும்புகளையும் சேர்த்தே பாதிக்கும். ஏனெனில் நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதனால் சுளுக்கு என்பது வெறுமனே தசை மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல.

நாம் கை, காலை எங்காவது தேவையில்லாமல் அசைக்கும்போது, திரும்பிப் படுக்கும்போது, காயங்கள் ஏற்படும் போது சுளுக்கு ஏற்படுவது இயல்பானது.

அதேசமயம் கால்சியம் மற்றும் பொடடாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உடலில் குறைபாடு ஏற்படும்போது திசக்கள் சோர்வடைந்து உடலில் சுளுக்கு உண்டாகும்.

ஓடி, சுறுசுறுப்பாக உடல் ரீதியாக வேலை எதுவும் செய்யாமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்களுக்கு அதிகமாக சுளுக்கு ஏற்படும்.

உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு சுளுக்கு அடிக்கடி ஏற்படும்.

​மருந்துகள்

தசைப்பிடிப்பு மற்றும் சுளுக்கை சரிசெய்ய ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் நிறைய இருக்கின்றன.ஆனால் எந்த செலவும் இல்லாமல் மிக எளிமையாக வீட்டிலேயே சுளுக்கை சரிசெய்ய நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய சில வீட்டு வைத்திய முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

​கற்றாழை ஜெல்

சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தசைப்பிடிப்பு நீங்கும். ஆயுர்வேதத்தில் தசை பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு மிக முக்கிய மருந்துகளில் கற்றாழை சேர்க்கப்படுகிறது.

​கிராம்பு எண்ணெய்

சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் சிறிது கிராம்பு எண்ணெயைத் தடவி, மசாஜ் செய்து வந்தால் சுளுக்குப் பிடித்த இடத்திலுள்ள வலி குறையும்.

ஒரு நாளைக்குத் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை கிராம்பு எண்ணெயைப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர, சுளுக்கு விரைவில் சரியாகும்.

வெங்காயம்

 

வெங்காயம் மிகச்சிறந்த வலி நிவாரணி என்பது உங்களுக்குத் தெரியுமா? வெங்காயம் தசைகளில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும்.

குறிப்பாக, கணுக்கால் மற்றும் பாதங்களில் எற்படும் சுளுக்கு நடக்க முடியாமல் பெரிய தொந்தரவு கொடுக்கும். அதுபோன்ற சுளுக்கை கூட வெங்காயம் சரிசெய்து விடும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு சுத்தமான துணியில் வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் நன்கு இறுக்கமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அந்த வெங்காயத்தின் சாறு பாதிக்கப்பட்ட இடத்தில் படுமாறு வைத்திருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம். ஒரு முறை செய்யும்போது 3 மணி நேரம் வரை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வைத்திருக்கலாம்.

உப்பு

கடல் உப்பு தசை வலி மற்றும் தசை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

கடல் உப்பில் உள்ள அதிக அளவிலான மக்னீசியம் தசை வலி மற்றும் சுளுக்கு போன்றவற்றைச் சரிசெய்யும் தன்மை கொண்டது.

உடல் வலியைப் போக்கும் தன்மை கொண்டதால் தான் நம் முன்னோர்கள் குளிக்கும் நீரில் கல் உப்பைப் போட்டு குளித்திருக்கிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!