அழகுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிகப்பெரிய தவறு. ஆண்கள் அழகின் மீது அதிகம் கவனம் செலுத்துவதில்லை..அது ஏன் என்றும் புரியவில்லை… ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள் தான் வெயில்,மழை,தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கறை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை. வீட்டிலே செய்யும் சில சிம்பிளான இந்த அழகு குறிப்புகளை வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்..
-
பப்பாளி பழத்தை தினமும் முகத்தில் தடவி கொஞ்ச நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவினால் முகம் நல்ல பொலிவுடன் பளபளப்பாக இருக்கும்.
-
கண் கருவளையம் உள்ள ஆண்கள் கருவளையம் போக வாழைப்பழ தோலின் உள் பகுதியை கண்களுக்கு மேலே ஒரு பத்து நிமிடங்கள் வைக்கவும். அப்படி இல்லை என்றால் தோலின் உள் பகுதியை எடுத்து கண்களுக்கு அடியில் வைத்து மசாஜ் பண்ணுங்க.
-
சில ஆண்களுக்கு முகத்தில் தோன்றும் கொப்புளங்களை நீக்க ஆரஞ்சு பழ தோல் ரொம்ப உதவியாக இருக்கும். ஆரஞ்சு பழ தோலை கொப்புளம் உள்ள இடத்தில் நன்கு தேய்த்தால் கொப்புளம் சீக்கிரமாக மறைந்து விடும்.
-
முகம் சோர்வு அடையாமல் இருக்க அடிக்கடி முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1