தை மாதத்தின் முதல் நாள் தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று அனைவரும் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடுவர். பெண்கள் வீட்டு வாசலில், பொங்கல் வைக்கும் இடத்திலும் வர்ண கோலங்கள் போட்டு அழகுபடுத்துவர்.
கோலத்திற்கு நடுவில் அடுப்பு கூட்டி புதுப்பானை வைத்து, அதனை சுற்றி மஞ்சள் கொத்து கட்டி, அதில் சர்க்கரை பொங்கல் வைப்பர். பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என்று சொல்லும் வழக்கம்
உண்டு. அதன் பிறகு படையல் போடுவதற்கு வாழை இலை விரித்து அதன் மேல் மண் விளக்கேற்றி, சாணத்தில் பிள்ளையார் செய்து வைத்து, புது தானியங்கள், புது காய்கறிகள், மற்றும் கரும்பு வைத்து பூஜை செய்வர். பூஜை முடிந்ததும் உறவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொங்கலை உண்பர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1